புதன், மே 25, 2011

கருணாநிதி பேட்டியும் பின்னே என்னோட டவுட்டும்

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

டவுட்டு :  இதுவரை படிச்சா மாணவர்கள் எல்லாம் என்ன நடுத்தெருவிலயா நிக்கிறாங்க?

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

டவுட்டு :  அப்புறம் என்னாத்துக்கு மத்தவங்கள மட்டும் சந்திச்சாராமா?



கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

டவுட்டு :  வேற என்னன்ன எதிர்பார்த்துக்கிட்டு இருக்காறோ? 


கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

டவுட்டு :  ரைட்டு,  ஆனா கேட்கும் போது கரெக்ட்-அ குடுத்துடுவீங்களா?



கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

டவுட்டு :  இன்னும் 4 வருஷம் கழிச்சு பண்ணலாம், இப்போ செய்ய வேண்டிய வேலை வேற இருக்குனு சொல்றாரோ?  


கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

டவுட்டு :  எது உங்க பிறந்தநாளை சிறப்பா கொண்டாடுறதா? 



கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

டவுட்டு :  என்ன பிரயோஜனம், ஏற்கனவே முழி பிதுங்குற அளவுக்கு பீஸ ஏத்தி  விட்டுட்டீங்க


கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

டவுட்டு :  புரியலியே, அப்ப உங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு மட்டும் ஏதாவது நலத்திட்டம் கட்சியில இருந்து செய்ய போறீங்களா? 

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_3415.html Vote for some Comedy Video

Unknown சொன்னது…

@மதுரை

ஹா ஹா ஹா உங்க லிங்க பார்த்தேன் நீங்க ஒரு காமெடி டெரர்ன்னு நிரூபிச்சுட்டீங்க

மு.சரவணக்குமார் சொன்னது…

செத்த பாம்பை அடிச்சு வீரனாக பாக்கறீங்க போல...எவ்ளோவ் அடிச்சாலும் செத்த பாம்பு செத்த பாம்புதான்!

Unknown சொன்னது…

@மு.சரவணக்குமார்

வருகைக்கு நன்றி நண்பரே, உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை, இவரை அடித்தால் தான் வீரம் என்றால் அந்த வீரம் எனக்கு தேவை இல்லை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haa haa பதிவு செம .. டைட்டில்ல ரிவிட்டு சேர்த்திருக்கலாம்

Unknown சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி அண்ணே, ஆனா அவரு வயசுக்கு இப்பிடி எல்லாம் போடலாமா அண்ணே, திட்டினாலும், கொஞ்சம் பணிவா திட்டிவோம் சரியா நான் சொல்றது