திங்கள், டிசம்பர் 26, 2011

ஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....

இப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத பல நிகழ்வுகளின் கோர்வையாய் நம்மை பிரிய இருக்கிறது 2011. பல சுகமான நிகழ்வுகள், பல சோகமான நிகழ்வுகள், எல்லாம் முடிஞ்சு போனது ஆனாலும் நம் தவறுகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், இல்லேன்னா ஒரு தடவை செய்த தவறுகளை மீண்டும் செய்ய நேரிடலாம்.   

இந்த உலகில் நாம் அடிமையான விஷயங்கள் நிறைய உள்ளன மது, நிகோடின், ஹெராயின், பாலியல், மற்றும்  ஐபோன்கள்.  இதை எல்லாம் விட மிக பெரிய போதை நமது சொந்த கருத்துக்களுக்கு நாமே அடிமையாகி உள்ளது. நாம் சொல்வது தான் சரி என்று நினைக்க ஆரம்பிக்கும் போதே இந்த போதை துவங்குகிறது. 

சிறந்த உதாரணம் அன்னா ஹசாரேன்னு ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலை. இதுவரை அவர் இந்த வருஷம் நிறைய வாட்டி உண்ணாவிரதம் இருந்துட்டார், நாளைக்கு கூட உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறார், அவர் நினைக்கிறது எல்லாம் நடக்கணும்ன்னு அவர் நினைக்கிறது அவருக்கு சரியா இருக்கலாம் ஆனா நடைமுறைக்கு சாத்தியம் தானான்னு யோசிச்சா அது என்னவோ ஒத்து வராதுன்னு தோணுது.

லஞ்சம் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்ன்னு சொல்றாரு, ஆனா அதுக்கு லஞ்சம் வாங்காம இருந்தாலோ இல்ல நாம லஞ்சம் குடுக்கமா இருந்தாலோ மட்டும் முடியுமா? இந்த பிரச்சனையோட ஆணிவேர் வேற, வேர்ல இருக்க கோளாரை சரி செய்யாம கிளையில இருக்கிற பிரச்சனைக்கு மருந்து தேடுவது புத்திசாலித்தனமா செயலா இருக்காதுங்கிறது என்னோட எண்ணம்.

சின்ன உதாரணம் சொல்றேனே, இப்போ எல்லாம் டியூஷனுக்கு வர்ற பசங்களுக்கு நிறைய மார்க் போடுற ஆசிரியர்கள் எத்தனை பேர்? ஏன் பண்ணுறாங்கன்னு யோசிச்சா அப்படி செஞ்சா தானே பசங்க டியூசனுக்கு வருவாங்க? அப்போ தானே வருமானம் வரும். இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரோட பொருளாதார சூழ்நிலையே நிர்ணையிக்குது. சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அதாவது ஒருவருடைய பொருளாதார சூழ்நிலையே இதுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளி,

இதுக்கு தீர்வு தான் என்ன, ஒண்ணும் கிடையாது, நான் யோசிச்ச வரையில. அல்லது அது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்னா நம்ம மக்கள் தொகை அப்பிடி, எல்லோருக்கும் கல்வி இலவசமா கொடுக்கணும், மருத்துவம் இலவசமா கொடுக்கணும் இது ரெண்டு தான் நம்ம கிட்ட ஒரே வழி. இது இரண்டுக்கும் தான் வாழ்நாள் சேமிப்பை கரைக்கும் சக்தி உண்டு. இதை எல்லாம் அரசு செய்ய முடியாதான்னு கேக்குறீங்களா? செய்யுறதுக்கும் பணம் வேணுமே? வரி அப்பிடின்கிற பேர்-ல அதுவும் நம்ம தலை மேலே தானே விழும். இப்பயும் நான் எஜுகேஷன் செஸ்ன்னு வரி கட்டுறேனேன்னு கேக்குறீங்களா? அதுவும் பத்தாமா தானே அரசு பள்ளி எல்லாம் நலிவடைஞ்ச நிலையில இருக்கு?

அப்ப இந்தியாவுல லஞ்சம் ஊழல் ரெண்டையும் ஒழிக்க முடியாதான்னு கேக்குறீங்களா? அது தொட்டில் பழக்கம் நீங்க அதை குற்றம்ன்னு பார்க்காம நீங்க கொடுக்கிற 100 ரூவா ஒரு குடும்பத்தை சந்தோஷமா வாழவைக்கிற உதவின்னு வச்சுக்கோங்களேன் என்ன கெட்டுப்போச்சி. இல்லை  உங்களுக்கு ஆக வேண்டிய வேலைய முடிச்சு குடுக்குறதுக்கு குடுக்குற சர்வீஸ் சார்ஜ்ன்னு நெனைச்சுக்கோங்க தப்பா தெரியாது!!   

நீங்க சொல்லுறது கேக்குறது,  50 / 100 வாங்குனா பரவாயில்லை அது அவன் பொருளாதார சிக்கல் எல்லாம் ஒத்துகிறோம் ஆனா கோடிக்கணக்கில வாங்குறாங்களே சிலர் அதுக்கு என்ன சொல்றீங்கன்னு தானே கேக்குறீங்க? பேராசைன்னு ஒரே வார்த்தையில சொல்லிடலாம். விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கிறது சகஜம் தானே, அதை விட முக்கியம் அதையும் செய்ய துணியிறான்னா அதுக்கு மேலேயும் ஏதோ ஒண்ணு கிடைக்குதுன்னு அர்த்தம். அதுவும் இல்லாம அவங்க பக்கம் ஏதோ தப்பு இருக்குனு தானே அர்த்தம், அப்படி இருக்குறப்ப இந்த லஞ்சம் ஊழல் எல்லாத்தையும் ஒழிப்பேன்ன்னு சொல்லுறது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு பேச்சு தானே. மலிவான புகழுக்கு ஆசைப்பட்டு செய்யுற வேலை தானே?? உங்களுக்கு என்ன தோணுதுன்னு கொஞ்சம் சொன்னா தேவலை....


டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு பக்கம் வார முடியல கொஞ்சம் வேலை பளு அதிகம். நண்பர்கள் மன்னிக்கவும், முடிந்த வரை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் ஆண்டு எல்லா நல்லவைகளும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.  

இன்றைய லொள்ளு


வியாழன், டிசம்பர் 01, 2011

தண்ணீர் தண்ணீர்

இன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர்.  தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்கும் போது எங்கோ படித்த கவிதை வரி ஞாபகம் வருகிறது "என் தாத்தா தண்ணீரை ஆற்றில் கண்டார். என் அப்பா கிணற்றில் பார்த்தார், நான் குழாயில் கண்டேன். என் மகன் பாட்டிலில் பார்க்கிறான், என் பேரன் பார்ப்பதற்கு என்ன இருக்கும்?".  இதுவரை சும்மா இருந்த கேரளாவும்,  வேற அணை கட்டியே தீருவோம்ன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் உண்ணாவிரதம்ன்னு  ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்கன்னா கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் விவசாயம் நக்கிக்கிட்டு போயிடும். குடிநீருக்கு அவதிப்படும் நிலையும் வரும்.  இன்னைக்கு இந்த பிரச்சனை மிகவும் தீவிரமா அணுகப்படுவதால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் இருக்கவே செய்கிறது. 

இதுவரை காவேரியும்,பாலாறும்  மட்டுமே பிரச்சனையாய் இருந்தது, இனி முல்லைபெரியாறும். இனியும் மௌனமாய் இருந்தால் தமிழ்நிலம் பாலைநிலமாய் மாறும் என்பது கண்கூடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருந்த பூமி இப்போது பொட்டல் காடாய் கிடக்கிறது, ஆடுகளும் மாடுகளும் ரசாயன தீவனங்களை தின்பதால் பாலில் கூட அமிலத்தின் அளவும் அதிகமாகி விட்டன.

இனி குடிநீர் கூட சில பல மைல்கள் நடந்து சென்று எடுத்துவரும் கொடூர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சில கிராம மக்கள். மரங்கள் நிறைந்து இருந்த தமிழக வனங்கள் இன்று வெறும் முட்புதர்களால் மூடிக்கிடப்பது வேதனை.   அந்த காலத்தில் கோயில் கட்டும் போது குளத்தையும் சேர்த்தே வெட்டினார்கள், அது  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய என்று புரிந்து கொண்டது நம் முட்டாள்தனம் என்றால் மிகையில்லைதானே. 

இன்று அந்த குளங்களின் நிலைதான் என்ன? கடவுள் கூட ஓடி விடுவார் ஒரு முறை அந்த நீரை வைத்து அபிஷேகம் செய்தால். குளங்கள் எல்லாம் குப்பைமேடானதிற்கும், மணல் மூடி போனதிற்கும் யார் பொறுப்பு நாம் தானே?  நம்முடைய பொறுப்பற்ற தன்மைதானே?? இனி எந்த அசோகர் வரவேண்டும் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கிறோம்? நம்மை சுற்றி உள்ள நீர்நிலைகளை நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அல்லது பாதுகாத்து வந்தாலே நமக்கு தேவையான நீர் கிடைக்குமே? 

சரி என்ன தான் பண்ணுறதுன்னு கேக்குறீங்களா? நீராதாரங்களை பெருக்குவதிலும் அதை முறையாய் பராமரித்தாலும் ஒரே தீர்வு. யாருடைய தயவும் இல்லாமல் தமிழகத்தின் நீராதாரம் இருக்க வேண்டுமானால்,  ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தின் பிரதான பாசன வசதிகளான 35 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகள் பல ஆண்டுகளாகப் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி, அவற்றை தூர் வாராமல், பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. பல ஏரிகளின் கரைகள் மட்டும் உள்ளன. இதன் விளைவாக, அண்மைக் காலங்களில் பெரிய அளவில் மழை பெய்தாலும், முறையாக தேக்கி வைக்க வாய்ப்பு இல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டது.

ஏரி,  குளங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்

அடுத்து முக்கியமான விஷயம் மணற்கொள்ளை, ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆறுகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது, இன்னும் சட்டங்கள் கடமையாக்கப்பட்டு மணற்கொள்ளை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தொழில்வளம், வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் நிலை இவைகள் பாதிக்கப்படாமல், நிலம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் மாசுபடுவதைத் தடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். 

மழைநீர் சேகரிப்பு, நீரைப் பயன்படுத்தும் முறையில் விழிப்புணர்வு போன்றவைகளில் அரசும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அவைகளும் சரிசெய்யப்பட்டு சரியான திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

காத்திருப்போம் எம் தாகம் தீரும் நாளுக்காய் !!

இன்றைய லொள்ளு

இப்பிடி ஒரு ப்ராடக்ட் வந்தா நல்லா தான் இருக்கும்


புதன், நவம்பர் 30, 2011

நம்பினோர் கெடுவதில்லை

ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா? விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவெடுத்தேன், வேலை, உறவு உயிர் எல்லாம். வாழவே பிடிக்காத இந்த சமூகத்தில் இத்தனை நாள் பொறுமையாய் வாழ்ந்ததே போதும் இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு. எனக்குள் நானே பிதற்றிக்கொண்டே உறங்கிப்போனேன்.

எத்தனை மணி என்று தெரியவில்லை.  நான் இருந்த இடம் முழுவதும் வெளிச்சம் ஆனால் அது புது இடமாய் இருந்ததால் விடியவில்லை என்று மட்டும் உணர்ந்தேன். வேறு ஏதோ ஆகி விட்டதையும் அறிந்தேன். தென்றல் மெல்ல வருடியது, அந்த சுகம் இதுவரை அனுபவித்திராதது.  தென்றல் வழி வந்த சுகந்தத்தில் மெல்ல மயங்கியும் நின்றேன். 

"குழந்தாய்.."

சத்தம் கேட்டு கண்கள் விரித்துப்பார்தேன். அங்கே கடவுள் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் ஆச்சரியம்.. 

"எல்லாவற்றையும் விட்டுவிட நினைக்கிறாயா?" - மெல்ல கேட்ட கடவுளை நோக்கி "விடாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?" கொஞ்சம் கோபமாய் கேட்டேன்

"இங்கே சுற்றிப்பார், என்ன எல்லாம் இருக்கிறது.? "

"நிறைய மூங்கில் மரங்களும், நிறைய கொடிகளும் இருக்கின்றன. அதனால் என்ன?"

"இவைகள் இங்கே வந்த கதையை சொல்கிறேன் கேள்" என்றார் மெல்லிய சிரிப்புடன்

"ஒரே நேரத்தில் தான் இந்த கொடிகளுக்கும், மூங்கில் மரங்களுக்கும் விதைகளை தூவினேன்.  தேவையான நீரும் ஒளியும் வழங்கினேன். ஆனால் இந்த கொடிகள் வேகமாய் விதையை பிளந்து மண்ணையும் பிளந்து கொண்டு வந்துவிட்டன. ஆனால் இந்த மூங்கில் விதைகளில் இருந்து எதுவும் வரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து நீரும் ஒளியும் வழங்கிக்கொண்டு தான் இருந்தேன். "  மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்

"ஒரு ஆண்டு கழிந்தும் அப்படியே தான் இருந்தது. ஒரு மாற்றமும் இல்லை. இப்படியே இரண்டாவது ஆண்டும் ஓடியது. மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஐந்தாவது ஆண்டு மண்ணை பிளந்து கொண்டு சிறு செடி வெளியே தலை நீட்டி பார்த்தது. ஆனாலும் அது இந்த கொடியோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாகவே இருந்தது. ஆனால் அதன் பின் 6 மாதங்களில் இந்த மூங்கிலின் உயரம் 100 அடியையும் தாண்டி வளர்ந்துவிட்டது. 5 வருஷம் அது தன் வேரை பலப்படுத்திக்க
எடுத்துக்கிச்சு, தேவையான அளவு பலம் வந்ததுக்கப்பறம் அது மேலே வளர்ந்துச்சு" தொடர்ந்து

"குழந்தாய் இன்னும் கேள், நான் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத  துயரங்களை எப்போதும் கொடுப்பதில்லை. உனக்கு  சோதனை வருகிறது என்றால் உன் வேர்கள் பலப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று எடுத்துக்கொள் உனக்கான காலம் வரும் அப்போது நீயும் இந்த மூங்கில் போல உயர்வடைவாய்" சொல்லிவிட்டு என் முகம் பார்த்தார்.

"எவ்வளவு உயரத்திற்கு நான் போவேன்?"  எனக்குள் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்

"இந்த மூங்கில் மரம் எவ்வளவு பெரிதாய் வளரும்?" திருப்பிக்கேட்டார் கடவுள்

"அதால எவ்வளவு பெருசா வளரமுடியுமோ அவ்வளவு பெருசா.."

"அது உனக்கும் பொருந்தும்" சொல்லிவிட்டு சிரித்தார்

திடீரென முகத்தில் மழை பெய்வதை போலுணர்ந்தேன்..

கண் விழித்த பார்த்த போது,  தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த என் குழந்தை பெய்த மழை..

கிஞ்சித்தும் இருள் இல்லாமல் பொலபொலவென விடிந்து இருந்தது பொழுது என் மனதிலும் இரவில் இருந்த இருள் இப்போது இல்லை.



இன்றைய லொள்ளு

என்ன பண்ணுறாங்கன்னு யாராவது சொல்லுங்கப்பா..



செவ்வாய், நவம்பர் 29, 2011

வாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி

ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு, விவசாயம் நல்லா நடந்ததால அவரு சந்தோஷமா இருந்தாரு. தேவையான வருமானம் சந்தோஷமான வாழ்க்கை வேற என்ன வேணும் ஒரு ஆளுக்கு. ஆனாலும் விதி விடுமா அவருக்கும் வந்துச்சு ஒரு நாள் சாமியார் வேசத்தில, வந்த சாமியாரு அந்த விவசாயி கிட்ட வைரத்த பத்தி பேசுனாரு. ஒரு கட்டை விரல் அளவு வைரம் இருந்தா இந்த ஊரை வாங்கிடலாம்,

நடுவிரல் அளவு வைரம் கிடைச்சா இந்த நாடே உன்னோடது, சொல்லிட்டு போயிட்டாரு அந்த சாமியாரு. அதுவரை சந்தோஷமா இருந்த விவசாயி மனசுல அடிக்க ஆரம்பிச்சது புயல்.  நிம்மதியா தூங்கி எந்திருச்ச மனுஷன், இப்ப குழப்பத்தோட படுக்கைக்கு போறாரு.

மறுநாள் காலையில ஒரு முடிவுக்கு வந்துட்டாரு, வைரங்களை தேடி எப்பிடியாவது கண்டுபிடிச்சிரணும்ன்னு. இருந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு கிளம்பினாரு ஊரை விட்டு, உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிச்சிரணும்ன்னு ஒரு வைராக்கியம் மனசுல.

ஒவ்வொரு ஊரா சுத்துனாரு அந்த ஆளு, எங்கேயும் அகப்படலை வைரம். கையில இருந்த காசு தீர்ந்தப்ப அவரு மனசுல இருந்த ஆசை எல்லாம் வடிஞ்சு வெறும் விரக்தி மிச்சம் ஆச்சு இனி சாகுறத தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

இன்னொரு பக்கம் அவர் கிட்ட நிலத்தை வாங்குனவரு ஒரு நாள் வயல்ல வேலை செய்யுறப்ப ஏதோ ஒரு பொருள் வெயில் பட்டு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு. அவருக்கும் தெரியலை அது என்னானு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு எடுத்து வேட்டியில முடிஞ்சுகிட்டாரு. சாயந்தரம் வீட்டுக்கு வந்தவரு அதை வாசல் கதவுல கட்டி தொங்க விட்டு இருந்தாரு.

அந்த வழியா வந்த சாமியார், வைரத்தை தேடி போனவன் வைரத்தோட வந்துட்டான்னு நெனைச்சு வெளியே இருந்து கூப்பிட்டாரு, வெளியே வந்த புது ஆளு,  அவர் இன்னும் வரலை உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்துட்டாருன்னு கேட்டாரு. இல்லை இங்கே வைரம் தொங்கிக்கிட்டு அதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் அப்பிடின்னாரு. அது வைரம் இல்லை சாமி வெறும் கல்லு, சொன்ன புது ஆளுகிட்ட, எனக்கு தெரியும் இது வைரம் தான் அடிச்சு சொன்னாரு சாமியாரு. இது மாதிரி இன்னும் நிறையா அந்த வயல்ல கிடக்கு வந்து பாருங்கன்னு சொன்னாரு புதுஆளு. கொஞ்சம் எடுத்துட்டு போயி வைர  வியாபாரிகிட்ட காட்டுனாங்க, அவரும் சோதிச்சு பார்த்துட்டு அது எல்லாம் வைரம் தான்னு உறுதியா சொன்னாரு. அந்த வயல் பூராவுமே இப்படி வைரங்கள் அங்கே அங்கே நிறையா புதைஞ்சு இருந்துச்சு.

கதை சொல்லும் கதை
1. வாய்ப்புகள் எப்போதும் நம்முடைய கால்களுக்கு அடியில் தான் கிடக்கிறது அதை கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது

2. அக்கரை எப்போதும் பச்சையாய் தான் இருக்கும்

3. வாய்ப்புகளை கண்டுணர முடியாதவர்களுக்கு, வாய்ப்புகள் கதவை தட்டுவது கூட வெறும் சத்தமாய் தான் தெரியும்

4. ஒரே வாய்ப்பு இன்னொரு முறை வாய்ப்பது இல்லை கண்டுகொள்ள வில்லை என்றால் அதுவும் கடந்து போகும், வேறு ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்கலாம் ஆனால் அது நாம் இழந்த வாய்ப்பிற்கு சமமாகுமா தெரியாது.

இன்றைய லொள்ளு

சொன்ன பேச்சை எவன் கேக்குறா இங்கே


திங்கள், நவம்பர் 28, 2011

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார்வை

மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது சரி என்று சிலரும் தவறு என்று என்று சிலரும் பேசிக்கொள்வது என்னை குழப்பியதின் விளைவே இந்த தேடல்.

முதலில் அரசு தரப்பில் என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பொருட்களை எடுத்துச்செல்வதில் இருக்கும் முதலீட்டு பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது உலகிலேயே பழங்கள் மற்றும் காய்கறியின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் நாம் இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வது ஆண்டுதோறும் 200 மில்லியன் மெட்ரிக் டன், ஆனால் நம்மிடம் இருப்பது 5836 கோல்ட் ஸ்டோரேஜ் எனப்படும் குளிர் பதன நிலையங்கள் இவற்றின் மூலம் 23.6 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்களை மட்டுமே கையாள முடியும், அவற்றிலும் 80% உருளைகிழங்கு பதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது (உபயம் சிப்ஸ் கம்பெனிகள் போல)  

நம்மால் பதப்படுத்த முடியாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 1 டிரில்லியன் ரூபாய்கள், இது மொத்த  உற்பத்தியில் 57 சதவீதம். இன்னும் சில புள்ளி விவரங்கள் நாம் உற்பத்தி செய்யும் பழங்களில் 35-40% வீணாவதாகவும்!!(?), தானிய வகைகளில் 10% வீணாவதாகவும் சொல்கின்றன.  குளிர் பதன துறையில் மட்டும் முதலீட்டை அனுமதிப்பது பயன் அளிக்காது, ரீடைல் அவுட்லெட்களும் அதிகரிப்பதன் மூலம் வீணாகும் பொருள்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும் அப்பிடின்னு சொல்றாங்க.

அது மட்டும் இல்லாம இடைதரகர்களின் தலையீடும் குறையும் பலன் விலை நேரே விவசாயிகளுக்கு கிடைக்கும், அது மட்டும் இல்லாம அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். சுமாரா 5 வருசத்தில 1 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும. 

கபினேட்ல என்ன முடிவு வச்சு இருக்காங்கன்னா
1.    51% நேரடி முதலீடு செய்ய அனுமதிப்பது, குறைத்த பட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பது
2.    50% உள்கட்டமைப்புக்கு ஒதுக்குவது இதன் மூலம் திறன் வாய்ந்த பதன கிடங்குகளை அமைக்க முடியும்.
3.  30% பொருட்கள் குடிசை/சிறு தொழில் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைபடுத்துதல். 
4.    விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
5.  10 லட்சத்திற்கு அதிகம் மக்கள் வசிக்கும் ஊர்களில் மட்டும் கடைகளை திறப்பது
6.    விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முதல் உரிமை அரசிடம் தான் இருக்கும்
7.    எந்த பொருட்கள் கொள்முதல் செய்தாலும் அதே பெயரில் தான் உலகம் முழுவதும் விற்கப்பட வேண்டும்

மேலும் விவரங்களுக்கு


சரி இப்ப எதிர்தரப்புல பரவலா சொல்லப்படுற விஷயங்களை பார்ப்போம் 

1. தினமணி தலையங்கம்

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

 மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

 2. ஜெயலலிதா :  சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.

3. கருணாநிதி கண்டனம்:  நாட்டில் சில்ல‌ைர வியாபாரத்தில் அன்னிய முதலீடு வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும். பலர் தங்களுடைய தொழிலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன் பொருளாதாரத்தில் சுனாமி என்ற பேரழிவு ஏற்படும். இதனை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

4. மத்திய அரசின் முடிவை ஆதரித்தால், சிறு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆதரவை எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியினர் பெற்று விடுவர் என அஞ்சுவதால், கேரள காங்கிரசார், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

5. மாயாவதி: சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

ஒரு சாமானியனாக எனக்குள் ஓடிய ஒரு விஷயம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரும் போது போட்டியின் காரணமாய் பொருட்களின் விலைகள் குறையும் என்பது நிதர்சனம்.

நிறைய தேடியும் இன்னும் சரியா புரியலை இது சரியா தப்பான்னு , யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..  

வியாழன், நவம்பர் 24, 2011

எப்பிடி எல்லாம் அசத்துறாங்க

 உலகின் மிகப்பெரிய 3D ஓவியம்  - ஒரு ஜிம்மை விட பெரியது. பெரிய வேலை தான் பார்த்து இருக்காங்க 

 

 
இயேசுவை போன்ற தோற்றம்  மேகத்தில்

 

சாத்தான் போன்ற தோற்றம் மேகத்தில்




இன்னொரு முறை மழலையானால்

 


 அண்டத்தின் (universe)  முப்பரிமாண வடிவம்



இன்றைய லொள்ளு



courtesy : google images, shortlist 
படங்கள் கூகிள் இமேஜ்-இல் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோ வழக்கம் போல youtube   

புதன், நவம்பர் 23, 2011

தடை செய்யப்பட்ட நாவல்கள்

சில நாவல்கள் புகழ் பெற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டு இருந்தும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக்கொண்டு இருக்கிறது என்று அரசும் மக்களும் நினைத்ததால் தடை செய்யப்பட்டன, அவற்றுள் சில இங்கே 

1.Brave New World by Aldous Huxley

சுருக்கம்: இது 1931 ல் எழுதப்பட்டது, ஒரு வருடத்திற்கு பின்னர் 1932 இல் வெளியிடப்பட்டது. தொழில்மயமாக்கல் காலம் தான் கருப்பொருள், ஹக்ஸ்லி தொழில்மாயமாக்கலால் ஏற்படும் பேரழிவு விளைவு மற்றும் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விரிவாக சொல்லி இருந்தார்

ஏன் தடை செய்யப்பட்டது:    முதலில் இந்த நாவல் அயர்லேண்ட்டில் தடை செய்யப்பட்டது குழந்தை பிறப்பை பற்றிய எதிர்மறை கருத்துக்கள் இடம் பெற்று இருந்ததால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  பின்னர் இது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது, இது எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

2. The Grapes of Wrath by John Steinbeck

சுருக்கம்: 1939 இல் வெளியிடப்பட்டது ஸ்டெயின்பெக்கின் புலிட்ஃஜர் பரிசு பெற்ற நாவல், கிராமப்புற ஏழை பெருமந்த விளைவுகளை பற்றிய கதை.  வறட்சி, பொருளாதார காரணங்களால், மற்றும் விவசாய துறையில் மாற்றங்கள் எப்படி மக்களை ஊருக்கு வெளியே விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதையும், அவர்கள் தங்களுக்கான வேலை மற்றும் நிலத்தை தேடியதை பற்றி விரிவாய் சொல்லி இருக்கிறார் ஸ்டெயின்பெக்கின். 

ஏன் தடை செய்யப்பட்டது? இலக்கிய உலகில் சிறந்த நாவலாய் இருந்த போதிலும், அதை பகிரங்கமாக அமெரிக்க தடை செய்தது  மற்றும் பொது மக்கள் ஒட்டுமொத்தமாக அந்த நாவலை எரித்தனர். ஏழ்மை பற்றிய ஸ்டெயின்பெக்கின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அது அவர்களை மேலும் அதிர்ச்சியையே உருவாக்கி இருந்தது. அந்த கருத்துக்களை எல்லாம் நீக்கி மீண்டும் இன்னொரு பதிப்பு மேற்கொள்ளப்பட்டது.

3. Tropic of Cancer by Henry Miller

சுருக்கம்: 1934 இல் வெளியிடப்பட்டது, இந்த கதையின் ஆசிரியர் மில்லர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து எழுதி இருந்தார். தான் நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் எப்படி தன்னை கையாண்டார்கள் என்பதை விரிவாக வியல்க்கி இருந்தார்.
இதில் வெளிநாட்டில் வாழும் ஒரு அமெரிக்க குடிமகனின் நிலையை விளக்கி இருந்தார்

ஏன் தடை செய்யப்பட்டது? பாலுறவு பற்றி மில்லர் எழுதி இருந்தது சற்று முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.  மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் இது தடை செய்யப்பட்டது

4. Slaughterhouse-Five by Kurt Vonnegut

சுருக்கம்: 1969  இல் வெளியிடப்பட்டது, ஜெர்மானிய படைகளிடம் மாட்டிக்கொண்ட ஒரு போர் குற்றவாளியை பற்றிய கதை. அவர் சிறையில் செய்யப்பட்ட கொடுமையை விரிவாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஏன் தடை செய்யப்பட்டது? போர் குற்றம் பற்றி எழுதப்பட்டு இருந்ததால் தடை செய்யப்பட்டது.

5. The Satanic Verses by Salman Rushdie

சுருக்கம்: 1988  இல் வெளியிடப்பட்டது, இந்த நாவல் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு புல பெயர்ந்த இந்தியரின் கதை. ஒரு விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரு நடிகரும், இன்னொரு சாமானிய மனிதரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடிந்தது என்பதை பற்றிய நாவல்.

ஏன் தடை செய்யப்பட்டது? இந்த நாவலில் சில இடங்களில் இஸ்லாம் சமயம் பற்றிய அவதூறு கருத்துக்கள் இருந்தது. வெனிசுலா நாட்டில் இந்த நாவலை படிப்பவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது, ஜப்பானில் அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவும் இந்த நாவலை தடை செய்தது.

மேலே சொல்லப்பட்டுள்ளது ஒரு துளி,  இன்னும் இது போல் இன்னும் நிறைய நாவல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கையில் அதையும் எழுதுகிறேன்.  

இன்றைய சிந்தனை

1.     வலி தவிர்க்க முடியாதது என்றாலும் அனுபவிப்பது நம் விருப்பம் மட்டுமே

2.    உலகின் சிறந்த வலிநிவாரணி தாயின் முத்தம், இதற்கு இணையான மருந்து இன்னும் கண்டுபிடக்கப்படவில்லை

3.    தைரியத்தை வளர்க்க சிறந்த வழி வலி.

இன்றைய லொள்ளு






வெள்ளி, நவம்பர் 18, 2011

காலையில பட்டினி கிடந்து உடம்பை குறைக்கிறீங்களா - உஷார்

இன்னைக்கு இருக்க அவசர உலகத்தில நிறைய பேரு காலை உணவை சரியா எடுத்துக்கிறது இல்லை, சிலர் எடுத்துக்கிறதே இல்லை.   அதனால என்ன ஆகும்ன்னு கேக்குறீங்களா?  பக்கவாதம், மாரடைப்பு மற்றும் திடீர் மரணம். இது மிரட்டுறதுக்காக சொல்லலைங்க. சமீபத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்லுது. இது மாதிரி அசம்பாவிதங்களை தடுக்க இந்த காலை உணவு உதவி செய்யுதுன்னு  ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது.   அதோட காலை உணவு தான் அந்த நாளோட முக்கியமான உணவுன்னும் சொல்றாங்க.

அவங்க ஆராய்ச்சியோட முடிவு என்ன சொல்லுதுன்னா மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம்  எல்லாம் காலை 8  மணியிலிருந்து 10  மணிக்குள்ள அதிகம் ஏற்படுறதாம். அதுக்கு காரணம் பிளட்லெட் என்கிற ரத்ததில இருக்க ஒருவகை உயிரணுக்கள் ரொம்ப ஆக்டிவா இருக்குமாம். இதோட வேலை ரத்தத்தை கெட்டிப்படுத்துறது. அதாவது உடம்புல எங்கையாவது காயம் பட்டு ரத்தம வந்து கொஞ்ச நேரத்தில கெட்டி ஆயிடும் அதுக்கு காரணம் இந்த பிளேட்லட். 

இது காலையில ஆக்டிவா இருக்குறதால, தமனிக்குள்ள கொழுப்புகள் மூலமா உள்ள நுழைஞ்சு அங்கே இருக்குற ரத்தத்தை உறைய வைச்சுடுதாம், அதனால தான் மாரடைப்பு, பக்கவாதம்  திடீர்ன்னு ஏற்படுத்துன்னு சொல்றாங்க. சரி அதுக்கும் காலையில சாப்பிடுறதுக்கும் என்ன சம்மந்தம்ன்னா நீங்க சாப்பிடுற உணவு இந்த பிளேட்லட் ஆக்டிவேஷன குறைக்குதாமா, அதனால மாரடைப்பு பக்கவாதம் வர்றது தவிர்க்கப்படுத்துன்னும் சொல்றாங்க.

உடம்பு வெயிட் போட்டுருக்கு உடம்பை குறைக்கணும் இல்லை ஆஃபிஸ் தூரமா இருக்கு சீக்கிரம் போகணும் இப்படி நிறைய காரணம் சொன்னாலும் காலையில உணவை தவிர்க்க கூடாதுங்க, அட்லீஸ்ட் 2 வாழைப்பழம் சாப்பிட்டு போனா 2 மணி நேரம் தேவையான சக்தி உடம்புக்கு கிடைக்கும்.

அதனால நண்பர்களே காலை உணவை தவிர்க்காதீங்க.

இன்னைக்கு காலையில ஒரு கட்டுரை படிச்சேன் நம்ம கழுகு இணைய தளத்தில, அதுல மைதா மாவு எப்பிடி தயாரிக்கிறாங்கன்னு விரிவா எழுதி இருக்காங்க.  மைதா மாவு நீரிழிவு நோய்க்கு எப்பிடி வழி செய்யுதுன்னும் சொல்லி இருக்காங்க. அதை படிச்சதுக்கு அப்பறம் பப்ஸ் திங்க கூட பயமா இருக்கு.  நீங்களும் படிச்சு பாருங்களேன். http://www.kazhuku.com/2011/11/blog-post_18.html

இன்றைய சிந்தனை

1.    சூழ்நிலைக்கு ஏற்ப எந்த ஒரு முடிவையும் எடுக்க துணிந்தவரே சிறந்த தலைவர்.

2.    தொழிலாளியிடம் மட்டும் அல்ல முதலாளியிடமும் இருக்க வேண்டியது விசுவாசம்

3.    மறுதலிப்பது நேர்மையற்ற செயல் அல்ல, ஆனால் கீழ்படியாமை நேர்மையற்றது

திங்கள், நவம்பர் 14, 2011

ஸ்வீட் கொஞ்சமா எடு கொண்டாடு

இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். (14/11/2011)

முதலில் இது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு அவ்வளவே ஆனால் இதன் பின் விளைவுகள் உயிரை பறிக்கக்கூடியது என்பதால் அதிக கவனமாய் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இந்த குறைபாட்டில் இருந்து உங்களை காக்கும்

சர்க்கரை நோய் பற்றிய சில கட்டுக்கதைகளை இங்கே பார்க்கப்போறோம். 

கட்டுக்கதை 1 : சர்க்கரை உள்ளவர்கள் முற்றிலும் இனிப்பை தொடக்கூடாது

உண்மை : இது முற்றிலும் உண்மை அல்ல. டைப் 2 வகை சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவு பழக்கம் சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், இது உங்கள் உடல் நலத்திற்கு பெரிய தீங்கை விளைவிக்காது. முக்கியமாக இனிப்பை சாப்பிட வேண்டும் என்று இருந்தால் உங்கள் உணவின் அளவை சற்று குறைத்துக்கொள்ளலாம் #ஸ்வீட் எடு கொண்டாடு

கட்டுக்கதை 2 : சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் இந்த குறைபாடு வரும்

உண்மை : இது உண்மை அல்ல. இது பரம்பரை மற்றும் உங்கள் வாழ்க்கை முறை சம்மந்தப்பட்டது. குறைவாக சர்க்கரை எடுத்துக்கொண்டாலும் உங்கள் பெற்றோருக்கோ அல்லது அவரது பெற்றோர்களுக்கோ இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

கட்டுக்கதை 3  : சர்க்கரை குறைபாடு பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்ணவேண்டும்

உண்மை : அப்படி அல்ல, நீங்கள் விரும்பிய உணவை உண்ணலாம், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் 7 முதல் 8  முறை எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என்பது மட்டும் அல்ல கட்டுக்குள் இருக்கும். உணவிற்கு முன் அதிக நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது அது நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதால் சர்க்கரையின் அளவும் குறைந்தே இருக்கும்


கட்டுக்கதை 4  : சர்க்கரை குறைபாடு எல்லாம் ஒரே வகையே

உண்மை : அல்ல இதில் இரண்டு வகைகள், ஒன்று உங்கள் உடம்பில் இன்சுலின் இயற்கையாகவே குறைவாக இருக்கும்,  இந்த வகையை சேர்ந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மருந்தை தினமும் ஏற்றிக்கொள்ள நேரிடும். இப்போது மாத்திரை வடிவிலும் இன்சுலின் உட்க்கொள்ளுவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் முழுமை பெறவில்லை. இன்னொரு உங்கள் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பு உண்டாவது அதாவது உங்கள் உடல் சுரக்கும் இன்சுலின் முழுமையாக பயன்படாமல் போவது. பொதுவாக இந்த குறைபாடு உள்ளவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்களாவே உள்ளனர்

கட்டுக்கதை 5   : குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் சர்க்கரை குறைபாடு வரும்

உண்மை : அல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் வரும்.

கட்டுக்கதை 6 : முறையாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்

உண்மை : மிக மோசமாக நம்பப்படும் ஒரு கதை இது, மாத்திரைகள் மட்டும் உங்களுக்கு உதவாது. முறையான உடற்பயிற்சி, சிறந்த உணவுப்பழக்கம் மட்டுமே சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இருக்கும். வெறும் மாத்திரைகள் உதவாது.

சிறந்த உணவுப்பழக்கம்ன்னு சொல்லுறீங்க அப்பிடின்னா என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேக்கலாம்.  சொல்லுறேன் அதையும் நீரிழிவு இருக்குறவங்க அரிசி கோதுமை எல்லாம் சாப்பிடுறதை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு மானாவாரி பயிர்கள்ன்னு சொல்லுற கம்பு, சோளம் மாதிரி உணவுகளை எடுத்துக்கிட்டா நல்லது. இப்ப புல்லரிசி பத்தி (ஓட்ஸ்) நிறையா விளம்பரம் வருது, உங்கள் வருமானம் இடம் தந்தால் அதையும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் சமைக்காத உணவுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  எனவே சமைக்காத காய்கறிகளை முடிந்த அளவு சாலட் போல செய்து உணவாய் சேர்த்து வர சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கும். புரத சத்து மிக்க பயறு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உணவருந்து நேரத்தை மாற்றி அமையுங்கள், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மிதமான (கால் வயிறு) உணவை   எடுத்துக்கொள்ளுங்கள், இடையில் பசி உணர்வு ஏற்பட்டால் பழச்சாறுகளை அருந்துங்கள் முடியாதவர்கள் தண்ணீர் குடியுங்கள்.  தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ளே இருக்கும் நச்சுக்கழிவுகள் விரைவில் வெளியேற்றப்படும்.

இத்துடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் (குறைந்தது அரைமணி நேர நடை) சேர்த்து செய்வதன் மூலம் உங்கள் உடலின் சர்க்கரையின் அளவு அளவாய் இருக்கும். 

இன்றைய லொள்ளு  



வெள்ளி, நவம்பர் 11, 2011

சின்னப்புள்ளைத்தனமா இல்ல இருக்கு

ஜட்ஜ் : ஏம்மா உங்க வீட்டுக்காரை சேரை வச்சு அடிச்ச?
பெண் : டேபிளை தூக்க முடியலே ஐயா அதான்

கஸ்டமர் : ரூம் சர்வீஸ்? எனக்கு துவட்ட ஒரு துண்டு கொண்டு வந்து தறீங்களா?
ரூம் சர்வீஸ் : கொஞ்சம் இருங்க சார் இன்னொருத்தர் துவட்டிக்கிட்டு இருக்காரு

ஒரு பேய் இன்னொரு பேய் கிட்ட என்ன சந்தேகம் கேக்கும்
இந்த மனுஷ பயலுகளை எல்லாம் நம்புறியா?

ரிசப்ஷன் : என்ன சார் ஹனிமூன் வந்து இருக்கேன்ன்னு சொல்றீங்க ஆனா தனியா வந்து இருக்கீங்க
இவர்         : என் பொண்டாட்டி ஏற்கனவே ஊட்டியை பார்த்து இருக்காங்க. அதான் நான் மட்டும் வந்து இருக்கேன்  

அவர் : இங்கே பாருங்க சிங்கம் போன தடம் தெரியுது
இவர் : ஆமா நீங்க அது எங்கே போய்கிட்டு இருக்குன்னு பாருங்க நான் அது எங்கே இருந்து வந்து இருக்குன்னு பார்க்கிறேன்

அவர் : என் பொண்டாட்டிக்கு என்ன வேணும்ன்னே தெரியாது
இவர் : நீங்க குடுத்து வைச்சவரு என் பொண்டாட்டி அப்படி இல்லை

மேனேஜர் : தம்பி ஒரே நேரத்தில நிறைய வேலை வந்தா சமாளிச்சுடுவியா?
இவன் :  அதெல்லாம் அனுபவம் இருக்கு சார், நான் கடந்த மூணு மாசத்தில 12 கம்பெனி மாறியிருக்கேன்.

ஜட்ஜ் : என்னம்மா உங்க வீட்டுக்காரருக்கு இப்பயாச்சும் டைவர்ஸ் குடுத்துடலாமா?
பெண் : 15 வருஷம் இந்த மனுசனோட குடும்பம் நடத்தி இருக்கேன். அவரு இப்பதானே டைவர்ஸ் கேக்குறாரு இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு தரலாம்

ஒரு சாஃப்ட்வேர் எஞ்சீனியர் தம் அடிச்சுக்கிட்டு இருந்தாரு. அந்த பக்கம் வந்த பொண்ணு

பெண் : ஏங்க சிகரட் பிடிக்கிறது உடல் நலத்திற்கு கெடுதின்னு பாக்கெட் மேலேயே வார்னிங்க்ன்னு போட்டு இருக்காங்களே நீங்க படிச்சு பாக்குறது இல்லையா?  
சா.எ. : நாங்க எரர் (error) வந்தா தான் கவலைபடுவோம் வார்னிங்க்கை எல்லாம் கண்டுக்கிறது இல்லை   

அவர் : எங்க சோகமா இருக்கீங்க
இவர் : என் பொண்டாட்டி 30 நாள் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
அவர் : அதுக்கு சந்தோசப்படாம ஏன் சோகமா இருக்கீங்க
இவர் : அதுவா இன்னைக்கு தான் 30 வது நாள் 

இன்றைய லொள்ளு 

ஓட்டு போட்ட எல்லோருக்கும் சமர்ப்பணம்  


வியாழன், நவம்பர் 10, 2011

இது ஒரு காதல் கதை

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி  

"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு."  சற்று அதட்டலான குரலில் சொன்னாள் கவிதா

"100 கிமீ எல்லாம் ஒரு வேகமா? எல்லாம் ஒரு த்ரில் தான் கொஞ்சம் அனுபவி"  சொன்னபடியே இன்னும் வேகத்தை கூட்டினான் குமார்

"சொன்னா கேளு மெதுவா போ, எனக்கு பயமா இருக்கு" - இறுக்கி கட்டிக்கொண்டபடி சொல்லிக்கொண்டே வந்தாள்.    

கொஞ்ச நேரத்தில்

"செல்லம் இந்த ஹெல்மெட் இடைஞ்சலா இருக்கு. இதை கழட்டி நீ மாட்டிக்கவேன்"  வண்டியின் வேகத்தை குறைக்காமல் கவிதாவிடம் சொன்னான்.

"ஓட்டுறவங்க தானே ஹெல்மெட் போடணும்?"

"சொன்னா கேளு இந்த ஹெல்மெட்டை நீ மாட்டிக்க"

தொடர்ந்து குமார் வற்புறுத்தியதால் ஹெல்மெட்டை கழட்டி தன் தலையில் மாட்டிக்கொண்டாள் கவிதா

மறுநாள் காலை தினசரியில்

"தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ஆனது. வண்டியின் பிரேக் உடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். பின்னால் அமர்ந்து இருந்த பெண் பலமான காயங்களுடன் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைக்குப்பின் கண் விழித்தார்."

உண்மையில், வண்டியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறை உணர்ந்தவுடனே அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டி கவிதாவை மாட்டிக்கொள்ள வற்புறுத்தி இருக்கிறான் குமார்.       


 இது குடிக்காரர்களுக்கு மட்டும்

1.    நீங்க பாக்குற எல்லாமே கொஞ்சம் சிதறலா தெரியுதா அப்ப உங்க கிளாஸ் இருந்த சரக்கு தீர்ந்துடுச்சுன்னு அர்த்தம். அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகுங்க. 

2.    கால்ல ஏதோ சில்லுனு படுதா ஈரமா ஆகுதா அப்ப நீங்க கிளாஸை தலை கீழா வச்சு சரக்க ஊத்திக்கிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். திருப்பி வைக்கணும்

3.    நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிற சுவத்துல நிறைய வெளிச்சமா இருக்கா? அப்ப நீங்க தரையில கிடக்கீங்கன்னு அர்த்தம்.

4.    தரை நழுவுற மாதிரி இருக்கா அப்ப உங்களை யாரோ தர தரன்னு வெளியே இழுத்துட்டு போறாங்கன்னு அர்த்தம்.

5.    நீங்க இருந்த ரூம் ஆடுற மாதிரி இருக்கா? உங்களை சுத்தி கொஞ்சம் பேரு வெள்ளை டிரெஸ் போட்டு இருக்காங்களா? அப்ப நீங்க ஆம்புலன்ஸ்-ல இருக்கீங்கன்னு அர்த்தம்.

மேலே சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குற அளவு மட்டும் குடிங்க. உங்களுக்கு நல்லது  இல்லாட்டி மேலே இருக்கிறது எல்லாம் நடக்கும். 

இன்றைய கடி 

"முடியாது என்கிற வார்த்தை என் அகராதியில் இல்லை" - நெப்போலியன்.
இப்ப சொல்லி என்ன ஆகப்போகுது, வாங்குறதுக்கு முன்னாடியே செக் பண்ணி வாங்கி இருக்கணும் 

இன்றைய சிந்தனை

1.    இதுவரை உங்களிடம் இல்லாத பொருள் வேண்டும் என்று நினைத்தால் இதுவரை நீங்கள் செய்யாத செயலை செய்யுங்கள் 

2.    வாழ்க்கை எங்கே உங்களை அழைத்துச்செல்கிறதோ அங்கெல்லாம் போகாதீர்கள், நீங்கள் போக விரும்பிய இடத்திற்கு வாழ்க்கையை அழைத்துச்செல்லுங்கள் 

இன்றைய லொள்ளு


திங்கள், அக்டோபர் 31, 2011

இதுக்கு பேரு தான் மாத்தியோசி

ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருந்துச்சு. கதையில மதம், செக்ஸ், மர்மம் அப்புறம் அதுல ஒரு புரியாத விஷயம் இல்ல ரகசியம் இருக்கணும் இது தான் கண்டிஷன். இருக்குறதுலயே சின்ன கதை வெற்றி பெறும் அப்பிடின்னு சொல்லிட்டாங்கா. 

ஒரு சர்தார்ஜி கதை எழுதி அனுப்பினாரு. கதை இதுதான்

"கடவுளே என் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகுது" 

போட்டிக்கான கடைசி தேதி முடிஞ்ச ஒரு வாரத்துல போட்டி வச்சவங்க கிட்ட இருந்து ஃபோன்.

"இருக்குறதிலேயே உங்க கதை தான் சிறுசு. நீங்க அதை விளக்க முடியுமா?"

சர்தார்ஜி விளக்க ஆரம்பிச்சாரு

"கடவுள் - மதம்

மனைவி - செக்ஸ்

குழந்தை பிறக்கப்போகுது - மர்மம் (என்ன குழந்தைன்னு)"

"சரி புரியாத விஷயம் இல்ல ரகசியம் என்ன?"

"ஓ அதுவா அந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு?"

=========================================================================

BMW 760 LI - ரூ 5000 மட்டும் விளம்பரத்தை பார்த்த உடனே குஷியான சர்தார் அந்த விளம்பரத்தில இருந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணினாரு

"எப்ப வந்து காரை வாங்கிகிடலாம்?" ன்னு கேட்டார்..

"சாயந்தாரம் 5 மணிக்கு வாங்க .."

சாயந்தாரம் 5 மணி சொன்ன மாதிரி சர்தார் காசை எடுத்துக்கிட்டு அவங்க சொன்ன அட்ரெஸ்க்கு போனார். எல்லாம் சுமூகமா முடிஞ்சுடுச்சு

"இந்த காரு ரொம்ப விலை ஜாஸ்தியாச்சே. 5000 ரூவாயிக்கு ஏன் விக்கிறீங்க?"

"அதுவா ஏன் புருஷன் அந்த செகேரட்டரியோட ஓடிப்போயிட்டான். அவன் தான் ஃபோன் பண்ணி இந்த காரை வித்து வர்ற காசை எல்லாம் எனக்கு அனுப்பி வைன்னு சொன்னான் அதான்"

=========================================================================

அவர்      : உங்க கிராமத்தில பிறந்த பெரிய மனுஷன் யாருங்க?
சர்தார் : எங்க ஊர்ல பிறக்கும் போது எல்லோரும் குழந்தையா தான் இருப்பாங்க

அவர்   :    காலிங் பெல் ரிப்பைர் பண்ணனும்ன்னு நாளு நாளைக்கு முன்னே உன்னை கூப்பிட்டு சொன்னேன் இன்னும் ஏன்யா வரலை?
சர்தார : நாளு நாளா உங்க வீட்டுக்கு வந்து பெல் அடிச்சுக்கிட்டே இருக்கேன் யாரும் வந்து கதவை தொறக்கலியே!!?




இன்றைய லொள்ளு


வியாழன், அக்டோபர் 27, 2011

போதிதர்மர் தமிழரா?

இது ஒரு சந்தேகப்பதிவு. அதாவது எனக்கு வந்த சந்தேகம் பத்தின பதிவு. 

இந்த தீபாவளிக்கு வெளியான 7 ஆம் அறிவு திரைப்படத்தில் முதல் 25 நிமிடங்கள் போதிதர்மர் யாருன்னு அழகா வரலாறை சொல்லுகிறார் டைரக்டர்.  நல்லா இருக்கு,  சூர்யா நல்லா பண்ணி இருக்கார். 

25 வது நிமிடம் மக்கள் கிட்ட கருத்து கேக்குற மாதிரி ஒரு சீன் வச்சு இருக்கார், அதாவது தமிழ்நாட்டுல (எந்தெந்த ஊருன்னு தெரியல) இருக்க சில மக்கள் கிட்ட போதிதர்மர் யாருன்னு கேக்குறாங்க. 100% பதில் யாருக்கும் தெரியலே. அவ்வளவு ஏன் எனக்கு கூட தங்கமலர்-ல (தினத்தந்தி இலவச இணைப்பு வெள்ளிக்கிழமை வரும்) படக்கதைகள் மூலமா தெரியும் ஆனா அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்ன்னு தெரியாது.

பராந்தக சோழன் யாருன்னு கேட்டா கூட நிறைய பேருக்கு தெரியாது, வீராணம் ஏரியை வெட்டுனவர் யாருன்னு கேட்டா தெரியாது, வைகை டாம் கட்டுனவர் யாருன்னு கேட்டாலும் தெரியாது.   இன்னும் கொஞ்ச நாள்ல பெரியாரும் அண்ணாவும் கூட மறந்துடுவோம்.  ஏன்னா நம்ம வரலாற்று அறிவு அப்பிடி. சுதந்திர போராட்டத்தை மட்டுமே வரலாறுன்னு படிக்கிற புள்ளைங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? 

சரி விஷயதுக்கு வர்றேன்

இந்த படம் பார்த்ததுக்கு அப்பறம் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு, அதாவது போதிதர்மர் ஒரு தமிழர் அப்பிடின்னு டைரக்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாரு. எதை வச்சு சொல்லுறாரோ தெரியலை. சரி நம்ம சந்தேகத்த தீர்த்துக்கிடுவோமே அப்பிடின்னு ஓடுறா கைப்புள்ள கூகுளுக்கும் விக்கிபீடியாக்கும் தேடுனா ஹுகும் விஷயம் கிடைக்கலை. பல்லவர்களின் பூர்வீகம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

எல்லாம் யூகத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இருக்கு. முற்கால சோழர்களுக்கும் பிற்கால சோழர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதும் பிராமணர்கள் என்பதும் நான் தேடிய வரையில் கிடைத்த செய்தி.  இன்னும் சில வலைதளங்களில்அவர்கள் பாரசீகத்தில் இருந்து இந்தியாவிற்குள் வந்தனர்னும் பார்க்க முடியுது. அவர்கள்  தமிழர்கள் என்று எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலதிக குறிப்புகளுக்கு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

http://www.kamat.com/kalranga/deccan/pallavas.htm

http://www.civilserviceindia.com/subject/History/prelims/pallavas.html

http://www.iranian.com/History/2003/May/Pallava/index.html

இன்னும் கூகிளில் தேடினால் நிறைய கிடைக்கிறது ஆனா குழப்பம் தான் மிச்சம். இதை படிக்கும் நண்பர்கள் யாராவது போதிதர்மர் தமிழர் அப்பிடிங்கிறதுக்கு ஏதாவது ஆதாரம் கிடைச்சா கொஞ்சம்  கமெண்ட்-ல போடுங்களேன்..

பிற்சேர்க்கை :
இந்த பதிவை நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது இந்த வலைப்பூவை பார்வை இட்டவர்கள் எண்ணிக்கை (அதாங்க ஹிட்ஸ்)  ஒரு லட்சம் கடந்து இருக்கும். இதுவரை தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்துக்கொண்டு நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

இப்ப சொல்லுங்க காப்பி பேஸ்ட் தப்பா?

இன்னைக்கி காப்பி பேஸ்ட் பண்ணா நாளைக்கு விருது

கொஞ்சம் கீழே இருக்க வீடியோ எல்லாம் பாருங்கோ நம்ம ஆஸ்கார் நாயகன் எங்கே இருந்து எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு.  இன்னும் நிறையா இருக்கு கொஞ்சம் உங்க பார்வைக்கு.



















கடைசியா


இப்ப நீங்க முடிவு பண்ணிக்குங்க.

நீதி  : ஒருத்தர்கிட்ட இருந்து சுட்டா அது திருட்டு நிறையா பேரு கிட்ட இருந்து சுட்டா அது ஆராய்ச்சி அதுக்கு விருதும் கிடைக்கும்

திங்கள், அக்டோபர் 24, 2011

இப்பிடி ப்ரபோஸ் பண்ணனும் தெரியுதா?

 அது ஒரு கல்யாண வரவேற்பு, அபார்ட்மெண்ட்டில் இருந்த எல்லோரும் அழைக்கப்பட்டு இருந்தனர் அதில் ஒரு மனைவியை இழந்த தாத்தாவும், கணவரை இழந்த பாட்டியும் சந்தித்து கொண்டனர். இருவரும் தங்கள் நிலையை பகிர்ந்து கொண்டனர்.  விழா முடிந்து வெளியே வரும் போது தாத்தா கேட்டார்

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?"

கொஞ்ச நேரம் யோசித்த பாட்டி "சரி பண்ணிக்கிறேன்"

மறுநாள் காலை

"அவ என்ன சொன்னா சரின்னு சொன்னாளா இல்ல மாட்டேன்னு சொன்னாளா மறந்துட்டேனே" குழப்பத்தோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார்.   "என்ன ஒரு ஞாபக மறதி?" தன்னைத்தானே நொந்துகொண்டே சிறிது நேரம் யோசித்தவர் பாட்டியையே கேட்டுவிடுவது என்று அவர் ஃப்ளாட் நோக்கி புறப்பட்டார்

"வாங்க வாங்க" - பாட்டி

"நேத்து நான் உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டப்ப சரின்னு சொன்னீங்களா இல்ல மாட்டேன்னு சொன்னீங்களா?"

"சரின்னு தானே சொன்னேன்?"

"அப்பாடி ரொம்ப நேரம் குழப்பமாவே இருந்துச்சி இப்ப சந்தோஷமா இருக்கு"

"என்னை தேடி வந்ததுக்கு தாங்க்ஸ்ங்க"

"ஏங்க?"

"இல்ல நேத்து என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டது யாருன்னு மறந்துட்டேன்"

இன்றைய சிந்தனை


1.    இரண்டு முயல்களை விரட்டிச்சென்றால் இரண்டையும் இழக்க வேண்டி இருக்கும்

2.    மகிழ்ச்சியாய் இருப்பது கடினம் அல்ல ஏனென்றால் மகிழ்ச்சியை உருவாக்குபவரே நீங்கள் தான்

3.    நாம் வாழும் வாழ்க்கை மட்டுமே எந்த கதவை திறக்க அல்லது மூட வேண்டும் என்று முடிவு செய்யும்

4.    நாம் தள்ளிப்போடும் போது வாழ்க்கை வேகமாய் நகர்கிறது

5.    உங்களால் எது எல்லாம் செய்ய முடிகிறதோ அதுவே நீங்கள் ஆகிறீர்கள்

இன்றைய லொள்ளு







வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஐயோ ஐயோ முடியலைப்பா...

இன்னைக்கி தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், எதிர் பார்ததது போலவே ஆளும்கட்சி அறுவடை செஞ்சுக்கிட்டு இருக்கு பார்க்கலாம்.. 

இந்த பதிவை நீங்க படிக்கிற நேரம் இல்லை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருக்குற நேரம் எல்லா முடிவும் அறிவிச்சு முடிச்சு இருப்பாங்க. அதனால இன்னைக்கு சும்மா சிரிப்பு பதிவு படம் பாருங்க கருத்து சொல்லுங்க. 









கடைசியா இப்பிடி சிக்னல் விழுந்தா என்ன செய்யுறது?





டிஸ்கி  :

போர் அடிக்கிற மாதிரி இருந்தா கமெண்ட் போடாதீங்க ஆனா ஓட்டு அவசியம் போடுங்க. 

கடுப்பா இருந்தா ஓட்டும் வேணாம் நான் தலைவர் மாதிரி எதையாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். 

வியாழன், அக்டோபர் 20, 2011

இங்கே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறது தப்பா?

பொண்டாட்டிங்க அடிக்கடி மாடிக்கிட்டே இருக்குற என்னைப்போல அப்பாவிகளுக்கு இது சமர்ப்பணம்

உங்க வீட்டுல எப்ப பார்த்தாலும் சண்டையா இருக்கா?  எங்க வீட்டுல அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து முழிச்சுக்கிட்டு இருக்க 2 மணி நேரத்துல முக்காமணி நேரம் சண்டை போடவும் மிச்சம் இருக்க நேரம் சமாதானப்படுத்தவும் சரியா போயிடுதே என்ன பண்றதுன்னு யோசிச்சேன், எங்கே சண்டை ஆரம்பிக்குதுன்னு ஒரு பட்டியல் போட்டேன். அவங்க அதிகமா கேக்குறது எல்லாம்

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

3.    நான் குண்டாயிட்டேனா?

4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? 





சரி இப்ப என்ன பதில் சொன்ன எஸ்கேப் ஆகலாம்ன்னு யோசிச்சதுல கிடைச்சது தான் இது

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

என்ன தான் நாம நூறு யோசனையில இருந்தாலும் "உன்னை பத்தி தான், இந்த வாரம் எங்கே வெளியே கூட்டிக்கிட்டு போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்". அதே மாதிரி அவங்களை கூட்டிக்கிட்டு பார்க்குக்கோ இல்ல காய் வாங்கிட்டு வராவோ செய்யுங்க அப்பறம் இந்த கேள்வி உங்களை கேக்க மாட்டாங்க.  (நாம என்ன பொய் சொல்லிட்டு தண்ணி அடிக்க போகலாம்னு அவங்க இல்லாத நேரம் யோசிக்கலாம்)

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

பிடிக்கவே இல்லைன்னாலும் ஆமான்னு அடிச்சு (அவங்களை இல்லை) சொல்லிடுங்க, அப்பிடித்தான் நினைக்கிறேன் இல்ல ஆமான்னு சொன்னதான் ஒத்துக்குவியா இப்பிடி எல்லாம் பேசிடாதீங்க, அதே மாதிரி சொல்லுறப்ப கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க சலிப்புல பேசுற மாதிரி இருந்தாலும் பாணால்


3.    நான் குண்டாயிட்டேனா?

அப்பிடி எல்லாம் இல்லம்மா அப்பிடின்னு சொல்லணும் அப்பிடி இல்லாம கொஞ்சம் குண்டு ஆயிட்டே இல்ல எத வச்சு கேக்குறே இப்பிடி எல்லாம் கேட்டா உங்க இன்சூரன்ஸ் பணம் பட்டுவாடா பண்ணுறத்துக்கு நீங்களே தேதி குறிச்சிட்டீங்கன்னு அர்த்தம்


4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

இந்த கேள்வி ரோட்ல போகும் போது வரும் இல்ல யாராவது புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காங்கன்னு வீட்டுல ஒளரும் போது வரும் தயவு செஞ்சு இல்லவே இல்லைன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிடுங்க, அத விட்டுட்டு உன்னை விட அழகா இல்லைன்னு சொல்லிடாதீங்க விளைவு விபரீதமா இருக்கும் !!

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

பதில் சொல்ல முடியாத கேள்வி என்ன பதில் சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க ஹூம் அதனால வேற ஏதாவது கேள்வி கேட்டு அவங்கள திசை திருப்புறது மட்டும் தான் உங்களை காப்பாத்தும். உண்மையிலேயே உங்க மனசுல ஒரு தடவை பண்ணுண தப்பை இன்னொரு வாட்டி பண்ண மாட்டேன்ன்னு நினைக்குறது எனக்கு தெரியுது ஆனாலும் அதையும் சொல்லிதொலைச்சுடாதீங்க..  


எது எதுக்கோ நாம நம்மள / நம்ம கொள்கைகளை அட்ஜஸ்ட் பண்ணி போறோம் இல்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறோம்.  பொண்டாட்டி நம்ம கூடவே இருக்கிற ஜீவன் நாளைக்கு நம்மளால எழுந்து நடக்க முடியாத போது நம்ம பீயை அள்ளி போட்டு சுத்தம் பண்ணப்போறதும் அவங்க தான் அவங்களுக்காகவும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணுறதுல தப்பு ஒண்ணும் இல்லையே??







எப்பிடி அடிச்சுக்கிறாங்க பாருங்க



புதன், அக்டோபர் 19, 2011

இந்த படம் எல்லாம் எப்பிடி இருக்கு?


இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 

















கொசுறு : இன்னக்கி பதிவு எழுத நேரம் இல்ல சும்மா அதான் இப்பிடி

செவ்வாய், அக்டோபர் 18, 2011

சந்தோஷமா இருக்கணுமா?

உண்மையான சந்தோசம் விலை மதிக்க முடியாதது,  குறுகிய மனம் இருந்தால் அதை நம்மால் அனுபவிக்க முடியாது. பிறரின் பொய் நன்னடத்தையற்ற தன்மை நம் சந்தோஷத்தை பரிதாபம் ஆக்கிவிடக்கூடியது. நீண்ட நாள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற நினைப்பு பிறரின் செய்கைகளால் சலித்துப்போகும் ஆபத்துக்கள் உண்டு. பொய்கள் சுயநலங்கள் நிரம்பிய ஒரு சமூகத்தில் வாழ்வது அவ்வளவு சுலபம் இல்லை.  ஆனாலும் வாழவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.

நாம சிலருக்கு முக்கியமானவங்களா இருக்கோம், சிலர் நமக்கு முக்கியமானவங்களா இருக்காங்க. நமக்கு  தெரிஞ்சவங்களோட சந்தோஷமும் துக்கமும் நம்மள அதிகம் பாதிக்கும்.  அடுத்தவங்க சந்தோசத்துக்கு நாம உத்திரவாதம் தர முடியாட்டியும், அவங்களோட துக்கத்துக்கு நாம காரணம் இல்லாம இருந்துக்கலாம் இல்லையா. நம்மள சுத்தி இருக்குறவங்க சந்தோஷமா இருந்தாலே நாமளும் சந்தோஷமா இருக்கலாம்.    

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ",  "சாரி தெரியாம நடந்துடுச்சு" , "இதெல்லாம் இங்கே சகஜம்"   இங்கே சொன்னது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. எல்லாம் தப்பு நடந்த பின்னாடி அதை சமாளிக்க சொல்லுற வாசகங்கள்.  எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு தாக்கம் இருக்கலாம்.

ஒரு மனுசனோட தாக்கத்திற்கு உட்படாதவங்க யாரும் இருக்க முடியாது அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம், இல்லை கெட்ட விஷயமாகவும் இருக்கலாம். ஆனா எல்லோரும் நான் நல்லவன்ன்னு காட்டிக்கிறதுக்கு நிறைய மெனேக்கெடுறாங்க ஆனா அது ரொம்ப நாள்  நிலைக்காது நிஜமாவே நல்லவங்களா இல்லாட்டி. எப்பயுமே ஒரு காரியம் நடந்தா அதுல இருக்க உண்மையை அலசி அதை மட்டும் எடுத்துக்கணும், ஏன்னா பொய்யில் மூழ்கி வாழ முயற்சி பண்ணுவதை விட வேறு பெரிய வதை வாழ்க்கையில் கிடையாது.

வாழ்க்கையில் நம்ம சந்தோஷம் நாம் எவ்வளவு உண்மையா இருக்கோங்கிறதை பொறுத்து தான் இருக்கும். பொய் தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் ஒரு பெரிய புயலை வீசவே செய்கிறது. உலகில் நடந்த பெரிய யுத்தங்கள் இது போன்ற பொய்களால் தூண்டப்படவை தான்.  இதை கண்டு கொள்ளும் அறிவே நம்மை துன்பங்களில் இருந்து மீட்க்கும்

எல்லோரும் என்ன யோக்கியங்களான்னு கேக்குறவன் எப்பயுமே ஒரு யோக்கியனா இருக்க முடியாது. விளம்பரம் இல்லாமல் நாம் செய்யும் எந்த ஒரு நல்ல செயலும் கவனிக்கப்படுவதில்லைங்குறதால நாம நல்லது செய்யாம இருக்க வேணாமே? அட்லீஸ்ட் நமக்கு தெரிஞ்சவங்களுக்காவது முடிஞ்ச நல்லது செய்யலாமே?

எந்த ஒரு பொருள் மேலயும் பிறருக்கு இருக்கும் உரிமையை நாம மதிக்காத போது அந்த பொருள் மேல அவருக்கு இருக்குற உரிமை ஆபத்துக்குள்ளாகுதே. உறவுகள்ல பரஸ்பர நம்பிக்கை ரொம்ப அவசியம் அந்த நம்பிக்கை கெட்டுப்போகாதவரை அந்த உறவில் சந்தோஷம் இருக்கும், எப்ப குடுத்த வார்த்தையை காப்பாத்த முடியாம போகுதோ (என்ன காரணம் வேணுமின்னா இருக்கலாம்) அந்த உறவில் இருக்கும் சந்தோஷம் செத்துப்போகும், அது எப்படிப்பட்ட உறவாய் இருந்தாலும்.

உங்களால செய்ய முடியிற விஷயங்களை மட்டும் செஞ்சு தாரேன்னு ஒத்துக்கோங்க மத்த எதையும் ஒத்துக்காதீங்க, முடியாதுன்னு மறுத்துடுங்க. சொன்ன வார்த்தையை காப்பத்துறவங்க தான் கோபுரம் மதிக்கப்படுறாங்க மத்தவங்க எல்லாம் குப்பை மாதிரி. ஒரு தடவை வார்த்தை தவறிட்டா அந்த வாய்ப்பை இன்னொரு முறை நமக்கு கிடைக்கும்ன்னு சொல்லறதுக்கு இல்லை.

எல்லா கடமையும் சரியா செஞ்சா சந்தோஷம் உங்ககிட்டயே இருக்கும், நாம பொறக்கும் போதே நம்ம கிட்ட இருக்கிறது பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை.  அதுக்கப்பறம் மற்றவர்கள், நண்பர்கள், சமுதாயம் உலகம் எல்லாமே நம்ம கடமை ஜாஸ்தி ஆயிக்கிட்டே தான் போகுது.

குழந்தையின் அற்ப முயற்சியும், புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க ஆலோசனையும் சட்டென புறக்கணிக்கப்படுவதும் கண்டு கொள்ளப்படாமல் போவதும் இயல்பே அதற்கும் காரணங்கள் இருக்கலாம் சரியான திட்டமிடப்படாமல் இருந்து இருக்கலாம்,  அதுவே வேறுபட்ட நியாயங்களாக உருவெடுக்கும் "என்னை கேட்டு தான் பெத்தீங்களா?"  போன்ற வெடிக்கும் நியாயங்களாக அவை மாறிவிடும அபாயம் உண்டு.  சின்ன விஷயமா இருந்தாலும் ஒரு ஊக்கம் குடுத்தா அவங்க தவறுகளை மென்மையா சுட்டிக்காட்டுனா அந்த உறவில் சந்தோஷம் இருக்கும்.

அதே மாதிரி தான்  உழைப்பும், எல்லா நேரத்திலயும் இனிமையாய் இருப்பது இல்லை ஆனாலும் சலிப்புடன் சோம்பேறிகளாய் வாழ்வதை விட உழைக்கிறது சந்தோஷம். சுறுசுறுப்பாக இல்லாதவர்கள் அதிக வேலையை சுற்றி இருப்பவர்கள் மேல் திணித்து விடுகிறார்கள். சோம்பேறிகளுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம் அவங்க நம்மளையும் சோர்வடைய வச்சுடுவாங்க, முடிஞ்சா அந்த மாதிரி ஆளுங்களோட வேலை செய்யாம இருக்குறது உத்தமம்.

நம்ம பிரச்சனையை நாம் உற்று பார்க்க தவறும் போது, நமக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் பயனற்றே போகும். எனவே பிரச்சனைகள் என்று வரும் போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, உண்மையான நிலையினை பிரித்து பார்க்க ஆரம்பித்தால் எந்த பிரச்சனையும் எளிதில் தீர்க்க முடியும்.

எந்த ஒரு விஷயத்தையும் யார் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை பொய்களை கண்டுபிடிக்க தெரிஞ்சுக்கணும், நம்ம கிட்ட சொல்லுறவாங்க சரியான்னு அவங்களுக்கே  தெரியாம நம்மகிட்ட சொல்லலாம். சிலர் தங்களோட சுயநலத்துக்கு பொய்யான தகவல்களை பரப்பிடுறாங்க.  அதோட விளைவுகளை பத்தி அவங்க கவலைப்படுறது இல்லை. நம்ம காதுக்கு வர்ற தகவல்களை எல்லாம் அப்பிடியே எடுத்துக்க ஆரம்பிச்சோம்னா நம்மள அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

வாக்கையில முன்னேறி இருக்கிறவங்களை பாருங்க எப்பவும் அவங்க படிக்கிறதை நிப்பாட்ட மாட்டாங்க, இதுக்கு மேல படிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லைன்னு நினைக்கிறவங்க அதுக்கு மேல முன்னேறாம போயிடுவாங்க. படிக்கிறத படிக்கிறதோட நிப்பாட்டமா அதை தொடர்ந்து பயன் படுத்தவும் செய்யணும் அப்ப தான் படிப்பும் பலன் தரும்.

கடைசியா

மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள். பிறர் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்விதமே நீங்கள் பிறரை நடத்துங்கள்.  தகுதியான செயல்கள் செய்வது மட்டுமே நமக்கு மகிழ்ச்சியை தரும், எந்த செயல் நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் 

இன்றைய லொள்ளு


வெள்ளி, அக்டோபர் 14, 2011

இப்பிடி எல்லாமா இருக்கு?

1.    ஒரு மணி நேரம் சுவத்துல தலையை முட்டுனா  நம் உடல் இழப்பது 900 கலோரி (மெதுவா முட்டணும் மண்டை உடைஞ்சா சங்கம் பொறுப்பில்ல)

2.    உடம்பில் இருக்கும் கடினமான தசை நாக்கு

3.    ஆங்கிலத்தில் சின்ன வாக்கியம் "I AM"

4.    1865 பிப்ரவரி மாதம் பௌர்ணமி இல்லாத மாதம்

5.    1 கலோன் டீசலுக்கு 6 இன்ச் தான் போகுமாம் "The cruise liner  Queen Elizabeth II"

6.    நீங்க 8 வருஷம் 7 மாசம் 6 நாள் விடாம கத்துனா கிடக்கிற சக்தியை வச்சு ஒரு கப் காஃபி மட்டும் சூடாக்கலாமாம்.

7.    பூனை நூறு விதமாய் சத்தம் எழுப்பும் திறன் வாய்ந்ததாம்

8.    பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கருவிழி

9.    எலக்ட்ரிக் சேரை கண்டு பிடிச்சவர் ஒரு பல்மருத்துவராம்

10.    பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையதாம்



இன்றைய சிந்தனை


1.    வாழ்க்கையை வார்த்தைகளால் அனுபவிக்க முடியாது எனவே வாழ்ந்தே அனுபவியுங்கள்

2.    நீங்களே மற்றவர்களுக்கு கற்றுத்தருகிறீர்கள் உங்களை அவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று

3.    நான் பேசத்தெரியாமல் இருந்த போது கேக்காமலே எல்லாம் கிடைத்தது ஆனால் பேச ஆரம்பித்த பின் கேட்டதில் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை #குழந்தை பருவம் இனிது

4.    வாழ்க்கையில் நீளமான செயல் நாம் வாழ்ந்து கொண்டே இருப்பது

5.    ஒரு வேளை உணவு இல்லை எனில் அந்த வாழ்வு வாழ்வதற்கே தகுதி இல்லாதது

இன்றைய லொள்ளு

ஆசிரியர்கள் மன்னிக்க







வியாழன், அக்டோபர் 13, 2011

ஆம்பளைங்களுக்கு குழந்தை பிறந்தா ? (நானா யோசிச்சேன்)

என்னடா வில்லங்கமா ஏதோ மேட்டர் சொல்லப்போறானேன்னு பயமா இருக்கா?, சும்மா. சரி விசயத்துக்கு வருவோம். ஆம்பளைங்களும் பிள்ளை பெத்துகிற மாதிரி இருந்திருந்தா என்னன்ன மாற்றங்கள் உலகத்தில இருந்து இருக்கும்?

1.    சம்பளத்தோட மகப்பேறு விடுமுறை ஒரு ரெண்டு வருஷமாவது இருந்து இருக்கும்

2.    வயித்தில விழுற சுருக்கம் காணாமலே போற மாதிரி ட்ரீட்மெண்ட் கண்டுபிடிச்சு இருப்பாங்க

3.    பிரசவத்துக்கு அப்பறம் விழுகுற எக்ஸ்ட்ரா சதையை குறைக்க நல்ல மருந்து கண்டுபிடிச்சு இருப்பாங்க

4.    நார்மல் டெலிவெரி இல்லாமலே பண்ணியிருப்பாங்க எல்லாம் சிசேரியன்

5.    குடும்ப கட்டுபாடு தீவிரமா செயல்படுத்தி இருப்பாங்கே

6.    ரெட்டைப்பிள்ளை பெத்துக்கணும்ன்னு யாரும் ஆசைப்பட மாட்டாங்க

7.    வாந்தி தான் கொடூரமான வியாதின்னு அறிவிச்சு இருப்பாங்க

உங்களுக்கும் இன்னும் ஏதாவது தோணுனா கமெண்ட்-ல போடுங்க


இன்றைய சிந்தனை


1.    பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான் வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால் இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே போகப்போகிறீர்கள் என்று பொருள்

2.    ஜெயித்த குதிரையும் அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம் வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும் போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.    வாழ்க்கையும் அப்படித்தான்

3.    உங்களை பிறர் தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள் உங்களை தாழ்வாக நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்

4.    உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாகவே இருக்கிறது அதில் பிறர் வாழ்க்கையை வாழாதீர்

5.    வாழ்க்கை ஆசீர்வாதங்களால் நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய் அதை காணாமல் விட்டு விடுகிறோம்.

6.    வாழ்க்கை எப்போதும் இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது எடு அல்லது விடு 

இன்றைய லொள்ளு


எங்கேயெல்லாம் கடை போட்டு இருக்காங்கே!!



புதன், அக்டோபர் 12, 2011

அதிர்ச்சி வைத்தியம் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

அது K.K.V  மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்

DEEN  போர்ட்டுக்கு பின் அமர்ந்து இருந்த சுப்புவிடம் "சார் உங்களை பார்க்க நெட்வொர்க் இஞ்சீனியர் கணேஷ் வந்து இருக்கார், வரச்சொல்லவா சார்?"

"உள்ள அனுப்பு"

"சொல்லுங்க கணேஷ் எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்"

"ஆமா சார் நம்ம இ-மெயில் செர்வரை யூஸ் பண்ணி தான் அந்த மெயில் எல்லாம் போயிருக்கு"

"எப்பிடி கண்டு பிடிச்சீங்க?"

"எல்லா மெயிலையும் சர்வர்ல ஒரு காப்பி இருக்க மாதிரி ஏற்கனவே செட் பண்ணி வச்சு இருக்கேன், அப்புறம்  கீவோர்ட் ஃபில்டர் பண்ணி இந்த மெயில் எல்லாம் எடுத்தேன், இங்கே பாருங்க பிரிண்ட் அவுட்"  - டேபிள் மேல் வைத்தார் கணேஷ்

அதை பார்த்துக்கொண்டே இருக்கும் போதே மொபைல் அழைக்க மொபைல்-ஐ பார்த்தார் சுப்பு "VISHNU INFORMER" calling.





கொஞ்சம் அதிர்ச்சி ஆகி கணேஷ் இங்கே பாருங்க இது வரை மெயில் மட்டும் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப அந்த பையன் மொபைல் நம்பர்ல இருந்து கால் வர ஆரம்பிச்சுடுச்சி. நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்துக்கொண்டார் சுப்பு.

"ஃபோனை எடுங்க சார்"

டொய்ங்க் டொய்ங்க் "எங்கேஜ் டோன் வருது கணேஷ்"

"சரி நீங்க ரீ-டயல் பண்ணுங்க சார் பார்ப்போம்"

டயல் செய்தார் சுப்பு "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை"ன்னு வருது கணேஷ்  

"சார் இது கொஞ்சம் எல்லை மீறி போற மாதிரி இருக்கு போலீஸ்க்கு போயிடலாமா?"

"போலீஸ்க்கு போனால் ஹாஸ்பிடல் பேர் கெட்டுடும் பார்க்கலாம் எனக்கு என்னவோ யாரோ இந்த பிரச்சனையை பெருசாக்கலாம்ன்னு விளையாடுற மாதிரி தெரியுது. ஆனா யாருன்னு தான் தெரியல"

ஏற்கனவே நம்ம குடுத்த தப்பான ட்ரீட்மெண்ட்-ஆல குமார் செத்து போயிட்டதை கண்டு பிடிச்சதால தான் அந்த விஷ்ணு பயலையும் போட்டு தள்ளுனோம் ஆனா இது என்ன புது பிரச்சனை? மனசுக்குள் நினைத்தவாறே

"சரி கணேஷ் வேற ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைச்சா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க"

"சரி சார்" குரூர புன்னகையோடு வெளியேறினான் கணேஷ்

"டீன் பயப்பட ஆரம்பிச்சுட்டாரு இனி இந்த மாதிரி தப்பு இந்த ஹாஸ்பிடல்-ல நடக்காது" - கோகுலுடன் போனில் கணேஷ்

"அவருக்கு உன் மேல ஒண்ணும் சந்தேகம் வரலியே?"

"உன் இனிஷியல்-ஐ பார்த்து நீ போலீஸ் SP ன்னு நினைச்சுட்டாரு, நீ போலி SP-ன்னு தெரியாது ஹா ஹா"

"சரி விஷ்ணு நம்பர்-ல இருந்து கால் எப்பிடி போச்சு?"

"அதுவும் நம்ம ஹாஸ்பிடல்-ல இருக்க IP ஃபோன்ல CLI (caller line Identification) நம்பரா அந்த ஃபோன் நம்பர் செட் பண்ணி டயல் பண்ண சொன்னேன். இது எப்படி இருக்கு?" 

" நீ குடுக்குற ஷாக் ட்ரீட்மெண்ட் நல்லா தான் வேலை செய்யுது"

செவ்வாய், அக்டோபர் 11, 2011

சொல்ல மறந்த கதை - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

குறிப்பு : இது சவால் சிறுகதைப் போட்டி –2011 க்கான என்னுடைய இரண்டாவது சிறுகதை


"சந்துரு என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? யார் ஃபோட்டோ அது? "




குரல் கேட்டு திரும்பிய சந்துரு பின்னால் பிரின்சிபால் நிற்பதை கண்டு கொஞ்சம் அதிர்ச்சி ஆகி எழுந்து நின்றான்

"குட் மார்னிங் சார்"

"வேலை நேரத்தில இப்பிடி எல்லாம் பெர்சனல் வொர்க் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு? இனி இப்பிடி நடந்துக்கிட்டா உங்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டி வரும், இது உங்களுக்கு கடைசி வார்னிங்க்"

"இல்லை சார் ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருக்கு அதுக்கான க்ளூ தான் இந்த ஃபோட்டோ. நம்ம காலேஜ் பசங்களும் கலந்து கிட்டா நல்லா இருக்கும்ன்னு தான் டீடெயில்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நீங்க பர்மிஷன் குடுத்தா நோட்டீஸ் போர்டு-ல போடுட்டுடலாம்.  தப்புன்னா மன்னிச்சூடுங்க சார்"

"ம்.. வெரி குட் ஐடியா அதுவும் சரி தான் பசங்ககளுக்கு இப்பிடி எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிடிஸ் இருக்கணும். நோட்டீஸ் போர்டு-ல ஒட்டீட்டு சர்க்குலர் அனுப்பிடுங்க" 

"தாங்யு சார்"   சந்தோசமாய் அடுத்த வேலையை ஆரம்பித்தான் சந்துரு


திங்கள், அக்டோபர் 10, 2011

புதிய தென்றல் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

மங்களகரமாய் நடந்து கொண்டு இருந்தது அந்த கல்யாணம், உற்றார் உறவினர் யாருமில்லை ஆயினும் நண்பர்கள் உடன் இருக்க இன்னும் சில நிமிடங்களில் தம்பதி சமேதராய் ஆகப்போகும் சந்தோஷம் ராஜூவுக்கும் உஷாவுக்கும்.  ஐயர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நண்பர்கள் மாப்பிளையை நச்சரித்துக்கொண்டே இருக்கும் போது கோவில் வாசலில் சலசலப்பு. 

"போலீஸ் வருது ராஜு" - வசந்த் சொன்னான்

"நீ பயப்படாதே நாங்க இருக்கோம்.  நீங்க ரெண்டு பெரும் மேஜர் யாரும் எதுவும் செய்ய முடியாது" - இது விஷ்ணு

"ஐ ஆம் சாரி ராஜு, உங்களை தொல்லை பண்ணுறோம்ன்னு நினைக்காதீங்க நேத்து காலையில உங்கப்பா ரகுவை யாரோ மர்டர் பண்ணியிருக்காங்க. உங்களை டிரேஸ் பண்ணி கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் ஆகி இருக்கு.  எங்களுக்கு உஷா மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு, கொஞ்சம் விசாரணை பண்ணனும்"  - சொன்ன இன்ஸ்பெக்டர் கருணா தொடர்ந்தார்  "இனி நீங்க தான் சொல்லணும் நாங்க எப்ப எங்க விசாரணை பண்ணனும்ன்னு"

"சார் S.P. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன் கவலை வேண்டாம்"   நேற்று வந்த SMS ஐ டெலீட் செய்து  கொண்டே "சரி இப்ப கல்யாணம் முடியட்டும் அப்புறம் சென்னைக்கு போய் விசாரணையை துவங்கலாம் என்ன சொல்லுற ராஜூ?"  - கேட்டார் மேனேஜர் பாபு

கண்கள் கலங்கி இருந்தாலும் மனம் கலங்காமல் "பாபு சார் சொல்லுறது மாதிரியே செய்யலாம. அது சரி நீங்க எப்பிடி உஷாவை சந்தேகப்படுறீங்க?"

"எங்ககிட்ட அதுக்கான ஆதாரம் இருக்கு"

ஆறு மாதங்களுக்கு முன்

"நான் பெத்த பிள்ளை இப்பிடி என் நெஞ்சுல இடி அள்ளி போடுதே,  ஏண்டா இப்பிடி பண்ணினே?"  அழுத படி கேட்டாள் ராஜூவின் அம்மா

"நாங்க உனக்கேத்த பொண்ணா பார்க்கமாட்டோம்ன்னு நினைச்சியா ராஜு? அதுவும் ஒரு தராதரம் இல்லாத பொண்ணை போயி பார்த்து இருக்கியே உனக்கு வேற பொண்ணே கிடைக்கலயா?"  இது அக்கா

ரகுவின் வருகையால் அமைதியானது வீடு, அம்மாவின் விம்மல் மட்டும் இன்னும்

"என்னாச்சு?" கணீர் குரலில் ரகு கேக்க

"என்னான்னு சொல்லுவேன்" தொடங்கிய அம்மா தயங்கிய படியே சொல்லி முடிக்க

ரகு கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார்

"ராஜு..  அந்த பொண்ணை நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுட்டு வா" சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்

மறுநாள்

"சொல்லும்மா உன்னைப்பத்தி, உங்க குடும்பத்தை பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேன்? சொன்ன ரகு திரும்பி ராஜூவை பார்த்து "ராஜு நீ கொஞ்சம் வெளியே இரு"

கொஞ்ச நேரத்தில் கலங்கிய கண்ணீரோட வெளியே வந்த உஷா ராஜுவை பார்த்தும் பார்க்காமல் விறுவிறுவென வெளியேறினாள்.

"என்னப்பா ஆச்சு" உள்ளே வந்த ராஜு ரகுவைப்பார்த்து கேட்டான்

"அவளுக்கு புரிய வைக்க வேண்டியது எல்லாம் புரிய வச்சுட்டேன்"

"நீங்க அவகிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தேவை இல்லை, எங்க கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கப்போறீங்களா இல்லையா?"

ராஜூவிற்க்கு பதில் ஏதும் சொல்லாமல் "நான் ஆஃபிஸ்க்கு கிளம்புறேன் அம்புஜம்" மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார் ரகு.

"சொல்லுங்க ரகு இந்த கொலையை யார் செஞ்சு இருப்பாங்க நீங்க நினைக்கிறீங்க?" கருணா

"எனக்கு தெரியல, நான் அப்பா கூட பேசி ஒரு வாரம் ஆச்சு,    கடைசியா உஷா எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு பேசுனுதுதான், அதுக்கப்பறம் நா வீட்டுல கூட தங்கலை வேணும்மின்னா எங்க மேனேஜர் பாபு கிட்ட கேட்டுப்பாருங்க நான் அவன் ரூம்-ல தான் தங்கி இருந்தேன். நாங்க திருப்பதி வந்தும் இன்னையோட மூணு நாள் ஆய்டுச்சு வேணும்ண்ணா நாங்க தங்கி இருந்த ஹோட்டல் ரிஜிஸ்டர்-ஐ செக் பண்ணி பாருங்க" 

"அப்ப நீங்க தான் உங்க அப்பாவை தீர்த்துக்கட்ட ஆள் ஏற்பாடு செஞ்சீங்களா"?

"மொதோ உஷான்னு சொன்னீங்க இப்ப நான்தான் திட்டம் போட்டேன்னு சொல்றீங்க, எங்கப்பா அப்பிடி என்னை வளக்கலை"

"உங்க கல்யாணத்தில உங்கப்பாவுக்கு இஷ்டம் இல்லை அப்படித்தானே?"

"ஆமா சார்"

"அவர் செத்தா தான் உங்க கல்யாணம் நடக்கும்னு நெனைச்சு இப்படி செஞ்சு இருக்கலாம் தானே?"

"bullshit உங்க கற்பனை எல்லை மீறுது, உங்களால் கண்டுபிடிக்க முடியலேன்னா யார் மேல வேணா பழி போடுவீங்களா?"

"இல்ல மிஸ்டர் ராஜு உங்கப்பா இறந்த கொஞ்ச நேரத்தில உங்க நண்பர் விஷ்ணு எஸ்‌பி கோகுலுக்கு அனுப்புன எம்‌எம்‌எஸ் உங்க மேல சந்தேகம் வர காரணம்" 

"அப்பிடி என்ன MMS?"

"MR கோகுல்

S W H2  6F இது தான் குறியீடு கவனம்" - விஷ்ணு  

"இங்க இமேஜ்-ல இந்த பிளாஸ்டிக் கார்ட்-ஐ பாருங்க அதுல இருக்க S W H2  6F இந்த நம்பர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?" 

"தெரியலையே"

"உஷா கிட்ட கேளுங்க"

"உஷா இது என்ன நம்பர் உனக்கு தெரியுமா? "

"இது இது என் பாங்க் லாக்கர் கோட். என்னோட சம்பளத்தில வாங்குன நகை எல்லாம் இதுல தான் இருக்கு" 

"இது உங்கப்பா பெட்க்கு கீழே இருந்து தான் போட்டோ எடுத்து அனுப்பி இருக்கார் விஷ்ணு" 

"இருக்காது இது லாக்கர் சாவியோட சேர்த்து தான் வச்சு இருக்கேன் இருங்க என் பேக்-ல இன்னும் இருக்கு, இதோ பாருங்க"

லாக்கர் சாவியை பார்த்த கருணா கொஞ்சம் குழப்பத்துடன் S.P. கோகுலை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்

"சார் நாம சந்தேகப்பட்டது மாதிரி இந்த கொலையை அவங்க செஞ்சு இருக்க மாதிரி தெரியலை சார்"

"எதை வச்சி சொல்லுறீங்க கருணா"

"அவங்க காலை 6 மணியில இருந்தே கோயில்ல தான் இருக்காங்க, கொலை நடந்தது 6 : 15 க்கு, அதுவும் இல்லாமா நாம க்ளூ-வா நினைச்ச அந்த பிளாஸ்டிக் கார்ட்-ல ஏதோ தப்பு நடந்து இருக்கு"  

"சரி நான் கிளம்பி ஸ்டேஷன்க்கு வர்றேன்.  நீங்க கலெக்ட் பண்ண எவிடெண்ஸ் எல்லாம் பிரிண்ட்அவுட் எடுத்து வையுங்க. அப்பறம்  ஜி‌எச்க்கு போயி போஸ்ட் மர்ட்டம் ரிபோர்ட் வாங்கிட்டு வாங்க, அப்பிடியே அந்த விஷ்ணுவை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க. "



போலீஸ் ஸ்டேஷன்

எவிடெண்ஸ்களை பார்த்துக்கொண்டு இருந்தார் கோகுல் அப்போது மொபைல் அழைக்க எடுத்தார் VISHNU INFORMER Calling .






"சொல்லுங்க விஷ்ணு"

"சார் நான் கொஞ்சம் வர லேட் ஆகும் ஆஃபிஸ் வரை போக வேண்டி இருக்கு முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடுறேன்"

"சரி சீக்கிரம் வந்துடுங்க"

"ஏதாவது சாப்பிடுறீங்களா, காலையில இருந்தே ஒண்ணும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க மணி இப்ப நாலு ஆச்சு"

"சரி சார்"

"ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வாய்யா வாசலில் இருந்த கான்ஸ்டபிள்-ஐ அனுப்பினார். நல்ல சாப்பாடா வாங்கிகிட்டு வா இது கல்யாண சாப்பாடு" - கோகுல்

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரிபோர்ட் இப்ப வந்துடும், உங்க மேல இருக்க சந்தேகம் தீர்ந்துடுச்சுன்னாலும்  எப்ப நாங்க விசாரணைக்கு வரணும்

"விஷ்ணு..  இந்த பிளாஸ்டிக் கார்டை எங்க இருந்து எடுத்தீங்க?" 

"ராஜு அப்பாவோட பெட்டுக்கு கீழே இருந்து சார்"

"சரி ரகு இப்ப எங்கே இருக்காரு? அதை மட்டும் சொல்லிடு உன்னை விட்டுடுறேன்"

"என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியலை" 

"இந்த கொலையை பத்தி போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணது யாரு?"

"நான் தான் சார்"

"நீ எதுக்கு நேத்து காலையில ராஜூ வீட்டுக்கு போனே?"

"அது வந்து வந்து..."

"சொல்லு உண்மையை சொல்லு இல்லை உள்ள தள்ளி முட்டிய பேத்துடுவேன்"

"டாய் எங்கப்பாவை கொன்னுட்டு உஷா மேல பழி போட பார்த்திய ஏண்டா இப்டி பண்ணே?"

பாய்ந்த ராஜூவை அமைதிபடுத்தினார் கோகுல்

"கொஞ்சம் அமைதி ராஜூ உங்கப்பா சாகலை"

"என்ன சொல்றீங்க சார்?"

"யெஸ் அவர் இன்னும் உயிரோட தான் இருக்கார், இப்ப விஷ்ணுவே உண்மைய சொல்லுவான், சொல்லு விஷ்ணு என்ன நடந்துச்சு"

"சொல்லிடுறேன் சார்"

"ராஜூ அவங்க வீட்டுக்கு ஒரே பையன், அவன் உஷாவை கல்யாணம் பண்ணிக்கிறது அவருக்கு புடிக்கலை,  உஷாகிட்ட அதை வெளிப்படையாவும் சொல்லிட்டாரு. ஆனாலும் ராஜூவை கண்வின்ஸ் பண்ண முடியல. அவன் இன்னைக்கு கோயில்ல கல்யாணம் பண்ணப்போறான்னு தெரிஞ்சு துடிச்சு போயிட்டாரு. இந்த கல்யாணத்தை எப்பிடியாவது நிறுத்திடணும்ன்னு அவர் எனக்கு முந்தாநேத்து ராத்திரி  எனக்கு ஃபோன் பண்ணினார்

"விஷ்ணு,  ராஜூ பண்ணுறது எனக்கு புடிக்கலை, இந்த கல்யாணம்  நடக்கக்கூடாது"

"என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க செஞ்சுடுறேன்"

"எனக்கும் என்ன செய்யுறதுன்னு தெரியல, ஆனா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது" 

"அப்ப நீங்க செத்துடுங்க"

"என்ன சொல்லுற விஷ்ணு"

"பயப்படாதீங்க சார் நிஜமா இல்ல சும்மா, அதாவது உங்க சைஸ்-ல ஒரு டெட் பாடி-ய உங்க ரூம்-ல உங்க டிரஸ் மாட்டிவிட்டு போட்டுடுவோம், மொகத்த கொஞ்சம் சிதைச்சு விட்டுட்டா அடையாளம் தெரியாது. பழியை அந்த பொண்ணு மேல போட்டுடலாம் என்ன சொல்றீங்க? " 

"நீ சொல்லுறதும் சரிதான்,  போன வாரம் அந்த பொண்ணு என்னை பார்க்க வரும்போது ஒரு சாவியை ஏன் கையில் குடுத்து " இது என் லாக்கர் சாவி 50 பவுன் நகையை சேர்த்து வச்சு இருக்கேன்"ன்னு சொன்னா. அந்த கார்ட்-ஐ எப்பிடியாவது என் பெட்டுக்கடியில போட்டுட்டா எல்லோரும் அந்த பொண்ணை மட்டும் தான் சந்தேகப்படுவாங்க"

"சரி சார் அப்பிடியே செஞ்சுடுவோம்"

அப்பறம் அவர் சொன்ன மாதிரியே செட்டப் செய்துட்டு போலீஸ்க்கு தகவல் குடுத்தேன் 

"அது எல்லாம் சரி அந்த பிளாட்டிக் கார்ட்-ல இருந்த எழுத்தில கடைசி எழுத்து மட்டும் ஏன் மாத்துன" 

அது வந்து சார் "பாபு சார் சொன்னார்ன்னு... "

"என்ன சொன்னார்? முழுசா சொல்லு "

"ராஜூவோட அப்பா பேசி முடிச்சதுக்கப்பறம், நான் எங்க மேனேஜர் சார் கிட்ட விசயத்த சொன்னேன்" 

"இப்ப என்ன சார் பண்ணுறது உஷாவும் பாவம்"

"சரி அந்த கார்ட்-ல என்ன எழுதி இருந்துச்சுன்னு சொன்னே"  

"S W H2  6P"

"சரி அந்த கடைசியா இருக்க P-ஐ F-ஆ  மாத்திடு"

இது தான் சார் நடந்துடுச்சு

"சரி ராஜூ இனி இந்த கேஸ்-ல என்ன செய்யனுமோ அதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஜாலியா உங்க கல்யாண வாழ்க்கையை ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். "

சொன்ன கோகுலிடம்

"தாங்யு சார்" சொல்லியபடி வெளியே வந்தனர் ராஜூவும் உஷாவும்