வியாழன், மே 19, 2011

இப்படியும் சில காதல்

திருமணத்திற்கு முன்

உன்னை சந்தித்த போது
பேச பயந்தேன்

பேச ஆரம்பித்த போது
கைகள் பற்ற பயந்தேன்

கைகள் பற்றிய போதோ
உன்னை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்

இப்போது உன்னை காதலிக்கிறேன்
ஆனால் உன்னை இழந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்


திருமணமான சில மாதங்களுக்கு பின் 

காதல் இடும்பை தரும் சில நேரம்
இடும்பை தராவிட்டால் அது காதல் இல்லை என்று உணர்ந்தேன்



பிரிந்து சென்ற பின்

எனக்கு தெரியும் இன்று நீ என்னுடன் இல்லை
தனிமையின் துணையோடு இரவில்
உறங்காமல் காத்து இருக்கிறேன்
என்றேனும் நீ திரும்பி வருவாயென

2 கருத்துகள்:

பாலா சொன்னது…

அருமையான வரிகள்....

cheena (சீனா) சொன்னது…

கவிதை நல்லாவே இருக்கு ரமேஷ் பாபு - நட்புடன் சீனா