புதன், ஏப்ரல் 27, 2011

நேரத்தை வெற்றிகொள்வோம்


ஒரு நாள் ஒரு நேர மேலாண்மை நிபுணர், கல்லூரி மாணவர்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. எப்பிடி எல்லாம் நேரத்தை கையாளணும், என்ன மாதிரி டிரிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணலாமுன்னு சொல்லி குடுத்துக்கிட்டு இருந்தாரு. கடைசியா இது கேள்விக்கான நேரம், நான் கேட்கப்போற கேள்விக்கு நீங்க பதில் சொல்லனும் அப்பிடின்னாரு.

ஒரு பெரிய பாட்டில் ஒண்ணு எடுத்து டேபிள் மேல வச்சாரு, அதுல முதல்ல பெரிய கல்லா எடுத்து போட்டாரு கொஞ்ச நேரத்தில பாட்டில்-ல கல்லை போடுறதுக்கு இடமில்லை. இப்ப பசங்களைப்பார்த்து கேட்டாரு பாட்டில் நிறைஞ்சிருச்சா? பசங்க சொன்னாங்க ஆமான்னு.

உடனே அவரு இல்லை அப்பிடின்னு சொல்லிட்டு சின்ன கல்லா எடுத்து போட்டாரு, பெரிய கல்லுக்கு இடையில இருந்த எடத்தில சின்ன கல்லு எல்லாம் போக ஆரம்பிச்சது, இப்ப கேட்டாரு பாட்டில் நிறைஞ்சுடுச்சா? இப்ப பசங்க கொஞ்சம் உசார கொஞ்சம் நிறைஞ்ச மாதிரி இருக்கு அப்பிடின்னாங்க.

திரும்பவும் அவரு இல்லைன்னு சொல்லிட்டு இப்ப மண்ணு எடுத்து உள்ளே போட ஆரம்பிச்சாரு, மண்ணும் உள்ளே போக   ஆரம்பிச்சுச்சு கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கேட்டாரு இப்ப பாட்டில் நிறைஞ்சுருச்சா அபபிடின்னு இப்ப பசங்க ஆமான்னு சொல்ல, அவரு திரும்பவும் தண்ணிய எடுத்து ஊத்த ஆரம்பிச்சாரு, தண்ணியும் உள்ளே போக ஆரம்பிச்சது, கொஞ்ச நேரத்தில தண்ணி வெளிய வர ஆரம்பிச்சது, உடனே அவரு இப்பதான் பாட்டில் நெறைஞ்சு இருக்கு அப்பிடின்னு சொல்லிட்டு,   இதிலிருந்து நீங்க என்ன தெரிஞ்சு கிட்டீங்க அப்பிடுன்னு கேட்டாரு.

உடனே ஒரு பையன் எந்திருச்சு, ஸார் அதுவந்து நமக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், நேரமே இல்லைன்னாலும் கொஞ்சம் முயற்சி செஞ்சா இன்னும் கொஞ்சம் அதிகமா அதுல சேர்த்து செயலாம் அப்பிடின்னு சொன்னான். இப்ப நம்ம நிபுணர் சொன்னாரு உண்மை அது இல்லை, நீங்க பெரிய கல்லை மொதோ போடலையின்னா, எப்பவும் போட முடியாது. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்,

உங்க வாழ்க்கையில பெரிய கல்லுன்னு எது எல்லாம் இருக்கோ அதுக்கு மொதோ நேரத்தை ஒதுக்குங்க, அது எதுவா வேணா இருக்கலாம், உங்களுக்கு பிடிச்சவரா இருக்கலாம், உங்க நம்பிக்கையா இருக்கலாம், உங்க கனவா இருக்கலாம், இதுக்கெல்லாம் மொதோ நேரம் ஒதுக்கலையின்னா எப்பவுமே ஒதுக்க முடியாது.

கருத்துகள் இல்லை: