செவ்வாய், ஏப்ரல் 26, 2011

மேற்கோள்கள் - பிரபாகரன்

  • உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.

  •  ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?

  •  அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!

  •  யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான் (சீருடை). அதனால்தான் எப்பொழுதும் இதிலேயே இருக்கிறேன்.

  •  உயிர் பறிக்கும் சயனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்.

  •  இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!

  •  நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.

  •  ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்!

  •  தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது.

  •  தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கருணன். அவனை எப்பொழுதும் நினைப்பேன்.

  •  தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்! 

மேதகு பிரபாகரன்

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அனல் வீசுகிறது..

Unknown சொன்னது…

@
வருகைக்கு நன்றி நண்பரே