சனி, ஏப்ரல் 09, 2011

வா சாரே ஹசாரே

ஹசாரே இந்த 71 வயது  இளைஞரின் முயற்சி வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி, நாமும் கொண்டாடுவோம் இந்த வெற்றியை. ஹசாரே ஒரு சின்ன முன்னுரை இவர் ஒரு பொது நல சமூக சேவகர், காந்தியவாதி. பிறந்தது  15 ஜனவரி 1940  இயற்பெயர்  கிசான் பாபுராவ் அசாரே.

மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார். இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அது என்ன ஜன் லோக்பால் மசோதா அப்பிடின்னா இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும். அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

அதெல்லாம் சரி தான் ஆனா தலைமை தப்பு செய்ய கூடாது ன்னு சொல்லறதுக்கு யாருக்குமே திராணி இல்லையே ஏன்? அவங்க தப்பு பண்ணுவாங்களாம் இவங்க கண்டு பிடிப்பாங்களாம். எதுக்குயா இதெல்லாம் எல்லாத்துக்கும் ஓட்டெடுப்பு நடத்தி பிறகு தான் முடிவு எடுக்கனுமின்னு வச்சிட்டா யாரும் ஊழல் பண்ணனுமின்னு நினைக்க மட்டாங்கல்ல!!??

 



கருத்துகள் இல்லை: