புதன், ஜூலை 27, 2011

வள்ளுவம் தோற்கிறது

திட்டி முடிந்த பின்
கழுத்தோடு கையை கட்டி
வாயில் புன்சிரிப்போடு
போங்க டாடி என
கொஞ்சும் குழந்தையிடம்
வள்ளுவம் தோற்கிறது
ஆறாதே நாவினால் சுட்ட வடு தவறென்று!!!

6 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட..
வித்தியாசமான கோணத்தில் ஒரு கவிதை..
அருமை..

மகேந்திரன் சொன்னது…

வித்தியாச சிந்தனை
கவிதை அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...

புதிய பார்வையில் புதிய சிந்தனை...

பாலா சொன்னது…

மறுபடியும் திட்டுவே? என்று கேட்காமல் கேட்கிறது.

Unknown சொன்னது…

@பாலா

போங்க டாடிக்கு அப்புறம் ஒன்னு சொல்ல விட்டுட்டேன்
"உங்களுக்கு திட்டவே தெரியலே" -

வழக்கம் போல பல்ப் எல்லாம் சொந்த அனுபவம் தான்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நச் வரிகள்