செவ்வாய், ஜூலை 19, 2011

கல்யாண பரிசு

ஜனவரி 14,1997    மெரினா பீச் இரவு 8 மணி 

"ஐ லவ் யு கல்பனா"  சொன்ன சுந்தரை எரித்துவிடுவது போல் பார்த்தாள் கல்பனா

"இதுக்குதான் இத்தனை நாள் நல்லவன் மாதிரி என்கூட பழகுனியா?"

"எல்லோர் மாதிரி என்னையும் நினைச்சுடாதே கல்பனா, உண்மையிலேயே உன்னை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்"

"இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதே"  சொன்ன கல்பனா திரும்பி பார்க்காம நடந்தாள். 

ஜனவரி 15,1997    தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் காலை 5 மணி


"ஏண்டா உங்கள மாதிரி ஆளுகளுக்கு வேற வேலையே இல்லையா? நல்ல நாளு அதுவுமா ஏண்டா இப்பிடி ஒரு வேலை பண்ணே?" கோவத்துடன் அருகே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பழநியை அலட்சியத்துடன் பார்த்தான் சுந்தர்

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு பொதைக்கணும் போல இருக்கு... "

"அதை தானே ஸார் நான் செய்ய பார்த்தேன், நீங்க செஞ்ச சரி நான் செஞ்சா தப்பா?"

"எகத்தாளத்த பாரு உன்னை எல்லாம் கஞ்சா கேஸ்-ல  உள்ள தூக்கி போட்ட தான் சரியா வருவே"

"ஸார்..."

சத்தம் கேட்டு திரும்பிய பழனி, வாசலில் கல்பனாவை பார்த்தார்

"என்னம்மா வேணும்"

"அவரு இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டாரு இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க ஸார் பிளீஸ்"

"சரிம்மா உன்னை பார்த்தா பாவமா இருக்கு, உனக்காக இந்த பயல வெளியே விடுறேன். இனி இந்த மாதிரி ஏதாவது பண்ணே உனக்கு வாழ்க்கை பூரா ஜெயிலு தான் ஞாபகம் வச்சுக்க.  " 

"இங்க ஒரு கையெழுத்து போட்டு கூட்டீட்டு போம்மா"

ஜனவரி 15,1997    சைதாபேட்டை காலை 7:00  மணி

"ஏண்டா இப்பிடி பண்ணினே?"

"பின்னே என்னை பார்க்காதேன்னு சொல்லிட்டு நீ போயிட்டே.... வலிக்குதுல"

"அதுக்காக யாராவது சாவாங்களா? இனிமே இப்பிடி எல்லாம் பண்ணாதே. ஐ டூ லவ் யுடா "

பிப்ரவரி 14, 1997  காலை 9 மணி

"வாங்க சார் இப்பதான் மணி உங்களுக்கு 8 ஆகுதோ?" செல்லமாய் குட்ட வந்த கல்பனாவை  சமாளித்த சுந்தர்

"உனக்கு ஒரு கிஃப்ட் வாங்க போனேன் கடைக்காரன் கொஞ்சம் லேட் பண்ணீட்டான்"

"பொய் சொல்லாதேடா கடன்காரா"

"இன்னைக்கு பூரா என்கூட தான் இருக்கே"

"ஐயோ முடியாதுப்பா வீட்டுல திட்டுவாங்க"


ஏப்ரல் 1 , 2000 மெரினா பீச் பகல் 4 மணி 


"சுந்தர் தயவு செய்து நான் சொல்லுறதை கேளு, எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேன்கிறாங்க."

"நீயோ இன்னும் வேலை தேடிக்கிட்டு இருக்கே, இந்த நிலைமையில நாம பிரியிறது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு தோணுது"

"நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவே, எனக்கு தெரியும் இது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா வேற வழி இல்லை சுந்தர்"

"பேசி முடிச்சுட்டியா கல்பனா, இது தான் உனக்கு சந்தோசம்ன்னா இதை செய்ய நானும் தயார்,  நாம நண்பர்களாகவே பிரிஞ்சுடுவோம்"

ஜூன் 26, 2000 கலைஞர் திருமண மண்டபம் தேனாம்பேட்டை காலை 8 மணி

"முகூர்த்ததிற்கு நேரம் ஆச்சு பொண்ண கூட்டிக்கிட்டு வாங்க" பிரோகிதர் சொல்ல

மெல்ல மணமேடையில் வந்து அமர்ந்தாள் கல்பனா

"எப்பிடியோ நம்ம பொண்ணு மனசு மாறி கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டா, சந்தோஷமா இருக்கு கல்யாணி" 

"ஆமாங்க..."

"கெட்டி மேளம் கெட்டி மேளம் ......"

ஜூன் 26, 2000 கல்பனா வீடு  மாலை 7  மணி

"என்னாங்க சீக்கிரம் இந்த லிஸ்ட்-ல இருக்க சாமான் எல்லாம் வாங்கீட்டு வாங்க படபடத்தாள் கல்யாணி"

"கல்பனா நீங்க இந்த கிஃப்ட் எல்லாம் கொஞ்சம் பார்த்து எடுத்து வச்சுக்கமா அப்புறம் அதை காணோம் இதை காணோம் ன்னு சொல்லக்கூடாது"

"என்னங்க வாங்க கிஃப்ட் எல்லாம் பார்க்கலாம் - சங்கரை கூப்பிட்டு" கிஃப்ட் இருந்த அறைக்குள் நுழைந்தாள் கல்பனா

"இது லக்ஷ்மி குடுத்தது இது குமாரி குடுத்தது, நல்லா இருக்கு"  சொல்லியபடி எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

"இது ஏதோ வித்தியாசமா இருக்கு கல்பனா, புல்லா கண்ணாடியில ஷீல்ட் பண்ணி இருக்கு ஒரிஜினல் இதயம் மாதிரி இருக்கு கீழே சுந்தர்ன்னு போட்டு இருக்கு, யாரது கல்பனா" கேட்டு கொண்டு இருக்கும் போதே கண்ணாடி பேழை கீழே விழுந்து உடைந்தது.  உள்ளே இருந்து கெட்ட வாடை.

ரத்தம் உறைந்த நிலையில் ஆம் அது சுந்தரின் உண்மையான இதயம்,

என்ன கதை படிச்சுட்டீங்களா?

இப்ப கேள்வி :

சுந்தர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இது ஒரு கொலையா?  சொல்லுங்க பார்க்கலாம்... 

14 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் மழை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இப்படி ஒரு கேள்வியை கேட்டா எப்படி...

எஸ்கேப்...

ராஜி சொன்னது…

சிரமம் பார்க்காமல் என் தளத்திற்கு வந்து என் மகளுக்கு வாழ்த்தியதற்கு நன்றிகள் சகோ.

ராஜி சொன்னது…

கொலை பாதி, தற்கொலை பாதி இரண்டும் சேர்ந்த கலவை(இப்படி ஒரு கேள்வியை கேட்டா இப்படி சொல்லித்தான் எஸ்ஸாகமுடியும்)

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்...

Unknown சொன்னது…

@ராஜி

நன்றி ராஜி...

வாழ்த்துவதற்கு சிரமம் என்ன இருக்கு!!??

எல்லாம் ஒரு சொந்த அனுபவம் தான்
ஏன்னா எங்க வீட்டுலயும் ஒரு சின்னவர் இருக்காரு... அவரை மட்டும் இன்னும் மிரட்டி பாக்குறேன் கொஞ்சம் கூட பயப்பட மாட்டேன்குறாரு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அவரோட உண்மைக்காதல் கொலைசெய்யப்பட்டதால தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பாரோ (சமாளிஃபிகேஷன்தான் :-))

உணவு உலகம் சொன்னது…

எப்படியோ சுந்தரைக் கொன்னாச்சு!

N.H. Narasimma Prasad சொன்னது…

கதை ஓகே. ஆனா கேள்விக்கு என் பதில், 'காதலுக்காக தற்கொலை'. பட், காதலி பண்ணிய கொலை.

மகேந்திரன் சொன்னது…

சிரமமான கேள்விதான்
பதில எப்படி சொல்ல???

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

கதையின் நகர்வில் சஸ்பென்ஸ் வைத்து, படிக்கையில் அடுத்தது என்ன எனும் ஆவல் ஏற்படும் வண்ணம் நகர்த்தியிருக்கிறீங்க. அருமையான படைப்பு.

கேள்விக்குரிய பதில்- அது செயற்கை இதயம் என நினைக்கிறேன். காரணம் சுந்தர் இறந்திருந்தால் கல்யாண மண்டபத்தினுள் அந்த இதயத்தினைக் கொண்டு வந்து யாரால் கிப்ட் ஆக கொடுக்க முடியும்?

Unknown சொன்னது…

@நிரூபன்

சபாஷ் நிரூ கிட்டத்தட்ட நெருங்கீடீங்க சிறு திருத்தம்
அது ஒரிஜினல் இதயம் தான், அதாவது

சுந்தர் கொலை தான் செய்யப்பட்டார்
தற்கொலை செய்யவில்லை காரணம் நீங்கள் சொன்னது போல தற்கொலை செய்து கொண்டவர் இதயத்தை பேக் செய்து மண்டபத்திற்கு கொண்டு வர முடியாது.

யார் செய்தது என்பதை படிப்பவர்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

singam சொன்னது…

its a murder.but when she is tell i love u. thats time changes boths heart one to another. so deathed heart is kalbana heart.the sundar is death but his heart and feelings live in her heart.