செவ்வாய், ஜூலை 05, 2011

விவேகம் பழகு..

அது ஒரு வெயில் கால பகல் பொழுது, சுப்பு பாதையோர மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருந்தார்.  வயதும், தொடர்ந்து நடந்து வந்த களைப்பும், அவர் கையில் இருந்த மூட்டையும் அவரை அயர வைத்தது.  இன்னும் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் அவர் வீட்டுக்கு, அடுத்த பஸ் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் 

யாராவது அந்த வழியாக வரமாட்டார்களா என ரோட்டை பார்த்த படி இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு மோட்டோர் பைக்கில் ஒரு இளைஞர் வருவதை பார்த்தார். அந்த வண்டியை நிறுத்தி

"தம்பி நீங்க வல்லக்கோட்டை பக்கமா போறீங்களா?" சுப்பு கேட்டார்

"ஆமா" அந்த  இளைஞன் கூறினான்

"நீங்க தப்பா நினைக்கலைனா இந்த மூட்டையை உங்க வண்டியில வச்சு வல்லக்கோட்டை வரை எடுத்துக்கிட்டு போகமுடியுமா?"

"நான் எடுத்துட்டு போயிடுவேன் ஆனா..." இழுத்தான் அந்த இளைஞன்

"என்ன ஆனா?"  சுப்பு கேட்டார்

"இல்லை நான் வல்லக்கோட்டை தாண்டி போகணும். வண்டியில நான் 10  நிமிசத்துல போயிடுவேன், நீங்க நடந்து வரணும்ன்னா இன்னும் ஒரு மணி  நேரம் ஆகும். நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கணும். அது முடியாதே?"  அந்த இளைஞன் சொல்ல,

"சரி தம்பி நீங்க வேணா போங்க, நானே எடுத்துக்கிட்டு வர்றேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை. "  சுப்பு சொன்னார்

அந்த இளைஞனும் புறப்பட்டான்

கொஞ்ச தூரம் போனதும், அவன் உள்ளுணர்வு சொன்னது "என்ன ஒரு முட்டாள் நீயி? அந்த மூட்டையில ஏதாவது விலை மதிப்பிலாத பொருள் இருந்தா அப்பிடியே அமுக்கியிருக்கலாமே?"

அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு வண்டிய திருப்பி எடுத்துக்கிட்டு வந்தான்
"ஐயா பெரியவரே உங்கள பாக்க பாவமா இருக்கு உங்க மூட்டையை குடுங்க, நான் எடுத்துட்டு போறேன் நீங்க வந்து வாங்கிக்குங்க"

கொஞ்ச நேரம் யோசித்த சுப்பு

"இல்ல தம்பி, இந்த மூட்டையை நானே தூக்கிக்கிட்டு வர்றேன் ஒண்ணும் பிரச்சனை இல்லை"

"ஏன் என்னாச்சு?" இளைஞன் கேட்க

"இல்லை உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை" சுப்பு சொன்னார்.

"ஏன் ஏன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" - இளைஞன் கேட்க

"எந்த உள்ளுணர்வு உங்களுக்கு இந்த மூட்டையில ஏதாவது இருக்குமோன்னு நினைக்க வைச்சதோ, அதே உள்ளுணர்வு தான் உங்க மேல சந்தேகபடவும் சொலுச்சு" சுப்பு நிதானமாக சொன்னார்.


நீதி
அந்நியரை நம்பும் முன் நிதானமாக யோசியுங்கள்


4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வள்ளுவரே சொல்லியிருக்கிராரே...

யாகாவாராயினும் நாகாக்க...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரசிக்கும் படி இருந்தது..

மகேந்திரன் சொன்னது…

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு!!

என்பதற்கான அருமையான விளக்கக் கதை.

நன்றி.

அன்பன்
மகேந்திரன்

http://www.ilavenirkaalam.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்தல் நீதி மக்கா சூப்பரா இருக்கு...!!!!