திங்கள், ஜூலை 04, 2011

பேராசை குருடாக்கும்

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான் பேரு ஆறுமுகம், ஒரு நாள் அந்த ஊர்ல சந்தை கூடுச்சு. வித விதமான  பாத்திரங்கள், பண்டங்கள்,  வித்தியாசமான உணவு பொருட்கள். எல்லாம் ரொம்ப பிசியா வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. 

ஆறுமுகம் அந்த சந்தையை சுத்தி வந்தான் எந்த பொருளும் அவனுக்கு சந்தோஷம் தரலை ஏன்னா எல்லாம் சின்ன சின்னதா இருந்துச்சு.  எதையாவது பெருசா அடிக்கணும்ன்னு யோசிச்சுகிட்டே வந்தான். சந்தைக்கு நடுவில ஒரு ஆளு தங்கம் வெள்ளி நகை எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. தங்கநகை எல்லாம் மேஜை மேல பரப்பி இருந்தது

தங்கத்தை பார்த்த உடனே ஆறுமுகத்துக்கு எதுவும் ஓடலை, அவன் மனசு பூரம் அந்த தங்கநகை வந்துட்டு போச்சு,

"இங்க இருக்க நகையை கொள்ளை அடிச்சா" அப்பிடின்னு நினைச்சான்.

"நான் கூட இந்த ஊர்ல ஒரு பெரிய பணக்காரன் ஆய்டுவேன், அப்புறம் பெருசா வீடு கட்டீரலாம். வேலைக்கு நெறைய பேரு வச்சுக்கிடலாம். நல்ல உடை, நல்ல சாப்பாடு சாப்பிடலாம்" இப்பிடி எல்லாம் அவன் மனசுல பேராசை உண்டாச்சு. உடனே அந்த கடையில இருந்த நகையை எடுத்துக்கிட்டு எடுத்தான் ஒரு ஓட்டம்.

"திருடன் திருடன் பிடிங்க, என் கடையில இருந்து நகையை திருடிக்கிட்டு போறான்" கடைக்காரர் கத்த ஆரம்பிச்சாரு.  

கொஞ்ச நேரத்தில ஆறுமுகம் அங்கிருந்த மக்கள் கிட்ட மாட்டிக்கிட்டான். அவனை அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்தார் முன்னாடி கொண்டு போயி நிறுத்துனாங்க.

பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு

"ஏன்யா இவ்வளவு கூட்டதில எப்பிடிய திருடனும்ன்னு தோணுச்சு, எல்லோரும் பாக்குறாங்கன்னு உனக்கு தெரியலையா"?

தலையை தொங்கப் போட்டுக்கொண்ட ஆறுமுகம்,

"ஐயா என்னை மன்னிச்சுடுங்க, என்னோட ஆசை என் கண்ணை மறைச்சுடுச்சு, நகையை  பாத்ததுக்கு அப்பறம் அங்க இருந்த யாரும் என் கண்ணுக்கு தெரியலை நகை மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது"

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்களின் கதைகள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்...

வாழ்த்துக்கள்..

மகேந்திரன் சொன்னது…

அருமையான பதிவு நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நெறிப்படுத்தும் கதை நன்று.