ஊக்கமூட்டும் சில பழமொழிகள்
- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
- இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
- கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
- கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
- காய்த்த மரம் கல் அடிபடும்.
- காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
- காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
- குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
- சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
- நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
- பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
- மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
- முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
- வாழ்வும் தாழ்வும் சில காலம்.
1 கருத்து:
பழைய பழமொழிகள் படித்தேன்...
இதை தொடர்ந்து எழுதுங்கள்..
கருத்துரையிடுக