விந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 24, 2011

எப்பிடி எல்லாம் அசத்துறாங்க

 உலகின் மிகப்பெரிய 3D ஓவியம்  - ஒரு ஜிம்மை விட பெரியது. பெரிய வேலை தான் பார்த்து இருக்காங்க 

 

 
இயேசுவை போன்ற தோற்றம்  மேகத்தில்

 

சாத்தான் போன்ற தோற்றம் மேகத்தில்




இன்னொரு முறை மழலையானால்

 


 அண்டத்தின் (universe)  முப்பரிமாண வடிவம்



இன்றைய லொள்ளு



courtesy : google images, shortlist 
படங்கள் கூகிள் இமேஜ்-இல் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோ வழக்கம் போல youtube   

புதன், அக்டோபர் 19, 2011

இந்த படம் எல்லாம் எப்பிடி இருக்கு?


இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 

















கொசுறு : இன்னக்கி பதிவு எழுத நேரம் இல்ல சும்மா அதான் இப்பிடி

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

இது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு

-மனித உடலின் மிக பெரிய செல் பெண் முட்டை சிறிய செல் ஆண் விந்து.

- உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா உங்களுக்கு IQ அதிகம்

-நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளை பயன்படுத்துகிறீர்கள்.

-சராசரி பெண்ணின் உயரம் சராசரி மனிதனை விட 5 அங்குலம் குறைவு.

- ஒரு ஜோடி மனித கால்கள் 250,000 வியர்வை சுரப்பிகள் கொண்டிருக்கிறது.

-உங்கள் வயிற்றில் அமிலம் ஒரு பிளேட் (blade)   ஐ கரைக்கும் அளவு சக்தி வாய்ந்தது

- மனித மூளை செல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போல் 5 மடங்கு தகவல்களை  சேமித்து வைத்திருக்க முடியும்.

- உணவு உங்கள் வாயில் இருந்து உங்கள் வயிறு வரை செல்ல ஏழு விநாடிகள் எடுக்கிறது.

-சராசரி மனித கனவு 2-3 வினாடிகள் நீடிக்கிறது ..

- தங்கள் மார்பில் முடி இல்லாமல் அல்லது மென் முடி கொண்ட ஆண்களுக்கு இரைப்பை நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

-ஒவ்வொரு கால்களிலும் டிரில்லியன் பாக்டீரியாக்கள் வரை உள்ளன.

-30 நிமிடங்கள் உங்கள் உடல் கொடுக்கும் வெப்பம் 4 லிட்டர் நீரை கொதிக்க வைப்பதற்கு சமம்.

- உடலின் கடினமான தசை ஈறு (enamel)

-உங்கள் பற்கள் நீ பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன் வளர துவக்குகின்றன.

-உங்கள் மூக்கின் நீளம் உங்கள் கட்டை விரலுக்கு நீளத்திற்கு சமம்

Bovine spongiform encephalopathy (BSE), என்னடா வாயில நொளையாத பேர் எல்லாம் சொல்ல்றானேன்னு நெனைக்கிறவங்களுக்கு சுருக்கமா mad-cow disease இது ஒரு கொடூரமான நரம்பு சிதைவு நோய்.. மாட்டுல இருந்து மனுசனுக்கு பரவும். நோய் தாக்குன மாடு கூட பழகுறவங்களுக்கும், இந்த நோய் தாக்குன மாட்டுக்கறி சாப்பிடுறவங்களுக்கும் எளிதா பரவுறதா சொல்றாங்க. இது வரைக்கும்  3000 பேர் இறந்தும் போயிருக்காங்க.

முன்குறிப்பு :  தலைப்பை நம்பி உள்ளே வந்த நண்பர்கள் மட்டும் கீழே தொடரவும்

mad-cow disease பத்தி பேட்டி எடுக்க ஒரு நிருபர் விவசாயி கிட்ட வந்தாங்க, அவருக்கோ அந்த நோயை பத்தி எதுவும் தெரியாது ஆனாலும் அவரு தெரியலேன்னு சொல்ல விரும்பலை எப்பிடி சமாளிக்கிறார்ன்னு பாருங்க..   

பெண் நிருபர் :  mad-cow disease - அப்பிடின்னா என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா

விவசாயி        :  மாட்டை சினை பிடிக்க வருசத்துக்கு ஒரு வாட்டி தான் அனுப்புவோம்

பெண் நிருபர் : இந்த நோய்க்கும் சினை பிடிக்க அனுப்புறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?

விவசாயி        : ஒரு நாளைக்கு நாலு வாட்டி பால் கறக்குறோம் அப்ப வருசத்துக்கு 1460 வாட்டி

பெண் நிருபர் : (ரொம்ப கடுப்பாகி) அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்??

விவசாயி         : இல்லை, இதே மாதிரி உங்களுக்கும் பண்ணா நீங்க பைத்தியம் ஆயிட மாட்டீங்களா!!?? அது மாதிரி தான் மாடும் பைத்தியம் ஆயிடும்

புதன், ஏப்ரல் 13, 2011

நெருப்பு நீரானால்

இந்த நெருப்பு நீரானால் என்னாகும், கீழே உள்ள படங்களை பாருங்கள்




 
இது எப்பிடி இருக்கு?


வெள்ளி, ஏப்ரல் 08, 2011

இன்னும் குறட்டையா??

குறட்டையா?? தவிர்க்க சில வழிமுறைகள்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.

குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது

தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு என பார்ப்போம்.


1. குறட்டையை தவிர்ப்பதற்கு என ஒரு கருவி வந்துள்ளது. இது சி.பி.ஏ.பி. என அழைக்கப்படுகிறது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை.

2. சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும். இது ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

3. உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

4. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.

5. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

6. இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

7. குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம்.

இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் கடைபிடித்து வருவது மிக்க நன்மை பயக்கும்.

வியாழன், மார்ச் 31, 2011

நான் ரெடி நீங்க ரெடியா

நான் ரெடி நீங்க ரெடியா என கட்டை விரலை உயர்த்திகாட்டும் வயிற்றில் உள்ள சிசு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டொன்னா சேயர் (வயது 29) இவரது கணவர் சீமன் பிஸ்கோ டொன்னா சேயர் கர்ப்பமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கபட்டது ஸ்கேனில் வளரும் சிசுவை பர்ஹ்த போது தன் தலை மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியுறாத நிலையிலும் காணப்பட்டது அதற்கு டாக்டர்கள் தேவையான மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

சில வாரங்கள் கழித்து மீண்டும் டொன்னா பரிசோதனைக்கு சென்ற போது அதே நிலைமையே மிண்டும் நீடித்தது இதனால் தம்பதியனர் மிகவும் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் டொன்னா பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் வளரும் அதில் 6 மாதமான அந்த பிஞ்சுக்குழந்தையின் வளர்ச்சி குறிப்பிடதக்க முன்னேற்ரம் அடைந்து இருந்தது மேலும் அந்த சிசுவின் கட்டை விரல் உயர்த்திக்காட்டியப்படி வெற்றியின் அடையாள சின்னமாக இருந்தது ஸ்கேன் படத்தில் தெரியவந்தது.



இதை பார்த்த டாகடர்களும் பெற்றோர்களும் ஆச்சரியம் அடைந்தனர். நான் ரெடி நீங்க ரெடியா என்பது போல் அந்த குழந்தை கட்டைவிரலை உயர்த்தி இருந்தது.

சூரியனை சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.


தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும்.

இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன.

இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.