அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இது தாண்டா அரசியல்

அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் அர்விந்த் கிஜ்ரிவல் சென்னை IIT - யில் அவர் பேசியது உங்களுக்காக

பாகம் - I
 


பாகம் - II 



பாகம் - III 


பாகம் - IV


திங்கள், ஜூலை 11, 2011

கல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு !!

இன்னைக்கு நம்மூர்ல சமச்சீர் கல்வி படுற பாடு எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். இன்னைக்கு இந்தியாவின் சராசரி  படிப்பறிவு சதவிகிதம் 74.04% (2011) ஆனா இது உலக சராசரியை (84%) விட குறைவு.  இந்திய அரசும், மாநில அரசுகளும்  பல்வேறு திட்டங்களையும்,  வரைவுகளையும் நிறைவேற்றி உள்ளன.

கல்வி ஒரு அடிப்படை உரிமை எனவும் அறிவித்து உள்ளது இந்தியா அரசு ஆனாலும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்து உள்ளது.  அப்பிடின்னா எங்கயோ தப்பு இருக்கு, அது என்னான்னு பாக்குறதுக்கு முன்னாடி மத்திய அரசு என்ன மாதிரியான வரைவுகளுக்கு அனுமதி அளித்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.

2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்தது, இதன் சிறப்பு அம்சம் என்னான்னா

1.    6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி

2.    ஆரம்ப கல்வி முடியும் வரை எந்த குழந்தையையும் பள்ளியில் இருந்து நீக்க முடியாது

3.   ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறுதல் கட்டாயம் இல்லை (இது கொஞ்சம் எதிர் விளைவுகளை உருவாக்கும் அம்சம், எந்த புண்ணியவான் இதை சொன்னரோ)

4.   பள்ளியில் சேர்க்கை பெறாத அல்லது பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் ஆரம்ப கல்வியை முடிக்காத 6 வயதிற்கு மேற்பட்ட   குழந்தைகளை வயதுக்குரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.  (இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சம் என்னான்னா நீங்க உங்க  11 வயது குழந்தையை நேரா ஆறாம் வகுப்பில் கொண்டு போயி சேர்க்கலாம்)
    
5. 14 வயதிற்கு மேலும் ஆரம்ப கல்வி முடிக்கவில்லை என்றால், ஆரம்பகல்வி முடியும் வரை கல்வி இலவசம்.

6.  தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு அளிக்கிறது.

7. திட்டத்திற்கான நிதிச்சுமை (56000 கோடி வருடத்திற்கு)  மத்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்

8 . பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் (குறைவாக உள்ள இடங்களில்) 3 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் இல்லாயேல் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

9.  ஆசிரியர்கள் தகுந்த பட்டபடிப்புகள் முடித்து இருக்க வேண்டும் இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் இதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நல்லா தானே இருக்கு, ஆனா ஏன் இது எல்லா எடத்துலயும் நடைமுறைக்கு வரலை என்ன சொல்லாறாங்க தெரியுமா

"மாநில அரசுகள் இந்த திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வரவில்லை, எனவே இது மததி்ய அரசே ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது."  

"அரசின் கடமைகளை பிறர் தலையில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது" அப்பிடின்னு தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.  

இதுல இருந்து என்ன தெரியவருதுன்னா எந்த ஒரு மசோதாவோ அல்லது திட்டமோ எந்த குழந்தையையும் பள்ளிக்கு வர வைக்காது எல்லோரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், எந்த திட்டமும் எல்லோருடைய பங்களிப்பும் சரியா இருந்தா மட்டுமே வெற்றியடையும்.

அப்ப ஏன் குழந்தைக்கு இலவச கல்வி கிடையாதான்னு கேக்குறீங்களா? இது அரசு பள்ளிகள்ல மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்ல மட்டும் தான் செயல்படுத்த முடியும் போல இருக்கு. தனியார் பள்ளிகள்ல இது சாத்தியம் இல்லை.  அப்புறம் நம்ம குழந்தைகளை அரசு பள்ளியில சேர்க்க நம்ம கௌரவம் இடம் தராது. சரி அதுக்காக தனியார் பள்ளியில இப்பிடி கொள்ளை அடிக்கிறாங்களே கேட்க யாருமே இல்லையான்னு கேக்குறீங்களா?

அதுக்கும் நீங்க தானே காரணம், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை கந்து வட்டிக்கு வாங்கியாவது அந்த பள்ளிக்கூடத்தில ஏன் புள்ளையை சேர்த்தே தீருவேன்னு நிக்கிறீங்க.  வசதியா இருக்கணும்ன்னா செலவு செஞ்சுதான் ஆகணும் ஒத்துக்கிறேன் ஆனா கல்வி ஹோட்டல் மாதிரி பஃப்பேன்னு சொல்லி சாப்பிடாத ஐட்டத்துக்கு எல்லாம் பில் போடுற மாதிரி அயிடக்கூடாதுல்ல.  

ஏற்கனவே கல்வி கட்டண முறைப்படுத்துறோம்ன்னு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்ன ஆச்சு, எத்தனை பள்ளிகூடத்துல அந்த கட்டணம் வசூல் பண்ணாங்க? இன்னும் அதுக்கே நிறைய பள்ளிகள் ஒத்துக்கலையே அவங்க எப்பிடி இலவச கல்வி அப்பிடின்னா ஒத்துக்குவாங்க?

எல்லா தொழிலும் லாபமா நடக்கனும் தானே எல்லோரும் ஆசைபடுவாங்க கேக்குறீங்களா? அது கூட நியாயம் தான் ஆனா லாபம் மட்டுமே பிரதானம்ன்னு நினைச்சா வேற தொழில் பண்ணலாமே.

இன்னைக்கு தரமான கல்வி இந்தியால படிக்கணும்ன்னா குறைந்தபட்சம் ரூ 60,000 முதல் ரூ 75,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது, சராசரியா மாதத்திற்கு ரூ 6,000  வரை. இது ஒண்ணும் டிகிரி படிக்க இல்லை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க ஆகும் செலவு மட்டுமே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறையும் என்றாலும் குறைந்த பட்சம் 40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாத வருமானம் 10,000 உள்ள குடும்பங்கள் மாதா மாதம் இவ்வளவு பணம் எங்கிருந்து செலவு செய்வார்கள்? 

நான் எல்லாம் படிக்கும் போது எம்‌சி‌ஏ-க்கு மூணு வருஷம் கட்டுனா பீஸ் ரூ 23,000 இன்னைக்கு  ஒண்ணாம் கிளாஸ் சேர்க்க போன அதை விட ஜாஸ்தியா கேக்குறாங்களே என்னத்த சொல்ல.  ரொம்ப வருசத்துக்கு முன்னாடியில பாஸு இப்பதான் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி முடிச்சேன். 

அப்ப எங்க குழந்தைகள் தரமான கல்வி இலவசமா படிக்க வழியே இல்லையான்னு கேக்குறீங்களா?  பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம்.  எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன? அதுவும் இல்லாம இங்க இலவசமா குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.  

அரசாங்கத்துக்கிட்ட எதிர்பாக்குறது எல்லாம் தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அதுவும் நியாயமான கட்டணங்களில், எந்த அரசு இதை செய்யுமோ? இன்னொரு காமராஜர் வருவாரா?

திங்கள், ஜூலை 04, 2011

பேராசை குருடாக்கும்

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான் பேரு ஆறுமுகம், ஒரு நாள் அந்த ஊர்ல சந்தை கூடுச்சு. வித விதமான  பாத்திரங்கள், பண்டங்கள்,  வித்தியாசமான உணவு பொருட்கள். எல்லாம் ரொம்ப பிசியா வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. 

ஆறுமுகம் அந்த சந்தையை சுத்தி வந்தான் எந்த பொருளும் அவனுக்கு சந்தோஷம் தரலை ஏன்னா எல்லாம் சின்ன சின்னதா இருந்துச்சு.  எதையாவது பெருசா அடிக்கணும்ன்னு யோசிச்சுகிட்டே வந்தான். சந்தைக்கு நடுவில ஒரு ஆளு தங்கம் வெள்ளி நகை எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. தங்கநகை எல்லாம் மேஜை மேல பரப்பி இருந்தது

தங்கத்தை பார்த்த உடனே ஆறுமுகத்துக்கு எதுவும் ஓடலை, அவன் மனசு பூரம் அந்த தங்கநகை வந்துட்டு போச்சு,

"இங்க இருக்க நகையை கொள்ளை அடிச்சா" அப்பிடின்னு நினைச்சான்.

"நான் கூட இந்த ஊர்ல ஒரு பெரிய பணக்காரன் ஆய்டுவேன், அப்புறம் பெருசா வீடு கட்டீரலாம். வேலைக்கு நெறைய பேரு வச்சுக்கிடலாம். நல்ல உடை, நல்ல சாப்பாடு சாப்பிடலாம்" இப்பிடி எல்லாம் அவன் மனசுல பேராசை உண்டாச்சு. உடனே அந்த கடையில இருந்த நகையை எடுத்துக்கிட்டு எடுத்தான் ஒரு ஓட்டம்.

"திருடன் திருடன் பிடிங்க, என் கடையில இருந்து நகையை திருடிக்கிட்டு போறான்" கடைக்காரர் கத்த ஆரம்பிச்சாரு.  

கொஞ்ச நேரத்தில ஆறுமுகம் அங்கிருந்த மக்கள் கிட்ட மாட்டிக்கிட்டான். அவனை அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்தார் முன்னாடி கொண்டு போயி நிறுத்துனாங்க.

பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு

"ஏன்யா இவ்வளவு கூட்டதில எப்பிடிய திருடனும்ன்னு தோணுச்சு, எல்லோரும் பாக்குறாங்கன்னு உனக்கு தெரியலையா"?

தலையை தொங்கப் போட்டுக்கொண்ட ஆறுமுகம்,

"ஐயா என்னை மன்னிச்சுடுங்க, என்னோட ஆசை என் கண்ணை மறைச்சுடுச்சு, நகையை  பாத்ததுக்கு அப்பறம் அங்க இருந்த யாரும் என் கண்ணுக்கு தெரியலை நகை மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது"

செவ்வாய், ஜூன் 14, 2011

இது தாண்டா இந்தியா

1)    லோக்பால் மசோதாவை பலவீனப்படுத்த முயற்சி: அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே புகார் 

இப்பிடி சின்ன பிள்ளை மாதிரி புகார் பண்ண கூடாது. அவங்க என்ன அவங்களாவா செய்யுறாங்க, எல்லாம் சொல்லி குடுக்குறாங்க இவங்க பேசுறாங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா, உங்க பேரனுக்கு பேரன் வந்தாலும லோக்பால் வராது. 

2)     கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ராம்தேவ்

அது சரி இதையாவது தொடர்ந்து செய்வீங்களா? இல்ல இது கூட உங்க உண்ணாவிரதம் மாதிரி பாதியில முடிச்சுடுவீங்களா? 


3)    கடந்த 12 ஆண்டாக பென்ஷன் பெற, கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வருகிறேன். கடைசி காலத்தில் அரசு கொடுக்கும் பணத்தை         வாங்கி சாப்பிட விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி என்பதை பதிவு செய்வே, இத்தனை ஆண்டாக நடையாய் நடக்கிறேன்.

    தியாகி பட்டதையும் தியாகம் பண்ண சொல்றாங்களோ? இல்ல உங்களுக்கு குடுக்குற பணத்தில ஒரு வருஷம் இந்தியாக்கே பட்ஜெட் போடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கங்களோ என்னவோ?  

4)     270 பக்க 2ஜி ஊழல் அறிக்கை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்தார்.
   
    அவங்க ரொம்ப பிசி 270 பக்கம் படிக்க முடியாது, சுருக்கமா சுருக்குன்னு 10 வரியில் குடுங்க 

5)     சிண்டு முடியும் பத்திரிகைகள்: கருணாநிதி 
   
    இது என்ன மானம் கெட்ட பொழப்பு, இனிமே யாராவது புதுசா சிண்டு முடிஞ்சு விடணுமா? ஏற்கனவே உள்குத்து இருக்கிறனால தானே உங்க பொண்ணு உள்ள இருக்கு. கொஞ்ச நாள் வாய மூடிக்கிட்டு இருந்தா வெளிய விட்டுடுவாங்க  

6)     கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் - பிரணாப் நம்பிக்கை 

    என்ன நடவடிக்கைன்னு கொஞ்சம் சொன்ன தேவலை?, இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கை!!?? தான் பாபா வரை வந்து நிக்குது, இன்னும் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா நானும் வர வேண்டி இருக்கும்   

7)     பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை         அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    விளக்கம் கேட்டு கிட்டே இருங்க, ஒரு நாளு மொத்தமா தண்ணியே வராம போகப்போகுது.   அது சரி காவேரிய மறந்துட்டீங்களே


8)    இந்தாண்டு அரிசி உற்பத்தி 10 கோடி டன்னை தாண்டும்,'' என, விவசாயத் துறை செயலர் தெரிவித்துள்ளார்

    அதனால எல்லோருக்கும் இலவச அரிசி குடுக்கப்போறீங்களா, இல்ல அரிசி விலை கிலோ 10  ஆயிடுமா?    எப்பிடியும் குடௌன்ல அடுக்கி வச்சி எலி திங்க போகுது.

9)    பன்மு‌‌க கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ 7ஆயிரம் கோடி செலவில் கங்கை நதியை தூய்மைபடுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம்

    இதுல எத்தனை கோடி நீங்க கங்கையை சுத்தம் பண்ண எடுத்துக்குவீங்க?

   
10)    கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
   
    இன்னும் எத்தனை வருஷம் தள்ளி போடுவீங்க பாஸு சீக்கிரம் சொல்லுங்க. 

திங்கள், ஜூன் 06, 2011

காந்தி தேசமே

இன்னைக்கு நானும் ஒரு அரசியல் பதிவு எழுதணும்ன்னு ஒரு வெறியோட ஆஃபிஸ்க்கு வந்தேன் (நான் பதிவு போடுறது எல்லாம் அங்க இருந்து தான் ஹி ஹி ஹி) , வந்து என் டாஷ் போர்டை பார்த்தா நெறைய நண்பர்கள் ஏற்கனவே நிறைய பதிவுகளை போட்டு இண்ட்லி, தமிழ்மணம் எல்லாத்தையும் நிரப்பிட்டாங்க, எல்லாம் கடந்த இரண்டு நாளா நாட்டுல நடந்து கிட்டு இருக்க குழப்பங்கள்தான். 

ஆனா ஒவ்வொருத்தரும் அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி பதிவு போட்டு இருந்தது தான் எனக்கு ஒரே குழப்பம்,

ஒருத்தரு கருப்பு பணத்தை இந்தியாக்கு கொண்டு வர ஏரோப்ளேன் அனுப்ப சொல்லுறார்,

இன்னொருத்தர் காசு செல்லாதுன்னு சொல்லுங்க எல்லாம் இனி எலெக்ட்ரோனிக் டிரான்ஸ்பர் மட்டும் தான் அப்ப தான் ஊழலை ஒழிக்க முடியும்ன்னு சொல்லுறாரு


இன்னொருத்தரோ இது எல்லாம் புதுசா, இந்தியால இது இப்பதான் ஆரம்பிச்சு இருக்கா அப்பிடின்னு கேக்குறாரு

ஒரே ஒரு நண்பர் மட்டும் வயித்துல பாலை வார்த்து இருந்தாரு, அதுவும் இந்தியாவோட ஜாதகத்தை!!?? கணிச்சு 

ஆனா என் கேள்வி ஒண்ணே ஒண்ணு தான், ஏன் இந்தியால எந்த ஒரு நல்ல விசயத்தையும் சரியா செய்ய முடியுறதில்லை?
யாராவது செய்ய முன் வந்தாலும் அவரு மட்டும் யோக்கியனா அப்பிடின்னு அவங்க மேல சேத்த வாரி வீசுறது.

பாபா இல்ல ஹசாரே யாரா வேணா இருக்கட்டும்,  அவங்க மேலயும் தப்பும் இருக்கலாம் ஆனா அதை எல்லாம் சரி பண்ணனும்ன்னு  முன்னாடி வரப்போ நாட்டு மேல அக்கறை இருக்குறவங்க (அட உங்களாதாங்க சொன்னேன்) பின்னாடி நின்னாதானே எதையாவது செய்ய முடியும்.  அவங்க தப்பு செஞ்சு இருந்தாலும் அந்த சட்டமே அவங்களை தண்டிக்கும் இல்லையா?

எல்லாருக்கும் இந்த நாடு அமெரிக்கா மாதிரி வல்லரசு ஆகணும்ன்னு நினைப்பு இருக்கு, எதுக்கு சொகுசா வாழணும், எல்லோரும் நிறைய சம்பாதிக்கணும, சந்தோஷமா இருக்கணும்னு தானே, ஆனா உண்மையில என்ன நடக்குது பழைய படத்துல வர ஜமீன்தார் மாதிரி சிலர் மட்டும் பணம் சம்பாதிக்க, இன்னும் சிலரோ ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை.  

செலவு செய்ய முடியாத அளவு பணம் சம்பாதிச்சாலும் இன்னும் சம்பாதிக்க சட்டத்தை வளைக்க துடிக்கிற கூட்டம், யார் என்ன செய்ய முடியும்னு நிணக்கிற தைரியம் எங்கே இருந்து வந்தது, நாம எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்தது தானே?   காசு குடுத்தா இந்தியால எது வேணா செயலாங்குற நிலைமை எப்பிடி வந்தது? நாம என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருப்போமா?

நமக்கு சாப்பிட சாப்பாடு இருக்கா, எவன் எக்கேடு கெட்டு போன நமக்கென்ன அப்பிடின்னு நாம சும்மா இருந்தது தானே? நம்ம எங்க இருந்து சட்டத்தை காப்பி பேஸ்ட் பண்ணுனோமோ அங்கே கூட இவ்வளவு தப்பு நடக்குறது இல்லையே ஏன்? அங்கே மக்கள் எப்பிடி இருந்தாலும் தலைமை சரியா இருக்கணும்னு நினைக்கிறாங்க,

ஆனா இங்க நிலைமை என்ன குறைஞ்சது 2 கேஸ் இருந்ததானே கவுன்சிலர் ஆக முடியுது, அப்ப எப்பிடி அவங்க நாட்டுக்கு நல்லது பண்ணுவாங்க, அப்பிடியே பண்ணுவாங்கன்னு நம்புனா நம்மள மாதிரி முட்டாள்கள் எந்த நாட்டிலயும் இருக்கமாட்டாங்க.   இங்க நாட்டை சுரண்ட கோடி பேர் இருக்காங்க, ஆனா காப்பாத்த ஆள் இல்லை, அப்ப்டிடியே யாராவது வந்தாலும் நீ மட்டும் ஏன்னா        

ஜனநாயகம், இந்த ஒரு  வார்த்தயை வச்சுக்கிட்டு அவன் அவன் பண்ற சேட்டை தாங்க முடியல,
"எகிப்தில் அல்லது துனீசியாவில் நடந்தது போல் இந்தியாவில் நடக்காதுன்னு" பிரதமர் சொன்னதோட அர்த்தம் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சு இருக்கும். ஒரு பத்தாயிரம் பேர் கூடுனதே அவங்களுக்கு பிடிக்கலயே, ஒரே நாள்ல வேலய காமிச்சுட்டாங்க.

ஏன்யா இப்பிடி பண்றீங்கன்னு கேட்டா "அவரு  உயிருக்கு ஆபத்து"ன்னு சலிக்காம பொய் சொல்லுது கவர்மெண்ட,  உயிருக்கு ஆபத்துன்னா பாதுகாப்பு குடுக்க வேண்டியது மட்டும் தானே அரசோடா பொறுப்பு, அவரு டெல்லியிலேயே இருக்க கூடாதுன்னு வெளியே அனுப்புனது எப்பிடிபட்ட மொள்ளமாரித்தனம.  இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கூட்டதில (ஹசாரே அண்ட் கோ) இருக்கிற எல்லாத்தையும் தீவிரவாதிகள் லிஸ்ட்ல செத்துருவாங்க போல இருக்கு. 

நாம என்ன பண்ணப்போறோம் வழக்கம் போல விரல் சூப்பிக்கிட்டே வேடிக்கை பார்க்கபோறோம், ஏன்னா ..........................
நீங்களே மிச்சத்தை உங்களுக்கு பிடிச்ச மாதிரி நிரப்பிக்குங்க..

புதன், ஜூன் 01, 2011

இது என்னோட வேலை


இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை  

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,
எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு
ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்

 

புதன், மே 25, 2011

கருணாநிதி பேட்டியும் பின்னே என்னோட டவுட்டும்

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

டவுட்டு :  இதுவரை படிச்சா மாணவர்கள் எல்லாம் என்ன நடுத்தெருவிலயா நிக்கிறாங்க?

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

டவுட்டு :  அப்புறம் என்னாத்துக்கு மத்தவங்கள மட்டும் சந்திச்சாராமா?



கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

டவுட்டு :  வேற என்னன்ன எதிர்பார்த்துக்கிட்டு இருக்காறோ? 


கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

டவுட்டு :  ரைட்டு,  ஆனா கேட்கும் போது கரெக்ட்-அ குடுத்துடுவீங்களா?



கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

டவுட்டு :  இன்னும் 4 வருஷம் கழிச்சு பண்ணலாம், இப்போ செய்ய வேண்டிய வேலை வேற இருக்குனு சொல்றாரோ?  


கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

டவுட்டு :  எது உங்க பிறந்தநாளை சிறப்பா கொண்டாடுறதா? 



கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

டவுட்டு :  என்ன பிரயோஜனம், ஏற்கனவே முழி பிதுங்குற அளவுக்கு பீஸ ஏத்தி  விட்டுட்டீங்க


கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

டவுட்டு :  புரியலியே, அப்ப உங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு மட்டும் ஏதாவது நலத்திட்டம் கட்சியில இருந்து செய்ய போறீங்களா?