புதன், மே 04, 2011

ஊக்கமூட்டும் சில பழமொழிகள்

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • செய்வன திருந்தச் செய்.
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.

1 கருத்து:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பழைய பழமொழிகள் படித்தேன்...

இதை தொடர்ந்து எழுதுங்கள்..