வெள்ளி, ஜூலை 08, 2011

விவாகரத்து - ஏன் எதற்கு?

இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாகி விட்ட இன்னொரு நிகழ்வு விவாகரத்து. கடந்த மூன்று மாதங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 667. இது தமிழகத்தின் எண்ணிக்கை மட்டுமே. இது அதற்கு முந்தைய மூன்று மாதங்களை கணக்கில் கொள்ளும்போது 17% அதிகம் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது ஏன் இன்று தினசரி நிகழ்வாக மாறியது?  இது ஒரு மடத்தனம் என்பது ஏன் சிலருக்கு புரியவில்லை என்று இது வரை எனக்கும் புரியவில்லை.

1. தவறாக புரிந்து கொள்ளல்

2. தற்பெருமை

3. தொடர்பு இன்மை

4. விட்டுக்கொடுத்தல் இல்லாமை 

இந்த நான்கும் முக்கிய காரணிகளாக நிபுணர்களால் சொல்லப்படுகிறது.  ஆனாலும் இவை எல்லாம் தவிர்க்க வேண்டியவை அல்லது எந்த ஒரு பிரச்சனைகள் வரும் போதும் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காமல்  கொஞ்சம் நிதானித்து யாருக்கும் பிரச்சனை இல்லாத ஒரு முடிவை எடுப்பதே சிறந்தது. 

இன்று பெண்களும் நிறைய படிக்கிறாங்க, வேலைக்கு போறாங்க. அவங்க முடிவை அவங்க எடுக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அதுல எந்த தப்பும் இல்லை ஆனா நான் முடிவு எடுத்துட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம் ஆகுது.

இதுக்கு பெண்கள் மட்டும் காரணமா இல்ல, 90% ஆண்கள் தான் எப்பிடின்னா வீட்டு பொம்பளை என்ன முடிவு எடுத்தாலும் முடிவு எடுக்குறது இருக்கட்டும், ஏங்க இப்பிடி பண்ண நல்லா இருக்கும்ன்னு ஆரம்பிக்கும் போதே உனக்கு ஒண்ணும் தெரியாது சும்மா இருன்னு சொல்லுற ஆண்கள் தான் அதிகம்.  சில வீடுகளில் இது மாத்தியும் நடக்கும், வீட்டம்மா  பேச்சுக்கு மறு பேச்சு பேசாத ஆண்களும் உண்டு. 

இது கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி இனி உன் கூட இருந்து அழுதுகிட்டே வாழுறத விட தனியா போயிட்டா நிம்மதியா இருப்பேன்னு நினைக்கிற அளவு ரெண்டு பேரும் முடிவு பண்ணி வர இடம் தான் விவாகரத்து.  ஆனா அதோட எல்லாம் முடிஞ்சு போயிடுதா? இல்லை அடுத்து வருகிற பிரச்சனைகள் அதிகம்.  அதிலும் முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலம்.  அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் மேல் ஒட்டுதல் (பாசம்)  அதிகம் இருக்கும் தனியாய் அவர்களை பராமரிப்பது அவ்வளவு எளிது அல்ல, பெண் வேலைக்கு போகிறவர் என்றால் அவருடைய பணத்தேவைகளை அவரால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதுவே ஒரு வேலைக்கு செல்ல முடியாத பெண் என்றால் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு உரித்தாகிறது.

ஒன்று தந்தை குழந்தையை தான் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது குழந்தை தந்தையுடன் இருக்கும் அதை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் எளிது, பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில்  குழந்தையை பராமரிப்பதும், கண்காணிப்பதும் கடினம்.   குறைந்த பட்ச அன்பாவது கிடைக்குமா என்பது சந்தேகமே

இல்லை குழந்தை தாயுடன் இருக்கும் அது பெரியவர் (18 வயது) ஆகும் வரை அதன் எல்லா தேவைகளுக்கும் தந்தை பணம் வழங்க வேண்டும்.  தந்தை பணம் வழங்க முடியாத சூழலில் அந்த பெண்ணும் குழந்தையும் எதிர் பார்த்து இருப்பது அவளுடைய பெற்றோரையும், சகோதரர்களையும் ஆரம்பத்தில் அவர்கள் ஆதரவு அளித்தாலும் அதை தொடர்ந்து செய்வார்களா தெரியாது, அவர்கள் சுமை என்று நினைத்து விட்டால், அவர்களின் நிலைமை கவலைக்கிடம் தானே!!??

இது மட்டும் அல்லாமல் சமூக ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கிறது, எந்த ஒரு சுப காரியங்களிலும் முன் நின்று செய்ய முடியாமல் போகிறது.  இவ்வளவு பிரச்சனைகளையும் ஆராயாமல் அவசரத்தில் முடிவெடுத்து விட்டு பின் வருந்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வளவும் தெரிந்து இருந்தும் இன்னும் நீதிமன்றங்களை நோக்கி போவோர் கூட்டம் இன்னும் குறையவில்லை.

இதுக்கு யாராவது புதுசா சட்டம் கொண்டு வந்தா தேவலை, குழந்தை இல்லையா விவாகரத்து கிடையாது அப்புறம் விவாகரத்துக்கு குறைந்த பட்ச வயது 55 அப்பதான் இது எல்லாம் குறையும். இல்லாட்டி ஒரு நாளைக்கு நடக்குற கல்யாணங்களின் எண்ணிக்கையை விட விவாகரத்துக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் நிலைமையும் ஒரு நாள் வரும்.

ரொம்ப சீரியசா பேசிட்டேனோ சரி கொஞ்சம் சிரிக்கலாம் 

ஒரு நீதிபதி விவாகரத்து தொடர்பாக ஒரு பெண்ணுடன் நேர்காணல் நடத்திக்கொண்டு இருந்தார்

"உங்க வீட்டை பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?"

அவள் பதிலளித்தாள் "நான்கு ஏக்கர் நிலத்தில நடுவுல எங்க வீடு இருக்கு அப்புறம் வீட்டை சுத்தி நிறைய தோப்பு இருக்கு"
 
"இல்லை, நான் உங்க குடும்பத்தை பத்தி கேட்டேன்"

"எனக்கு ஒரு மாமியார் மாமனார் இருக்காங்க, அப்புறம் 2 நாத்தனார் ஒரு கொளுந்தனார் எல்லோரும் ஊருல இருக்காங்க.. "

"இல்லைம்மா உங்க குடும்ப வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை இருந்துச்சா?"

"ஆமாம், என் மகன் மற்றும் மகள் எப்ப பார்த்தாலும் ஒரு வாக்மேன்-ஐ காதுல வச்சுக்கிட்டு நான் சொல்ற  எதையும் கேட்கிறது இல்லை"

"தயவு செய்து..." அவர், மீண்டும் முயற்சித்தார்

"மேடம், உங்கள் கணவர் எப்போதாவது உங்களை அடிச்சு இருக்காரா?"

"ஆமாம்," அவர், பதிலளித்தாள்

"எப்ப"

"ஒரு வாரத்துக்கு இரண்டு முறை பற்றி அவர் எனக்கு முன்னாடி எழுந்தா அடிச்சு எழுப்புவாரு."

இறுதியாக, வெறுப்பில், நீதிபதி, கேட்டது

"அம்மா, ஏன் நீங்கள் ஒரு விவாகரத்து விரும்புகிறீர்கள்?"

"ஓ, எனக்கு விவாகரத்து வேண்டாம்," அவள் பதிலளித்தாள்.

"நான் எப்பயும் விவாகரத்து பண்ணனும் ஆசைபட்டது கிடையாது. என் கணவர் இல்லை, அவருக்கு தான் விவாகரத்து வேணும்னு கூட்டிக்கிட்டு வந்தாரு ஏன்னா அவரால என் கிட்ட பேச முடியல்லைங்க்கிறார்! "


டிஸ்கி : இது சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, என்னடா இவன் எப்பயும் பொம்பளைகளை தப்பா பேசுறான்னு நெனைச்சுடாதீங்க..  உங்க கருதுக்களையும் கொஞ்சம் பதிங்க படிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் உங்க கிட்ட இருந்தும் தெரிஞ்சுகிடட்டும்.

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் பதிவு...


இன்றை குடும்பங்கள் விட்டுக் கொடுத்துப்போகும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக முறைந்துக் கொண்டு வருவது கொஞ்சம் வேதனைதான்...

N.H. Narasimma Prasad சொன்னது…

நல்ல பதிவு. ஆனா, கடைசி நகைச்சுவை கதை மட்டும் சரியா புரியல. இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்.