வியாழன், அக்டோபர் 13, 2011

ஆம்பளைங்களுக்கு குழந்தை பிறந்தா ? (நானா யோசிச்சேன்)

என்னடா வில்லங்கமா ஏதோ மேட்டர் சொல்லப்போறானேன்னு பயமா இருக்கா?, சும்மா. சரி விசயத்துக்கு வருவோம். ஆம்பளைங்களும் பிள்ளை பெத்துகிற மாதிரி இருந்திருந்தா என்னன்ன மாற்றங்கள் உலகத்தில இருந்து இருக்கும்?

1.    சம்பளத்தோட மகப்பேறு விடுமுறை ஒரு ரெண்டு வருஷமாவது இருந்து இருக்கும்

2.    வயித்தில விழுற சுருக்கம் காணாமலே போற மாதிரி ட்ரீட்மெண்ட் கண்டுபிடிச்சு இருப்பாங்க

3.    பிரசவத்துக்கு அப்பறம் விழுகுற எக்ஸ்ட்ரா சதையை குறைக்க நல்ல மருந்து கண்டுபிடிச்சு இருப்பாங்க

4.    நார்மல் டெலிவெரி இல்லாமலே பண்ணியிருப்பாங்க எல்லாம் சிசேரியன்

5.    குடும்ப கட்டுபாடு தீவிரமா செயல்படுத்தி இருப்பாங்கே

6.    ரெட்டைப்பிள்ளை பெத்துக்கணும்ன்னு யாரும் ஆசைப்பட மாட்டாங்க

7.    வாந்தி தான் கொடூரமான வியாதின்னு அறிவிச்சு இருப்பாங்க

உங்களுக்கும் இன்னும் ஏதாவது தோணுனா கமெண்ட்-ல போடுங்க


இன்றைய சிந்தனை


1.    பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான் வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால் இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே போகப்போகிறீர்கள் என்று பொருள்

2.    ஜெயித்த குதிரையும் அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம் வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும் போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.    வாழ்க்கையும் அப்படித்தான்

3.    உங்களை பிறர் தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள் உங்களை தாழ்வாக நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்

4.    உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாகவே இருக்கிறது அதில் பிறர் வாழ்க்கையை வாழாதீர்

5.    வாழ்க்கை ஆசீர்வாதங்களால் நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய் அதை காணாமல் விட்டு விடுகிறோம்.

6.    வாழ்க்கை எப்போதும் இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது எடு அல்லது விடு 

இன்றைய லொள்ளு


எங்கேயெல்லாம் கடை போட்டு இருக்காங்கே!!



16 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

தலைப்பே வில்லங்கமா இருக்கே?

SURYAJEEVA சொன்னது…

நல்லா தான் யோசிக்கிறீங்க, அப்படியே அர்னோல்ட் படம் ஒன்னு இருக்கு அதையும் பாத்திடுங்க "junior" film name
for review
http://www.imdb.com/title/tt0110216/

K சொன்னது…

ஆஹா என்ன ஒரு அருமையான சிந்தனை! வாழ்த்துக்கள் ரமேஷ்!

விச்சு சொன்னது…

அண்ணே! நல்லாதான் இருக்கு (லீவாவது நிறைய கிடைக்குமே)...

M.R சொன்னது…

ஹா ஹா நல்ல கற்பனை

சென்னை பித்தன் சொன்னது…

ஹா,ஹா
ஓட்டுப் போட்டாச்சு

வவ்வால் சொன்னது…

@suryajeeva

அந்த அர்னால்ட் படம் பேர் சொல்ல தான் வந்தேன் சூர்யஜீவா முந்திகிட்டார். அதே போல கிட்ஸ் பார்த்துக்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை சொல்லும் டாடி டே கேர் படத்திலும் காட்டி இருப்பாங்க, இதுவும் அர்னால்ட் படம் என நினைக்கிறென்(அல்லது எட்டி மர்பியா?)

பெயரில்லா சொன்னது…

குழந்தைங்க எல்லாம் அபாரமான சக்தியோட இருப்பாங்க.
பெண்கள் எல்லாம் கொஞ்சம் புருஷங்களுக்கு பயந்து நடப்பாங்க. (புள்ளய நீயே பெத்துக்கோன்னு சொல்லிட்டா!)
புள்ளங்க பொறக்கும் போது அழுவாது. கெக்கெ பிக்கென்னு சிரிக்கும்.

Yoga.s.FR சொன்னது…

அருமையாக இருந்தது!நான் கூட ஒண்ணப் பெத்துப் போடலாமான்னு தோணுது!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரைட்டு.... நடத்துங்க...

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
நலமா?
மொதலாவது சிந்தனை சூப்பர்.

ஆம்பிளைங்க குழந்தை பெத்துக்கிற விடயம்.

நீங்க ஓக்கேன்னா உங்களிலையே ட்ரை பண்ணிப் பார்ப்போமா;-)))

சூப்பரா கலாய்ச்சிருந்தீங்க.

உட்கார்ந்து யோசிப்பீங்களோ...

நிரூபன் சொன்னது…

இன்றய சிந்தனை இன்றைய லொள்ளு இரண்டுமே அசத்தல் பாஸ்.

K.s.s.Rajh சொன்னது…

அட இங்கையும் நானா யோசிச்சேன் என்று தொடர் ஓடுதா?

ஏன் பாஸ் வில்லங்கமா யோசிக்கிறீங்க ஆம்பளையா பொறந்தது எவ்வளவு சவ்கரியம் நமக்கு அதில ஏன் வில்லங்கமா யோசிக்கிறீங்க

அப்பறம் இன்றைய சிந்தனை சூப்பர்

ராஜா MVS சொன்னது…

இன்றைய சிந்தனை அருமை.... நண்பரே.......

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல்!

Sudarsan சொன்னது…

Urs 'Indraiya Sindanai' in most of d article is superb..continue ur gud work..!!!