வியாழன், செப்டம்பர் 08, 2011

நல்லா போடுறாங்கயா நங்கூரம்

ஒரு நாளு மூணு அரசியல்வாதிங்க (யார் பேரு வேணா வச்சுக்குங்க) கார்ல போகும் போது  ஒரு விபத்துல மாட்டிக்கிட்டாங்க. மூணு பேரும் செத்தும் போயிட்டாங்க, நேரா எமலோகம் எமன் அவங்களை பார்த்த உடனே

"மொதோ ரெண்டு பேரையும் சொர்க்கத்துக்கும், கடைசியா இருந்த வயசான ஆளை நரகத்துக்கும் அனுப்புங்க" அப்பிடின்னாரு

நரகத்துக்கு போக சொன்னவருக்கு கடுப்பு,

"இது அநியாயம் எமா, எங்களை விசாரிக்காம நீ பாட்டுக்கு என்னை நரகத்துக்கும் அவங்கள  சொர்க்கத்துக்கும் போகச்சொல்லுற. நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா, ஏன்னா நாங்க மூணு பேரும் ஒரே மாதிரி லஞ்சம் வாங்கி இருக்கோம், மக்களை ஏமாத்தி நிறைய கொள்ளை அடிச்சு இருக்கோம், கொள்ளை அடிச்ச பணம் வெளிநாட்டுல பதுக்கி வச்சு இருக்கோம்.  நான் மட்டும் ஏன் நரகத்துக்கு போகணும்?"

"சரி நான் போட்டி வைக்கிறேன் பாஸ் பண்ணுறவாங்க எல்லாம் சொர்க்கத்துக்கு மத்தவங்க எல்லாம் நரகத்துக்கு சரியா?"

மூணு பேரும் ஒத்துக்கிட்டாங்க

மொதோ ஆளைப்பார்த்து "நான் சொல்லுறதை இங்கிலீஷ்-ல ஸ்பெல்லிங் சொல்லணும்,  INDIA - ஸ்பெல்லிங் சொல்லு?"
அவர் சரியா சொல்லீட்டாரு

ரெண்டாவது ஆளை பார்த்து "ENGLAND ஸ்பெல்லிங் சொல்லு? "
அவரும் சொல்லிட்டாரு

கடைசியா நம்ம பெரியவரை பார்த்து "SRILANKA ஸ்பெல்லிங் சொல்லு"

"இது அநியாயம் எனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது தமிழ்-ல ஏதாவது கேளுங்க சொல்லுறேன்!!"  அப்பிடின்னாரு பெருசு

"சரி தமிழ்-ல கேள்வி சரியா சொல்லீட்டா சொர்க்கம் இல்ல நரகம்"

"நான் சொல்லுறதை பேப்பர்-ல எழுதுங்க"

மொதோ ஆளை பார்த்து "நாய் லொள் லொள் என குலைக்கும்"   மொதோ ஆளு சரியா எழுதி குடுத்தாறு

ரெண்டாவது ஆளை பார்த்து "ஆடு மே மே என கத்தும்" அவரும் சரியா எழுதி குடுத்துட்டாரு

கடைசியா இவரை பார்த்து "இருபத்தி நாலாம் புலிகேசியின் இருபத்தி இரண்டு திட்டங்களில் இரண்டு சோடை போனாலும் பரவாயில்லை இருக்கும் இருபது சரியாய் இருக்கிறது"

கொஞ்சம் கஷ்டம் ஆனா அவரால சரியா எழுத முடியலை.

"எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் குடுங்க எமா, எனக்கு தமிழ் தெரியும் நான் நிறைய வரலாற்று இலக்கியம் எழுதி இருக்கேன் அதனால வரலாறு சம்மந்தமா ஏதாவது கேளுங்க சரியா சொல்லுறேன்" அப்பிடின்னாரு பெருசு.

எமனும் மனசு மாறி சரி அப்பிடின்னு ஒத்துக்கிட்டாரு

"இந்தியாக்கு சுதந்திரம் எப்ப கெடைச்சது?" மொதோ ஆளைப்பார்த்து கேட்டாரு

"1947" - அப்பிடின்னாரு மொதோ ஆளு

"இந்திய சுதந்திரப்போர்-ல இறந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு?" ரெண்டாவது ஆளைப்பார்த்து கேட்டாரு

"ஏதாவது சாய்ஸ் கெடைக்குமா? ரெண்டாவது ஆளு கேட்டாரு.

"அ) 1,00,000 ஆ) 2,00,000 இ) 3,00,000 மூணு ஆப்ஷன் குடுத்தாரு எமன்

"2,00,000"  - அப்டின்னாரு ரெண்டாவது ஆளு அவரும் பாஸ்

இப்ப நம்ம ஆளைப்பார்த்து

"இந்த 2,00,000 பேர்-ல ஒரு 100 பேரு ஊரு அட்ரஸ் சொல்லுங்க" அப்பிடின்னாரு எமன்

சொல்லத்தெரியல பெருசுக்கு, தோல்விய ஒப்புக்கிட்டு "சரி நான் நரகத்துக்கே போறேன்" அப்பிடின்னு புறப்பட்டாரு பெருசு..

நீதி :  நிர்வாகம் உங்களை பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நீங்கள் தப்பிக்க வழி இல்லை



இன்றைய தத்துவம்

சில பூக்கள் வெயிலில் மலரும்
சில பூக்கள் நிழலில் மலரும்
கடவுளுக்கு தெரியும் எது
உங்களுக்கான இடம் அங்கேயே
நீங்கள் இருக்கிறீர்கள்
எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாய் இருங்கள் 


சிலரை மாற்ற வேண்டுமா நீங்கள் மாறுங்கள்
ஒரே சூரியன் தான்
வெண்ணையை உருக வைக்கும்
களிமண்ணை இறுக வைக்கும்

வெள்ளம் வரும் போது
மீனுக்கு எறும்பு உணவு
வெள்ளம் வற்றினால்
மீன் எறும்புக்கு உணவு
எல்லாம் காலம்
செய்யும் மாயம்
எல்லோருக்கும் ஒரு
காலம் உண்டு



இன்றைய லொள்ளு - தொழில்நுட்ப வளர்ச்சி 



14 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாப்ள கலக்கிட்டீங்க!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

லொள்ளு அருமை .

N.H. Narasimma Prasad சொன்னது…

ஒரு பதிவு போட்டாலும் நச்சுன்னு போடுறிங்க. வாழ்த்துக்கள்.

rajamelaiyur சொன்னது…

Last cartoon super

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஹா...ஹா.... சூப்பரு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நீண்ட இடைவேளக்கு பிறகு வந்தும் அசத்திவிட்டிற்க்ள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதையை தனியாக பாராட்டியாக வேண்டும்...


நமக்காகதான் எல்லாம் இதை மறந்தால் நாம் நாமில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றைய லொல்லும் உண்மைதான்....

படிஏறியபோது நல்லாயிருந்த நாம் லிப்டில் பழகிய பிறகு கெட்டுவிட்டோம்...

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
முதலாவது கதை, நாம் தவறு செய்தால் சட்டம் எப்படியும் எம்மைத் தண்டித்தே தீரும் என்பதனைச் சொல்லி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

மகிழ்ச்சி பற்றிய பூக்களினை ஒப்பிட்டுக் கூறியுள்ள தத்துவம் கலக்கல்.

நிரூபன் சொன்னது…

இன்றைய லொள்ளு..
ஹே..ஹே...தொழில்நுட்பம் வளர ஆளும் வளருறாரே;-)))))))))

அவ்...........

குறையொன்றுமில்லை. சொன்னது…

இது கூட நல்லா இருக்கே.

மகேந்திரன் சொன்னது…

கலக்கல் பதிவு..

பெயரில்லா சொன்னது…

நச் பதிவு... வாழ்த்துக்கள்...