புதன், ஜூன் 29, 2011

ஹா ஹா ஹா

அம்மா சிங்கம்     : குட்டி என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?
குட்டி சிங்கம்       : ஒரு மனுசன புடிக்க மரத்த சுத்தி ஓடிக்கிட்டு இருக்கேன்
அம்மா சிங்கம்    : எத்தனை வாட்டி சொல்லீருக்கேன், சாப்பிடும் போது விளையாடக்கூடாதுன்னு 

கடைக்காரர்     : உங்களுக்கு பாக்கெட் கால்குலேட்டர் வேணுமா ஸார்
இவர்                   : இல்லை என்கிட்ட எத்தனை பாக்கெட் இருக்குனு எனக்கு தெரியும்

ஆசிரியர்        : ராஜு, பூனை குடும்பத்தை சேர்ந்த நான்கு விலங்குகளின் பெயர்களை சொல்லு?? 
ராஜு            : அப்பா பூனை,அம்மா பூனை அப்புறம் ரெண்டு குட்டி பூனைகள்

நர்ஸ்            : இப்ப கொஞ்சம் ஈசியா இரும வருதே
பேசண்ட்         : ஆமா நைட் எல்லாம் பிராக்டிஸ் பண்ணினேன்

பேசண்ட்         : டாக்டர் எனக்கு தூக்கமே     வரமாட்டேங்குது, ஏதாவது  செய்யுறீங்களா?
டாக்டர்            :  நான் வேணா தாலாட்டு பாடவா?

டாக்டர்            : நான் ஒண்ணும் செய்யமுடியாதுங்க, இது பரம்பரை வியாதி
பேசண்ட்        : அப்ப பில்லை எங்க அப்பாகிட்டே வாங்கிக்குங்க
டாக்டர்            : எங்க அவரு
பேசண்ட்        :அவரு செத்துப்போயிட்டாரு

பேசண்ட்        : பாருங்க டாக்டர், இப்ப மணி காலையில மணி 2:30 இன்னும் எனக்கு தூக்கம் வரலே
டாக்டர்            :அதுக்கு ஏன்யா எனக்கு ஃபோன் பண்ணே, இனி எனக்கு தூக்கம் வராது.

பேசண்ட்        : டாக்டர் நான் எதை பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது
டாக்டர்            : அப்ப ஒரு கண்ணை மூடிக்குங்க

என்ன எல்லோரும் சிரிச்சாச்சா இப்ப கொஞ்சம் தத்துவம் பேசுவோமா

காலம் எல்லா காயத்தையும் ஆற்றும் என்று சொல்பவர்கள் கூட காயம்பட்டவுடன் காத்து இருப்பது இல்லை

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஜோக்ஸ் நல்லா இருக்கு

மாலதி சொன்னது…

very nice

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் ஜிரிப்பு ஹே ஹே ஹே ஹே....
அருமையான தத்துவம்....!!!

நிரூபன் சொன்னது…

நகைச்சுவைகள் அனைத்தும் செம சூப்பர்.

டாக்டருக்கு தாலாட்டுப் பாடின ஆளு நீங்க இல்லைத் தானே.

ஹி...ஹி...