திங்கள், மார்ச் 28, 2011

செய் எதுவும் செய்

நாமெல்லாம் தேநீர் பை போன்றவர்கள்,
ஏனெனில் சூடு நீரில் மூழ்கடிக்கப்படும் போது
அதன் திடம்  முழுமையாய் தெரியும்,
அது போலே துன்பங்கள் உங்களை அழுத்தும் போது
நீங்கள் கடவுளின் பிரியமான தேநீர் கோப்பை
என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

கடவுள் வாக்களிக்கவில்லை
உங்களுக்கான வானம் எப்போதும் தெளிவாய்
மேகமில்லா சூரியன்
துன்பன்மில்லா இன்பம்
வலியில்லா அமைதி

மாறாக

உங்களுக்குரிய வலிமை
வேலை செய்பவர்களுக்கு ஓய்வு
வழிக்கான ஒளி
பெரிய கருணை
சாகாத அன்பு

கடவுள் நாளை உன்னிடம் என்ன கேட்பார்
என்ன கனவு கண்டாய் என்றா?
என்ன நினைத்தாய் என்றா?
என்ன திட்டம் போட்டாய் என்றா?
என்ன அடைந்தாய் என்றா?

இல்லை நண்பா
என்ன செய்தாய் என்று மட்டுமே

இந்த உலகம் அபாயகரமாக மாறியது யாரால்
பிறருக்கு துன்பம் செய்பவராலா?
இல்லை இல்லவே இல்லை
ஆனால் செய்பவரை கண்டும் ஒன்றும் செய்யாமல்
இருப்பவரால் மட்டுமே

எனவே செய் நல்லது மட்டுமல்ல
தீயதை பொசுக்கும் எதுவும் செய்

கருத்துகள் இல்லை: