சனி, ஜூலை 30, 2011

ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - நடிகையின் கணவர் பேட்டி

1.    நானும் என் மனைவியும் விவாகரத்து வாங்கிவிட்டோம் ஏனென்றால் அவள் கடவுளாம் நான் பக்தனாக நடக்கவில்லையாம்

2.    நான் மனநலம் குன்றியவன் அல்ல ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமாய் இருக்கிறேன்

3.    வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இருந்தது ஆனால் இப்போது அதுவும் உடைந்து விட்டது

4.    நான் ஒரு முழு மூடன் அல்ல ஆனாலும் ஒரு அறிவு இப்போ அவுட்

5.    கொல்வது குற்றம் என்பதாலயே சிலர் இன்னும் உயிரோடு உலவிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லாவிட்டால் என்றோ கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்

6.    வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பின்னணி இசை வருவது இல்லை

7.    நீ பொறாமையில் பேசுகிறாய் என்று உணரமுடிகிறது, ஏனெனில் வார்த்தைகள் மட்டுமே என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறது.

# மேலே சொன்னது எல்லாம் நடிகையின் கணவர் விவாகரத்திற்கு பிறகு கொடுத்த பேட்டி  (கற்பனை மட்டுமே) , 

கீழே உள்ளது எல்லாம் நானா யோசிச்சேன் 

1.    வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது, உங்கள் வாழ்க்கையை யாரும் பிடிங்கிக்கொள்ள முடியாது

2.    கடவுள் முட்டாள் மனிதர்களை நேசிக்க வேண்டும் ஏனெனில் அதிகம் பேரை அவ்வாறே படைத்து இருக்கிறான்

3.    நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன், மீண்டும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை 

4.    ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் ஆனால் அதை வரைய மூவாயிரம் மூளை வேண்டும்

5.    முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது கோழிக்கு சில நாள் வேலை ஆனால் மூட மனிதனுக்கோ வாழ்நாள் பொறுப்பு

வெள்ளி, ஜூலை 29, 2011

விடையில்லா வினாக்கள்

இன்னும் எத்தனை
அடிகள் முன் வைக்க வேண்டுமோ
வாழ்க்கை பாதையை கடக்க?

இன்னும் எத்தனை
வினாடிகள் தேவைப்படுமோ
காத்திருப்பு முடிய ?


இன்னும் எத்தனை
போர்கள் சந்திக்க வேண்டுமோ
வெற்றி பெற ?

இன்னும் எத்தனை
கடவுள்கள் தேவையோ
பாவங்களை மன்னிக்க ?

இன்னும் எத்தனை
துரோகம் செய்ய வேண்டி இருக்குமோ
தன்னம்பிக்கைக்கு ?

இன்னும் எத்தனை முறை
கட்டுபடுத்த வேண்டி இருக்குமோ
முன்கோபத்தை ?

இன்னும் எத்தனை முறை
சகிக்க வேண்டுமோ
நீதியின் அநீதிகளை ?

இன்னும் எத்தனை பாதைகளை
தேட வேண்டி இருக்குமோ
வெற்றியின் வாசல் தொட ?

இன்னும் எங்கெல்லாம்
தேடவேண்டுமோ உண்மையான
அக்கறை உள்ள மனிதர்களை ?

இன்னும் எங்கெல்லாம்
தேட வேண்டுமோ
விடியலுக்கான கீற்று ?

கிழக்கு, மேற்கு
தெற்கு, வடக்கு
வேறு எங்கும் காண கிடைக்கவில்லை
பிறருக்கு கண்ணீர் சிந்தும் கண்களை

உலகம் தேடிக்கொண்டே
இருக்கும் இந்த கேள்விகளுக்கான
விடைகள் கிடைக்கும் வரை...

வியாழன், ஜூலை 28, 2011

கரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...


கரடி என்ன செய்யுது கொஞ்சம் பாருங்கோ



வாழ்வின் விளிம்பில்

நீங்க எவ்வளவோ மோசமான தருணங்களை சந்தித்து இருக்க கூடும்.
கீழே சில மயிர்கூச்செறியும்  மோசமான தருணங்கள் உள்ளன. இதில் எது மிக மோசமானது  என்பதை வரிசை படுத்துங்களேன்

















 

புதன், ஜூலை 27, 2011

வள்ளுவம் தோற்கிறது

திட்டி முடிந்த பின்
கழுத்தோடு கையை கட்டி
வாயில் புன்சிரிப்போடு
போங்க டாடி என
கொஞ்சும் குழந்தையிடம்
வள்ளுவம் தோற்கிறது
ஆறாதே நாவினால் சுட்ட வடு தவறென்று!!!