வியாழன், செப்டம்பர் 29, 2011

இது காதல் உணரும் தருணம்

இன்றைய கவிதை

புல்வெளியில் நடக்கும் போது
முள் குத்தியது நெஞ்சில்
என்ன செய்வேன்

மூச்சில் அடிக்கிறது புயல்
கண்ணிலோ பெருமழை
நெஞ்சில் எரிமலை
பூமியின் சுழற்சி கால்களில்

என் பிரியமானவளுடன்
சிறு சண்டை வரும் போதெல்லாம்
எல்லாம் பஞ்ச பூதங்களையும்
ஒரு சேர அனுபவிக்கிறேன்

முகத்தில் கீறி இருந்தாலும்
நொந்து போயிருக்க மாட்டேன்
மனதில் அல்லவா கீறி விட்டாள் 

என் மீதான
அவள் காதலை
அவளுக்கு உணர்த்தும்
இனி வரும்
நாளெல்லாம்




இன்றைய சிந்தனை


1.    இன்றைய நாம் நேற்றைய எண்ணங்களின் மிச்சம், நல்ல நாளை இன்றைய நல்ல எண்ணங்கள்  மூலமே

2.    விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்

3.    வாழ்க்கை எளிமையானது ஆனால் எளிதானது அல்ல

4.    நாம் பிறக்கும் போது உடன் வந்தது ஈரம், நிர்வாணம் மற்றும் பசி

5.    நாம் வாழும் வாழ்க்கை முள் செடியின் மேல் இருக்கும் தேனை நக்குவது போல் தான் பல சமயம் இருக்கிறது

6.    எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால் உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது

7.    செல்வம் இல்லாமல் போகலாம் ஆனால் வாழ்க்கை இருக்கும்

8.    எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல் இருக்கும்.

9.    வாழ்க்கை புத்தகத்தில் கேள்விகள் மட்டுமே உண்டு பதில் இருப்பதில்லை

10.    வாழ்க்கையில் வெற்றி பெற நிறைய வேலை செய்யணும், நிறைய விளையாடணும் அப்பறம் வாயை  மூடிக்கிட்டு இருக்கோணும்.



இன்றைய லொள்ளு








17 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
என் பிரியமானவளுடன்
சிறு சண்டை வரும் போதெல்லாம்
எல்லாம் பஞ்ச பூதங்களையும்
ஒரு சேர அனுபவிக்கிறேன்
///////

காதலுக்குள் சிறு சண்டையென்றாலும் இப்படித்தான்...
எதார்த்தமான வரிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////////

/////
விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்
//////

அழகிய சிந்தனை..
தன்னுடைய தவறுகளை உடனே சரிசெய்து விட்டால் உலகில் எல்லாம் சரியாகிவிடும்....

சக்தி கல்வி மையம் சொன்னது…

வித்தியாசமான சிந்தனையில் ஒரு கவிதை.. அருமை..

லொள்ளு சூப்பர்..

M.R சொன்னது…

கவிதை அருமை

வித்தியாசமான சிந்தனை துளிகள்

Unknown சொன்னது…

சூப்பர் கவிதை அருமை நண்பா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாயை மூடிகிட்டு இருக்கணும்//

ஹா ஹா ஹா ஹா இதுதான் சூப்பர் ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை அருமை மக்கா...!!!

மகேந்திரன் சொன்னது…

உணர்வுத் தவிப்பின்
கண்ணாடிக் கவிதை
அருமை.
இன்றைய சிந்தனைகள் நல்லா இருக்கு நண்பரே.

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் பாஸ்,

மனதில் வலியைத் தாங்கி,
காதலின் மகிமையினை உணர்ந்து கொண்ட ஜீவனின் உணர்வுகளைக் கவிதை சொல்லி நிற்கிறது.

இன்றைய சிந்தனை கலக்கல் பாஸ்.

லொள்ளும் அசத்தல்..

SURYAJEEVA சொன்னது…

குடியிருக்கும் அறையை தானே கீற முடியும்.. அதாவது பிராண்ட முடியும்

கோகுல் சொன்னது…

கடைசியா சொன்னிங்க பாருங்க!அப்படி யாரும் இருந்துட்டா பிரச்சனையே இருக்கிறது போங்க!
என்ன வாழ்கையில் சுவாரஸ்யம் கொஞ்சம் கொறஞ்சு போய்டும்.

பெயரில்லா சொன்னது…

இன்றைய * நல்லாயிருந்தது நண்பரே...

செங்கோவி சொன்னது…

பத்தாவது சிந்தனை சூப்பர்.

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த பூதம் சண்டை போட்டால் பஞ்ச பூதமா... ம்ம்ம் கலக்குங்க...

உணவு உலகம் சொன்னது…

சிந்தனை அற்புதம்.

maruthamooran சொன்னது…

லொள்ளு படம் சூப்பர்.

கவிதைகள் இன்னும் மெருகேற வாழ்த்துக்கள்.