வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

குப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிறுதுளி


நாம் மறந்த வரலாற்றை நினைவு படுத்தும் சிறு முயற்சி

பசி தீர்த்தல் இலக்கு
வழி ஒன்றே அது உழைப்பு
மூன்றுவேளை
முழுவயிறு லட்சியம்
ஒருவேளை
முழுவயிறு நிச்சயம்

இந்தியா
மூன்று பக்கம் கடல்
ஒரு பக்கம் மலை
எங்க பார்த்தாலும் தலை!

நான் அஜித் சொல்லலைங்கோ ஜனத்தொகையை பத்தி சொல்லுறேன் அதுவும் அடிப்படை வசதிகள் சரியா கிடைக்காம இருக்குற மக்களோட வாழ்க்கை இப்பிடி தான் இருக்கு. இத்தனை மனித வளங்கள் இருந்தும் ஏன் இந்தியா இன்னும் இப்பிடியே இருக்கு?, மனித வளத்தை இன்னும் சரியான வழியில் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது.

இதை சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு, ஆனா இது வரை போட்ட திட்டங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கு அதற்கு ஆதாயமா அவங்களும் நிறைய வாங்கி அனுபவிச்சாச்சு.. நீங்க எந்த பேரு வேணா வச்சுக்கிடலாம், லஞ்சம் இல்லை அன்பளிப்பு இல்ல எதுவோ உங்களுக்கு புடிச்சது     

சமீபத்தில ஒரு பாட்டு வாகை சூடவா படத்தில் இருந்து ஒரு வரி சொல்லுறேன்

"அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணை கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்"

இப்பிடி கஷ்ட ஜீவனம் நடத்துற மக்கள் இங்கே அதிகம்.. 

இன்னைக்கு தான் இது எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒரு பெருசு உண்ணாவிரதம் உக்காந்துகிட்டு இருக்காரு, இன்னும் நெறைய பெருசுங்க சுத்தி கத்தி திட்டிக்கிட்டு இருக்காங்க,  இன்னொரு பெருசு எல்லாத்தையும் மௌனமா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு. நாட்டுல சில பெருசுங்க தொல்லை ஜாஸ்தியாயிட்டே வருது.  இது கூட பிசிபிசித்து போய்விடும்ன்னு தான் எனக்கு தோணுது.  இது எல்லாம் புதுசு இல்லை, என்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம கிட்ட இந்த நாட்டை விட்டுட்டு போனானோ அப்ப இருந்தே இருக்கு இதுக்கு முன்னாடி நடந்த போராட்டங்கள் எதுக்காக நடந்துச்சு அதன் முடிவு என்னாச்சு அதைப்பத்தி தான் இன்றைய குப்பைதொட்டியில தேடப்போறோம்.. 

காலிஸ்தான் கோரிக்கை

நோக்கம் :    இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கும் பஞ்சாப் பகுதியை பிரித்து ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்க சீக்கிய இன மக்களால் தொடங்கப்பட்ட முயற்சி.  18 ஆம் நூற்றாண்டுக்கு பின் சீக்கிய பேரரசு மீண்டும் உருவாக்க வேண்டும்  நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கம் 1970 மற்றும் 1980 களில் அதன் உச்சநிலையை அடைந்தது. இப்போதெல்லாம், அது பரவலாக ஒரு சிறிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு சீக்கிய ஆதரவாளர்கள் நன்கொடைகள் மூலம் ஒரு சுதந்திர சீக்கிய நாடு பெற இந்த போராளி குழுக்கள் முயற்சிகள் செய்து வருகின்றன, இன்னும் இளைஞர்களை ஈர்க்க மற்ற நாடுகளில் இருந்து நிதி உதவிகளையும் பெற்று வருகின்றன. 

1971 இல், காலிஸ்தான் ஆதரவாளராக ஜக்ஜித் சிங் செளகான், அமெரிக்கா பயணித்தது. அவர் காலிஸ்தான் உருவாவதை பிரகடனம் செய்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரம் அளித்தார் அதன் மூலம் மில்லியன் டாலர்களை சேகரிக்க முடிந்தது.

ஏப்ரல் 12, 1980 இல்,  அனந்தபூர் சாஹிப் அவர்கள் இந்திரா காந்தியோடு  ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி பின் "காலிஸ்தான் தேசிய கவுன்சில்"  உருவாக்கம் பற்றி அறிவித்தார். அவர் தன்னை அதன் ஜனாதிபதி என்றும் மற்றும் பல்பிர் சிங் சாந்து பொது செயலாளர் என்று அறிவித்தார். மே 1980 இல், ஜக்ஜித் சிங் செளகான் லண்டன் பயணித்தது மற்றும் காலிஸ்தான் உருவாவதை அறிவித்தார். இதே போன்ற ஒரு அறிவிப்பு பல்பிர் சிங் வெளியிட்டார் மேலும் அதை தொடர்ந்து காலிஸ்தான் நாணயம் வெளியிடப்பட்டது.   அமிர்தசரஸ் மற்றும் பிற இடங்களில் அதிகாரிகள் செயலற்று போனனர்.   இதை ஒரு காங்கிரஸ் கட்சியின்  அரசியல் ஸ்டண்ட் என்று லோங்வால் தலைமையிலான அகாலி தளம் எதிர்த்து குரல் எழுப்பியது. 

1980 இல், சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்திற்கு சாதகமாக நடக்க ஆரம்பித்ததால் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.  அதில் ஒன்று புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star)

புளூஸ்டார் நடவடிக்கை என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தியின்  ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கிய கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது.  அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரங்கள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "புளூஸ்டார் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்குமென கூறுகின்றன.

இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர்.

ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி அவர்கள் இரண்டு சீக்கிய மெயக்காப்பாலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், "இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்", என்று

இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்பு கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் தனிநாடு கோரிக்கை தடை செய்யப்பட்டு உள்ளது, மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் 1990 களின் ஆரம்பத்தில் பஞ்சாப் முக்கிய பிரிவினைவாத கிளர்ச்சியை அடக்கிவிட்டது, ஆனாலும் பல இந்திய சீக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் இந்திய உள்ளே அமைதியான முறையில் சுதந்திர காலிஸ்தானுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.  இன்னும் தள் கல்சா போன்ற இயக்கங்கள்   சர்வதேச அளவில் காலிஸ்தானுக்கு போராடி வருகிறது இன்னும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு வெளியே இன்னும் தீவிரமாக உள்ளன.

பஞ்சாப் தற்போதைய நிலைமையில் அமைதியான உள்ளது.   தேசப்பற்று, இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே புதுப்பிக்கப்பட்ட மரியாதை உயர் நிலை எல்லாம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். சீக்கியர்கள்  இன்னும் தங்களின் தனித்துவத்தை சமூகத்தில் பராமரித்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது ஒரு சீக்கியர் (மன்மோகன் சிங்) பிரதமராக வரமுடிந்தது மனமாற்றங்கள் மூலமே.

 இது போலே உலகில் தமிழர் அதிகம் உள்ள பிற நாடுகளில் தமிழர்கள் தலைமை ஏற்கும் நாள் தொலைவில் இல்லை.  நான் இறப்பதற்குள் உலகமே ஒரு தமிழன் தலைமையில் நடைபோடுவதை பார்த்துவிட்டு சாக வேண்டும்

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை

16 கருத்துகள்:

Chitra சொன்னது…

மறக்கப்பட்ட - மறக்கடிக்கப்பட்ட வரலாற்று குறிப்புகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தொடருங்கள் ... தொடர்கிறேன் .வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தொடருங்கள் ... தொடர்கிறேன் .வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

கலக்கல் ரமேஷ் ...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்னும் கிளருகையில் வெளியில் வராத உண்மைகள் வுரும் என்று நினைக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சுவாரஸ்யங்களுடன்..

தொடருங்கள்...

மகேந்திரன் சொன்னது…

தமிழ்மணம் 7

மகேந்திரன் சொன்னது…

வரலாற்றுக் குறிப்புகள் கவர்ந்தன நண்பரே...

கோகுல் சொன்னது…

அப்படி ஒரு தமிழன் எங்கே இருக்கிறான்?தேடுவோம்!

kobiraj சொன்னது…

வரலாற்று குறிப்புக்கள் அருமை நண்பரே

உணவு உலகம் சொன்னது…

வரலாற்றுக்குறிப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வரலாற்றை கிளறியது நன்றாகவே இருக்கு....பகிர்வுக்கு நன்றி மாப்ள!

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.

மன்னிக்கவும்,

நிரூபன் சொன்னது…

வரலாற்றின் அடிப்படையில் தமிழர்கள் மீண்டும் முடி சூட வேண்டும் எனும் உணர்வினைச் சொல்லியிருக்கிறீங்க.
இந்த ஆசை வெகு விரைவில் நிறைவேற வேண்டும் நண்பா.

ராஜி சொன்னது…

வரலாற்று குறிப்புகள் அருமை சகோ.

உணவு உலகம் சொன்னது…

வாசமிகு வரலாற்றுப்பதிவு.