திங்கள், ஜூன் 06, 2011

நம்முடைய பிரார்த்தனைகளின் பலன்கள், நாம் பிரார்த்திப்பதால் மட்டும் இல்லை

ஒரு நாளு குப்புவும், சுப்புவும் படகுல போயிக்கிட்டு இருந்தாங்களா? அப்ப பெரிய சூழல்ல மாட்டிக்கிட்டாங்க, படகு உடைஞ்சு ரெண்டு பேரும் கடல்ல விழுந்துதிட்டாங்க. கண்ணு முழிச்சு பார்க்கும் போது, ஏதோ ஒரு தீவுல மயக்கமா கிடந்தாங்க.  மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா அந்த தீவுல இவங்கள தவிர வேற யாரும் இல்லை.

"சரி இனி எப்பிடி நம்ம ஊருக்கு போறதுன்னு யோசிப்போம்" அப்டின்னாரு சுப்பு

"இந்த போங்கு விளையாட்டுக்கு நான் வரல, நீ தனியா போ, நான் தனியா போறேன்"   அப்பிடின்னாரு குப்பு

சுப்புவுக்கு ஒரே வருத்தம் இருந்தாலும் "சரி நான் அந்த பக்கம் போயிடுறேன்" அப்பிடின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

ரெண்டு பேருக்கும் ஒரே பசி, இப்ப சாப்பிட ஏதாவது கிடைச்சா நல்லா இருக்கும் அப்பிடின்னு நெனைச்சாங்கலாம், நினைச்ச நேரத்தில அங்க இருந்த மரத்தில காய்கள் எல்லாம் பழமா மாறிடுச்சாம்.

ஒரு வாரம் கழிச்சு, குப்புவுக்கு ஒரே அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, சும்மா சாப்பிட்டு தூங்கி எந்திரிக்கிறது. இங்க ஒரு பொண்ணு மட்டும் இருந்தா நல்லா இருக்குமே அப்பிடினு நெனைச்சார், அன்னைக்கு நைட் இன்னொரு படகு அதே மாதிரி உடைஞ்சி, குப்பு இருந்தா கரை பக்கம் ஒதுங்குச்சு, அதுல ஒரு அழகான பொண்ணு குப்பு எதிர் பார்த்த மாதிரி. அவருக்கு ஆச்சரியமா இருந்தாலும், அந்த பொண்ணை காப்பாத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு.

இப்ப ஒரு வீடு இங்க இருந்தா குடும்பம் நடத்த வசதியாய் இருக்குமே அப்பிடின்னு நெனைச்சார், மேஜிக் மாதிரி  காலையில அவங்க இருந்த எடத்துல ஒரு வீடு வந்துருச்சு. ஆனா சுப்புக்கு இன்னும் ஒண்ணும் கிடைக்கலை, சாப்பாட தவிர

கொஞ்ச நாள் போச்சு, குப்புவுக்கு இனி இங்க இருக்க முடியாதுன்னு தோணுச்சு, "ஒரு கப்பலோ இல்ல படகோ இங்க வந்து நம்மள காப்பாத்த வராதா?"  ன்னு நெனைச்சார், அவரு நெனைச்ச மாதிரியே ஒரு படகு அந்த தீவ நோக்கி வந்தது.

குப்புவும் அவரு பொண்டாடிய கூட்டிக்கிட்டு  படகுல ஏற போனப்ப, ஒரு குரல்
"என்னப்பா குப்பு உன் நண்பன் சுப்புவ விட்டுட்டு நீ மட்டும் போக போறியா? "     அது அந்த தீவு தேவதை இதுவரை அவங்க வேண்டியத நிறைவேத்தி வச்சதும் அதுதான்

"அவன் ஒரு ராசியில்லாத பய இது எல்லாம் நான் நெனைச்சதால வந்தது, இது என் அதிர்ஷ்டம், அதுல அவனுக்கு பங்கு குடுக்கணும்ன்னு அவசியமில்லை" அப்பிடின்னாரு குப்பு

"நீங்க தப்பா நெனைச்சுகிட்டு இருக்கீங்க,  இது எல்லாம் சுப்புவோட அதிர்ஷ்டம் என்ன புரியலையா அவரு தான் நீங்க என்ன    நெனைச்சாலும் நடக்கணும்ன்னு வேண்டிக்கிட்டாரு"

நீதி

நம்முடைய பிரார்த்தனைகளின் பலன்கள், நாம் பிரார்த்திப்பதால் மட்டும் இல்லை

கடவுளை சரணடையுங்கள்

ஒரு நாள் சுப்பு முடி வெட்ட சலூனுக்கு போனாரு, அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சா,    அவரு முறை வர்ற வரை கத்துகிட்டு இருந்தாரு,

அவரு முறை வந்ததும் சேர்-ல போயி உட்கார்ந்தார், அவருக்கு முடி வெட்ட வந்தவரு ஒரு ஓட்டை வாய், ஏதாவது பேசாம முடி வெட்ட மாட்டாரு. அதே மாதிரி சுப்பு கிட்ட பேச ஆரம்பிச்சாரு, எது எதுவோ பேசி கடைசி கடவுளை பத்தி பேச ஆரம்பிச்சாரு. ஒரே திட்டு கடவுள் இல்லவே இல்லைன்ற மாதிரி பேசிக்கிட்டே இருந்தாரு.

சுப்புவும் ஒரு கட்டத்தில பொறுமையை இழந்து, "ஏன்யா இப்பிடி திட்டுற, கடவுள் இல்லைன்னு எப்பிடி சொல்லுற? உனக்கு என்னய்யா தெரியும் கடவுளை பத்தி" அப்பிடின்னாரு,

முடி வெட்டுறவரும் சலிக்கமா, "கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா, நாட்ல இப்பிடி எல்லாம் அநியாயம் நடக்குமா?  ரோட்ல போயி பாருங்க எவ்வளவு பேரு சோறு தண்ணி இல்லாம திரியுறாங்க?, நல்லது செய்யுறவங்க எல்லாம் கஷ்டப்படுறாங்க. கொள்ளை அடிக்கிறவன்,    ஊரை அடிச்சு உலையில போடுறவன் எல்லாம் நல்லா இருக்கான்"  அப்பிடின்னாரு

சுப்புவுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே, சரி இனி இவன் கிட்ட பேச முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டு, சும்மா இருந்துட்டாரு. முடி வெட்டி முடிச்சவுடனே காசை குடுத்துட்டு வெளியே வந்தாரு.  முடி வெட்டுறவர் சொன்ன மாதிரி நெறைய பேரு அந்த மார்க்கெட்-ல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஆனாலும் அவர் மனசு முடி வெட்டுறவர் சொன்னதை ஒத்துக்க முடியலை

கொஞ்ச தூரம் வந்து இருப்பாரு, உடனே சுப்பு மூளையில பல்ப் எரிஞ்சது, உடனே நேரா சலூனுக்கு வந்தாரு, அந்த முடி வெட்டுறவரை பார்த்து இங்க முடி வெட்டுறவங்களே இல்லை அப்பிடின்னாரு.

சுப்புவை ஒரு மாதிரி பார்த்த முடி வெட்டுறவர், "யோவ் இப்ப தானே உனக்கு முடி வெட்டி விட்டேன், உனக்கு ஏதாவது ஆயிடுச்சா? நான் தான் இருக்கேனே" அப்பிடின்னாரு

"இல்லை"  கத்துனார் சுப்பு, "முடி வெட்டுறவங்க இருந்தா ஊர்ல ஏன்யா ஜடா முடியோட நிறைய பேரு சுத்திக்கிட்டு இருக்காங்க, வெளியில போயி பாரு"    

"அதுக்காக முடி வெட்டுறவங்களே இல்லை சொல்லிடுறாத? அவங்க என்கிட்ட வந்தா வெட்டி விடுறேன்" அப்பிடின்னாரு முடி வெட்டுறவர்.

"அது தான், அதே தான்!! நீ இன்னும் கடவுள் கிட்ட போகலை" அப்பிடின்னாரு சுப்பு 

நீதி
    கடவுளை சரணடையாதவர்களுக்கு மனக்கவலையில் இருந்து விடுதலை கிடைப்பது அரிது 

சனி, ஜூன் 04, 2011

பிரச்சனைகள் மட்டுமல்ல, தீர்வுகளின் மேலும் கவனம் வையுங்கள்

இது ஒரு உண்மை சம்பவம், அமெரிக்கா முதன் முதலில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்னான்னா பேனாவை வச்சு விண்வெளியில எழுதமுடியாதுன்னு கண்டு புடிச்சாங்க. அதுக்கு ஒரு கம்பெனி கிட்ட ஆலோசனை கேட்டாங்க. 

அந்த கம்பெனியும் நிறைய ஆராய்ச்சி பண்ணி, எங்க வேணா எழுதுற மாதிரி பேனாவை கண்டுபிடிச்சாங்க, அந்த பேனா எங்க வேணா எழுதும் எந்த வெப்பநிலையிலும் மை ஒண்ணும் ஆகாது அதுக்கு ஆனா செலவு 1,20,00,000. 

இதே பிரச்சனைக்கு ரஷ்யர்கள் எளிதான வேற ஒரு தீர்வு வச்சு இருந்தாங்க என்ன தெரியுமா? அவங்க பென்சில்-ல எழுதுனாங்க.

வியாழன், ஜூன் 02, 2011

நம்மால் முடியும்

ஒரு நாள் இரண்டு பேரு குப்பு, சுப்பு மீன் புடிக்க போனாங்க, இதுல குப்பு புதுசா மீன் பிடிக்க வந்தவரு, சுப்பு மீன் பிடிக்கிறதுல கெட்டிக்காரரு.  ரெண்டு பெரும் மீன் பிடிச்சுகிட்டு இருந்தாங்களா, சுப்பு பெரிய மீனா பிடிச்சு அவரு பெட்டியில வச்சுக்கிட்டு இருந்தாரு. அப்பதான் கவனிச்சாரு குப்பு பெருசா வர்ற மீன திரும்பவும் தண்ணிக்குள்ள போட்டு கிட்டு இருந்தாரு.  

உடனே சுப்பு "என்னய்யா பண்ற பெரிய மீனெல்லாம் தூக்கி தண்ணிக்குள்ள போட்டு வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கே"  அப்பிடின்னு குப்பு கிட்ட கேட்டாரு.

"என் கிட்ட இந்த மீன வறுக்குற அளவுக்கு பெரிய சட்டி இல்லை" அப்பிடின்னாரு குப்பு

இதை படிக்கும் போது குப்புவை நெனச்சி சிரிச்சிருப்போம், ஏன்னா அவருக்கு தெரியல அவருக்கு வேண்டியது கொஞ்சம் பெரிய சட்டின்னு   

சில நேரங்கள்ல நாம கூட குப்பு மாதிரி பெரிய திட்டங்களை, பெரிய வாய்ப்புகளை, பெரிய கனவுகளை தூக்கி எறியிறோம், ஏன்னா நம்மால செய்ய முடியுமா அப்பிடிங்கற சந்தேகம் அல்லது எப்பிடி செய்யிறதுன்னு தெரியாம இருக்குறதுதான். சில சமயம் நாம அந்த வாய்ப்புகளை குறைந்த பட்ச முயற்சி கூட செய்ய தயங்குறோம்.

நாம சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை நமக்கு எப்பவும் வராது, அல்லது எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க நமக்கு சக்தி இருக்கு.

நம்பிக்கையோட எந்த பிரச்சனையும் எதிர் கொண்டால், பாதி பிரச்சனைகள் குறைஞ்சுடும்.

புதன், ஜூன் 01, 2011

இது என்னோட வேலை


இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை  

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,
எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு
ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்