வெள்ளி, அக்டோபர் 07, 2011

இவனுங்க எப்ப திருந்தி ஹூம் நாடு விளங்கிடும்

50 வது கல்யாண நாளுக்கு வந்த அழைப்பிதழை பார்த்து அந்த நண்பருக்கு ஒரே ஆச்சரியம். விழாவுக்கு போயிட்டாரு. அங்க பேசும் போது நண்பர் கேட்டாரு

"இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்களே எப்பிடி?"

"அதுவா நாங்க வாரத்துக்கு ரெண்டு வாட்டி வெளியே போயி சாப்பிடுவோம்."

"அப்பிடியா அப்பறம்"

"ஆஃபிஸ்க்கு போன உடனே அவங்களுக்கு ஃபோன் பண்ணி பேசிடுவேன்"

"ரொம்ப ஆச்சரியம் சார் அப்புறம்"

"ரெண்டு பேரும் வேற வேற பெட்டுல தான் படுப்போம்"

"சுவாரசியாம இருக்கே அப்புறம்"

கொஞ்சம் சோகமா "நேத்து தான் அவளை அவங்கம்மா வீட்டுல இருந்து கூட்டீட்டு வந்தேன்"

"அவங்க எப்ப அவங்கம்மா வீட்டுக்கு போனாங்க?"

"அவங்க தலை பிரசவத்துக்கு!!"

==================================================================

"எங்களுக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருஷம் ஆயுடுச்சு இன்னும் குழந்தை பிறக்கலை, பார்க்காத டாக்டர் இல்ல" - அந்த சாமியாரை பார்த்து சொன்னார் குப்பு

"சரி மகனே நான் நாளைக்கு யாத்திரை கிளம்புறேன், போற வழியில உனக்காக கோவில்-ல விளக்கு ஏத்தி அந்த சாமி கிட்ட வேண்டிக்கிறேன அந்த சாமி உனக்கு அருள் செய்யட்டும்"

"சரி சாமி"

15 வருஷம் கழிச்சு, சாமியார் ஊருக்கு திரும்பி வந்தாரு. வர்ற வழியில குப்புவோட சம்சாரம் அந்த வழியா வந்தாங்க வயிறு கொஞ்சம் பெருசா இருந்துச்சு, சாமியாருக்கு சந்தோஷம்

"என்னமா எப்பிடி இருக்கீங்க, இப்ப தான் அந்த ஆண்டவன் கண்ணை தொறந்துட்டான் போல இருக்கே?"

"சாமி நீங்க எந்த கோயில விளக்கு போட்டீங்க? இன்னும் அது எரிஞ்சுக்கிட்டே இருக்கா அப்பிடி இருந்தா மொதோ அணைச்சூடுங்க சாமி"

"ஏம்மா என்னாச்சு"

"இது எங்களுக்கு 15 வது குழந்தை!!"


இன்றைய சிந்தனை

1.    எதிர்காலத்தின் சிறப்பு அது எப்போதும் நாளைக்கே ஆரம்பிக்கும்

2.    பணத்தால் நாயை வாங்கலாம் ஆனா வாலாட்ட வைக்க அன்பு வேணும் அதவிட முக்கியம் அதுக்கு வால் வேணும்

3.    இங்கே புதிய தவறுகள் எதுவும் இல்லை எல்லாம் பழையதே சில பெரிய மனிதர்கள் செய்துவிடுவதால் விளம்பரபடுத்தப்படுகிறது!

4.    சிரிக்கவோ அல்லது சிரிக்க வைக்க தெரியாவிட்டால் நீங்கள் செத்தாருள் வைக்கப்படுவீர்கள்

5.    நல்லா கவனிங்க நண்பர்களே ஜெயிக்கிற யாரும் "இது வெறும் விளையாட்டுன்னு" சொல்ல மாட்டாங்கே, அது தோக்குறவங்க மட்டும் தான் சொல்லுறாங்கே

இன்றைய லொள்ளு

 


21 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை.

கோகுல் சொன்னது…

இன்னும் ஒண்ணு பதினாறும் பெற்று பெருவாழ்வு-ங்கற பழமொழி உண்மையாகிடும் அது வரை அந்த விளக்க அணைக்க வேணாம்னு சாமியார்கிட்ட சொல்லுங்க!

//

சிரிப்பில் சிந்தனை,சிந்தனையில் சிரிப்பு.
//

இப்படியெல்லாம் பண்ணியுமா இன்னும் இருக்காங்க பாட்டி?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

aahaa...arumai nanba

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காமடி கும்மி சூப்பர்ப் மக்கா, அந்த சாமியார் ரொம்ப நல்லவனோ...???

Unknown சொன்னது…

எப்படியா இப்படியெல்லாம் மாப்ள கலக்கறீங்க!

பெயரில்லா சொன்னது…

லொள்ளு சூப்பர்...
முதல் ரெண்டு பிட்டும் கலக்கல்...

Avani Shiva சொன்னது…

palaya kallu irunthalum sogama irukku

rajamelaiyur சொன்னது…

இன்றைய சிந்தனை அருமை

rajamelaiyur சொன்னது…

லொள்ளு சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இரண்டாவது ஜோக்கு செம.....

உணவு உலகம் சொன்னது…

இரண்டு ஜோக்கும் அருமை.

தனிமரம் சொன்னது…

இரண்டாவது விளக்குச் சமாச்சாரம் சூப்பர் கமடி!

SURYAJEEVA சொன்னது…

பாட்டிக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தான்

ராஜி சொன்னது…

பொண்டாட்டி வெளியூரிலிருந்தால்தான் நம்ம புள்ளைங்க சந்தோஷ்மாவே இருக்காங்க போல.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லாதான் சொல்லி இருக்கீங்க.

நாவலந்தீவு சொன்னது…

செம்ம லொள்ளு....
சூப்பர்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) சொன்னது…

சிந்தனை 2 சூப்பர்.

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,

நலமா?
வீக்கெண்ட் கொஞ்சம் பிசி,
அதான் வர முடியலை

நிரூபன் சொன்னது…

50வது கல்யாண நாள் காமெடி செம கலக்கல் பாஸ்..

15வது குழந்தை செம காமெடி பாஸ்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இன்றைய சிந்தனையும் அருமை.

நூறாவது பர்த்டே சிகரட் மூலமா கொண்டாடுறாங்களோ...

அவ்வ்வ்வ்வ்

M.R சொன்னது…

காமடியும் சிந்தனையும் அருமை நண்பரே

மாலதி சொன்னது…

சிந்தனை அருமை50வது கல்யாண நாள்அருமை .