சனி, செப்டம்பர் 03, 2011

வாய்க்கொழுப்புன்னா இது தானா அண்ணே !!?

குப்புவோட வீட்டுக்காரம்மா முட்டை பொரியல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க,  திடீர்ன்னு சமையல் கட்டுல நுழைஞ்ச சுப்பு

"பார்த்து பார்த்து, கொஞ்சம் எண்ணை நிறையா ஊத்து, வெங்காயம் கருகுது பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்து. கொஞ்சம் கிளறி விடு. உனக்கு என்ன காதே கேக்காதா அங்க பாரு முட்டை ஆங்கங்க கெட்டியா இருக்கு பாரு அதையெல்லாம் உடைச்சிவிடு. என்ன பண்றே உப்பு போடலை கொஞ்சம் நிறையா போடு, இல்லாட்டி வாயிலேயே வைக்க முடியாது.. "  முட்டை பொரியிறத விட ரொம்ப பொரிஞ்சாறு..   

"இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி வாய் மூடாம கத்திக்கிட்டு இருக்கீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனக்கு முட்டை  பொரியல் பண்ண தெரியாதுன்னு நெனச்சீங்களா?"

"ஒண்ணும் இல்ல நான் கார் ஓட்டும் பொது நீ என்ன செய்யிறயோ அதை தான் நான் இப்ப செஞ்சு காட்டினேன்" அப்பிடின்னாரு சிரிச்சுக்கிட்டே

========================================================================

ஒரு நாளு சுப்பு ரோட்டுல நடந்து போய்க்கிட்டு இருந்தாரு,

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மேல் செங்கல் விழுந்து இறந்து போவாய்" - எங்கோ இருந்து வந்த குரலைக்கேட்டு அங்கேயே நின்றார்

அது போலவே ஒரு செங்கல் அவர் முன் விழுந்தது

கொஞ்ச தூரம் நடந்தார் திரும்பவும்

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் மேல் ஒரு கார் இடித்து இறந்து போவாய்"  அங்கேயே நின்றார் சுப்பு

சொன்னது போலவே ஒரு கார் அவரை கடந்து சென்றது

"யார் நீ? எங்கிருந்து  பேசுகிறாய்?" சுப்பு கேட்டார்

"நான் உன் காவல் தெய்வம் உனக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் உன்னை எச்சரித்து காபாற்றவே இருக்கிறேன்"

"இப்ப எல்லாம் காப்பத்துன நீ என் கல்யாணதப்ப எங்கே இருந்தே ஏன் என்னை எச்சரிக்காம போனே?"

"அப்போதும் நான் இப்பிடி தான் கத்துனேன், ஆனா உனக்கு தான் காது கேக்கலை"

========================================================================

சுப்பு காதுல மாட்டுற ஹியரிங் எய்ட் வாங்கணும்ன்னு கடைக்கு வந்தாறு

"ஹியரிங் எய்ட் எவ்வளவுப்பா?"

"பத்தாயிரம் ரூவா ஸார்" கடையில இருந்த பையன் சொன்னான்

"ஒண்ணும் கேக்கலை"

பையன் கொஞ்சம் சத்தமா "பத்தாயிரம் ரூவா ஸார்"

"கொஞ்சம் கம்மியா கெடைக்குமா?"

"சரி ஒரு நூறு ரூவா குடுங்க"

பையன் ஒரு ஹியரிங் எய்ட் மாதிரியே ஒண்ண எடுத்துட்டு வந்து "இதை காதுல மாட்டுங்க அப்புறம் இதை பேன்ட்-ல வைங்க"

"இது நல்லா வேலை செய்யுமா?" சுப்பு கேட்டாரு

"இது வேலையே செய்யாது, ஆனா இத பாக்குறவங்க  உங்ககிட்ட கொஞ்சம் சத்தமா பேசுவாங்க உங்களுக்கு கேக்கும்"  அப்பிடின்னான் கொஞ்சம் சத்தமா..

========================================================================

ஒரு நாளு ஒரு ட்ராஃபிக் போலீஸ் ஒரு மறைவான எடத்துல இருந்து போற வர்ற வண்டிய எல்லாம் நோட் பண்ணிக்கிட்டே இருந்தாரு, எவனாவது ஓவர் ஸ்பீட்-ல போன, ட்ராஃபிக் ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ண நிறைய காசு பாக்கலாம்ன்னு ஒரு நப்பாசை

அன்னைக்கு அவருக்கு கெட்ட நேரம் எல்லோரும் சரியா வண்டி ஒட்டிக்கிட்டு போனாங்க. போலீஸ்க்கு குழப்பம், இங்க நம்ம   மறைஞ்சி தானே நின்னுக்கிட்டு இருக்கோம் எப்பிடி எல்லோரும் சரியா வண்டி ஒட்டுராங்களே அப்பிடின்னு

ஒரு மணி நேரம் ஆச்சு ரெண்டு மணி நேரம் ஆச்சு ஹுகூம் ஒரு கேஸ் கூட மாட்டுற மாதிரி தெரியல, ஏதோ தப்பு நடக்குதுன்னு மட்டும் தெரிஞ்சது, சரி என்னானு பாக்கலாம்ன்னு வெளியே வந்தாரு. வந்தவருக்கு அதிர்ச்சி 300 அடிக்கு முன்னாடி
" ட்ராஃபிக் போலீஸ் உஷார் " ன்னு போர்டு வச்சுக்கிட்டு ஒரு பையன் நின்னுக்கிட்டு இருந்தான், அந்தப்பக்கம் பார்த்தா இன்னொரு பையன் "செய்த உதவிக்கு உங்களால் முடிந்த்தது" அப்பிடின்னு ஒரு போர்டோட அவன் காலுக்கு கீழே ஒரு பை நிறைய சில்லறை..

எப்பூடி!!??
========================================================================

நல்ல குழந்தை தான் வீட்டிலும்,
நல்ல மனைவி பக்கத்து வீட்டிலும்
இருக்கிறார்கள் என்று நினைப்பது
ஆணின் மனம்

========================================================================

எந்த ஒரு ஆணும்
தாய் நினைப்பது போல அழகாய் இருக்க வேண்டும்
பிள்ளை நினைப்பது போலே பணக்காரனாய் இருக்க வேண்டும்
பெண்டாட்டி நினைப்பது போலே ஒரு சின்ன வீடாவது இருக்க வேண்டும்
என்று நினைக்கிறான் ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை
என்பதை நினைக்க மறக்கிறான்
========================================================================

நீ அசிங்கமாய் இருக்கிறாய் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ முட்டாள் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ அறிவாளி என்று யாராவது சொன்னால்
அறைந்துவிடுங்கள்,  கேலி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு

11 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஹி...ஹி...ஹி...

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஹா.ஹா.ஹா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடே என்ன கோமாளி செல்வாவை ஓவர் டேக் பண்ணுற மாதிரி இருக்கே.....சூப்பர்....!!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஹா....ஹா.... இன்னமும் சிரிச்சுட்டு இருக்கேன்

மகேந்திரன் சொன்னது…

சிரித்தேன் ரசித்தேன்

கோகுல் சொன்னது…

நீங்க ரொம்ப அறிவாளிங்க!அய்யய்யோ அடிச்சுடாதிங்க!

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த சுப்பு நீங்க தானோ...

உணவு உலகம் சொன்னது…

கதைகள் + டுவிட்ஸ் ஜோராச்சொல்லியிருக்கீங்க.

Unknown சொன்னது…

மாப்ள கலக்கிபுட்டீங்க ஹிஹி!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

சிரிப்பும்,சிந்திப்பும்...

நிரூபன் சொன்னது…

தத்துவங்களோடு கலந்த சூப்பரான நகைச்சுவைகள் பாஸ்,.